Saturday, March 30, 2013

நாவினால் சுட்ட வடு

கொல்லாதே சொல்லாலே நல்லால்லே நல்லால்லே 
நல்லவரே வல்லவரே பொல்லாப்பு வேண்டாமே 
நாவினால் சுட்ட வடு ஆறாதே ஆறாதே 
நயம் மிக்க சொற்கள் நற்றமிழில் ஏராளம் 

கருத்து சொல்ல வேண்டும் என்றால் 
வாழ்ந்து பாரு அவ்வாழ்வை வாழ்ந்தாலும் புரியாது 
வாழ்க்கைகள் வேறு வேறு வரும் துன்பம் வேறு 
சூழ்நிலைகள் வேறு வேறு மனநிலைகள் வேறு

பத்து ரூபாய் கடன்  என்றால் பதறிடுவான் ஒருவன் 
பத்து லெட்சம் பெற்றவனோ  புன்முறுவல் புரிவான்  
இவர்களுக்கு மனநிலைகள் ஒன்றோ 
துன்பத்தில் படிநிலைகள் உண்டோ  

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்
வீணாக வார்த்தைகளை விரயம் செய்வதுவோ 
வேண்டியவரை எல்லாம் வேதனையில் ஆழ்த்துவதோ 
பார்த்ததுபோல் எதையும் அளப்பதுவும் நன்றோ   

ஆண்டவனும் வாழ்ந்து பார்க்க வையகம் வந்தான் 
சோதனைகள் சூழ்ச்சிகளும் கண்டான் 
துயரங்கள் பிரிவினைகள் கொண்டான் 
அவன் மனநிலையும் எங்களுக்கு வருமோ 
அவன் சக்திகளும் எங்களுக்கு உண்டோ 

அணுஅணுவாய் அனைத்தையும் அனுபவித்தான் 
வையத்தின் சுடுசொல்லால் வைதேகி பிரிந்து சென்றாள் 
வலிமை கொண்ட ராமனுமே  சோகத்தில் வீழ்ந்தான் 
மனம் வெறுத்து போனானோ மீண்டும் அவன் வரவில்லை 
மறுபடியும் வருவானோ பூமியிலே யாரறிவர்   

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.