Thursday, March 14, 2013

பாமாலை



 This is a image of Lord Vishnu standing on lotus, orange and yellow color

 கண்ணா கண்ணா  கண்ணா கண்ணா 
நான் உன்னோடு தான் உரையாட வேண்டும் 
ஒரு கோடி ஜென்மங்கள் உயிர் வாழவேண்டும் 
உன் தாளில் சரணாகதியாக வேண்டும் 
பாமாலை தினம் சூடி மகிழ்வூட்ட வேண்டும் 
பூமாலை சூடி அழகூட்ட வேண்டும் 

அன்றாடம் திருப்பள்ளி எழுச்சி நான் பாடவேண்டும் 
அதிகாலை விளக்கேற்றி ஒளியூட்ட வேண்டும் 
உன் பூஜைக்கு மலராக உரு மாற வேண்டும் 
உதிர்ந்தாலும் வாடாமல் வரம் வாங்க வேண்டும் 
வகைவகையாக செய்தமுதூட்ட வேண்டும்
உன் பத்தினியின் கனிவும் கிட்டிட வேண்டும்
கலையாத நல்லறிவு பெற்றிட வேண்டும் 

உன் நிழலிலேயே இளைப்பாற வேண்டும் 
உன் அருகிலே தான் நான் கல்லாக வேண்டும் 
தினமும்  அதில் உன் பாதம் பதிந்திடவும் வேண்டும் 
  உன்னத நிலையினை அடைந்திடவும்  வேண்டும்
உண்மை நிலை நீயும் பறை சாற்ற வேண்டும்  

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.