Monday, March 11, 2013

கடல்


sea animated photo: animated 671045370.gif

 கடல் தான்  உனது பெயரோ காவியமும் படைத்தாயோ  
சுனாமி என்பதும் நீ தானோ 
நம் உறவுகள் எல்லாம் உன் வலையில் 
சிக்கிக் கொண்டது நிஜம் தானோ
வலையை விரிப்பது நாம் தானே 
நீ ஏன்விரித்து வதைத்தாயோ   

நீ பேரழகு என்று சொன்னாரே பெருமளவில் வந்து கண்டாரே 
காவிய நாயகன் என்றாரே கதைகள் பலவும் சொன்னாரே 
வளங்கள் நிறைந்தது என்றாரே வள்ளல் என்றும் சொன்னாரே 
ஆழ்கடல் சென்று வந்தவர்க்கு வெகுமதி தந்ததாய்  சொன்னாரே 
தஞ்சம் என்று வந்தவரை தாங்கிக் கொண்டாய் என்றாரே 

கரையினில் நின்று கால் நனைத்தால் கவலை எல்லாம் 
தீரும் என்றார் கவிஞர் சொன்னது பொய் தானே எல்லாம் 
கட்டுக்கதை தானே நீ நய வஞ்சகன் என்பது மெய் தானே 

உன் மடியினில் தவழ தவித்தவரே உன் அணைப்பினில் 
கிடந்து துடித்தனரே பகைவரையும் நீ மிஞ்சி விட்டாய்
படு கொலைகள் செய்து விட்டாய் படைத்தவன் கேட்பான் 
பதில் சொல்லு விதியென நீயும் விடை சொல்லு 
பழியினை அவன் மீதே போடு விளையாடிடுவான் உன்னோடு 

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.