Friday, February 27, 2015

துணையை தேடி நான் தொலைந்தும் போகேன்

Thanks for the image
 கைகள்  கோர்த்து 
காலம் முழுவதும் 
 கண்ணுக்குள்ளேயே 
இருந்து விடலாமா
நேரம் போவது தெரியாமல் 
பெண்ணுக்குள் தோன்றும் புதிராய்
மண்ணுக்குள் தோன்றும் மரமாய்
விண்ணுக்குள் தோன்றும் வரமாய்.
பண்ணு க்குள் தோன்றும் பரவசமாய்.

RESİMLER
Thanks for the image
நீ எனைத் தாங்க
நானும் உனைத் தாங்குவேன் 
என் உள்ளங்கையில் வைத்து
உயிரிலும் மேலாய் என் உயிர் 
உள்ளவரை உலகே

Graphics » Christmas birds Graphics
Thanks for the image
.

 மோதிப் பார்ப்பதால்  பாதிப்பு தான் அதிகம்
வாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே
பூரிக்கும் படியாய்
நாம் என்ன மனிதர்களா 
மாற்றிப் பேசி மனம் நோக வைக்க 
என்ன நான் சொல்றது

.
Thanks for the image

பனியில் நனைந்தாலும்
துளியும் நிறம் மாறேன்
தனியே  கிடந்தாலும்
தளர்ந்து நான் போகேன் 
துணையை தேடி நான் 
தொலைந்தும்  போகேன்
(என்கிறது இந்த சிவப்பு ரோஜா ) 


வலையுறவுகளுக்கு வணக்கம் தயவு செய்து மன்னிக்கவும் நான் மீண்டும் வரும் வரை எனை மறவாதிருக்க இது ம்..ம்.. அப்புறம் புதிய நபர் என்றல்லவா எண்ணுவீர்கள் அது தான். நன்றி ! 
யாரு முணுமுணுக்கிறது. திட்டாதீங்கப்பா  ப்ளீஸ். 





Sunday, February 1, 2015

பாயும் புலியும் கேட்டால் பதுங்கி தானே கிடக்கும்

 

 ஆயர்பாடி கண்ணா வலை
மோதுகின்ற நெஞ்சா
காலை மாலை எல்லாம் 
அக்கன்னியர்கள் பின்னால்
 உன் மோனகானம் கேட்டு அவரும்
 மடியில் தஞ்சம் புகுவார் 

தூயநெஞ்சில் அந்த ராதை 
குடியிருந்து கொள்வாள்
கண்ணில் காதல் கொண்டே அவளும் 
மண்னை வாழவைப்பாள்
அவள் எண்ணம் முழுதும் உந்தன் எழிலில் 
லயித்துக் கிடக்கும்  உம்கவனம் முழுதும் 
எம்மை காத்துத் தானே  கிடக்கும்

மாயக் கண்ணன் உன்னைக் காண 
மயிலும் வந்திருக்கு இசைகானம் 
கேட்டுத் தானும் ஆடிக் களிக்க வென்று  
கூடிக்களிக்கும்  உந்தன் குலவு கவிதை கேட்க 
பேசும் கிளியும் பறந்துவந்து 
பக்கம் நின்று  பார்க்கும்
பாடும் குயிலும் உமையே 
பாடத்தானே துடிக்கும்
காடும் மலையும் உம்தன் 
காலடியில் தானே கிடக்கும்

 காயம் முழுதும் உந்தன் கானம் 
கேட்டு  சிலிர்க்கும்  
பாயும் புலியும் கேட்டால் 
பதுங்கி தானே கிடக்கும் 
ஓடும் நதியும் கேட்டு உறைந்து 
போகும் கண்ணா

ஓரறிவு உள்ள  மரமும் 
உமையே உருகி உற்று நோக்கும்
வேணு கானம் கேட்க
அந்த விதையும் எழுந்து நிற்கும்  

சாயவேண்டும் நானும் உந்தன் 
நிழலில் தானே கண்ணா
கோபம் கொள்ள வேண்டாம் 
உன் குழந்தை தானே நானும்
 என் பாவம் முழுதும் தள்ளு
உனைக் காண வேண்டும் நில்லு

எண்ணும் போது உனையே  நான் 
எளிதில் அடைய வேண்டும்
 உருகி என்றும் உமையே  

நானும்  பண்ணில் பாடவேண்டும்
 நினைவில் தோன்றும்  உந்தன்காட்சி
 கண்ணில் நிறைய வேண்டும்