Thursday, March 7, 2013

தனிமை

 
தனிமை அது கொடுமை 
துயர் கொள்ளும் வெறுமை
பகைவருக்கும் வரவேண்டாம் இந்நிலைமை
துன்பம் வந்தால் சொல்லி அழ வேண்டும் 
மகிழும் போதும் பகிர்ந்து கொள்ள வேண்டும்  
 இதை தலை விதியே  நிர்ணயிக்க வேண்டும்  

 நாம் தெரிவு செய்ய என்ன இது தேர்தலா 
தெரிந்து கொள்ள இதுவும் என்ன திண்மமா
வடிவமைக்க ஒன்றும் இது வண்ணமில்லையே 
வாடி நின்ற போதும் வருந்திடவே வேணும் 
குழந்தை பருவத்திலே வரும் தனிமை 
வளரும் போது பழகிவிடும் போக 

வாலிபத்தில் வரும் போது 
தவித்துவிடும் இளமை முதுமையிலே
தனிமை மறுகி மனம் முறுகும் நோய் நொடிகள்
வந்துபோக நொருங்கிவிடும்  இதயம்
 கலைஞருக்கும் கவிஞருக்கும் தனிமை 
ரொம்ப பிடிக்கும் ஆக்கங்களை படைப்பதற்கு 
அருமையான தருணம் அவை 
 படிப்பதற்கும் நடிப்பதற்கும் பெரும் பங்கு வகிக்கும்   

பக்தி முத்தி வரும் தனிமை 
இனிமை காணக்கூடும் 
இறைவனடி சேர்வதற்கும் 
வழி சமைத்து பாடும்  

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.