Tuesday, January 20, 2015

வாசகர்களாக மட்டுமே வாழாமல்



நன்னெறியில் இருந்து

பெருக்கமோடு சுருக்கம் பெற்ற பொருட்கேற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் -இரக்கம்
மலையளவு நின்றவெழில் மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.

கருத்து :-
அறிவு நிறைந்த மேலோர்கள் தம் செல்வ நிலைக்கேற்ப அன்போடு பிறருக்கு உதவுவார்கள்.

வணக்கம்! வலையுலக மக்களே!

இப்பாவுக்கு ஏற்ப நம் மதிப்பிற்குரிய திரு. ரூபன், திரு. யாழ்பாவாணன் அவர்கள் இருவரும் இணைந்து தமிழை வளர்க்க அரும்பாடு படுவது யாவரும் அறிந்ததே. போட்டிகளை தொடர்ந்து நடத்தி வரும் இவர்கள். எழுத்தார்வம் மிக்க அனைவரையும் மேலும் ஊக்கப்படுத்துவதும்.  நாங்கள் எல்லாம் எங்கே எழுதப் போகிறோம் என்று எண்ணி ஏங்குபவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பதுவும் தான் அவர்களது நோக்கம்.
எனவே வாசகர்களாக மட்டுமே வாழாமல், எண்ணக் கருவை எல்லாம் எழுத்தில் வடிக்க முடியுமா என்று ஏங்குவதை விட்டு விட்டு முடியுமா என்று சிந்திப்பதையும் சில நிமிடங்கள் நிறுத்தி விட்டு முயன்று தான் பாருங்களேன் ஒரு முறை. ம்..ம்..ம்.. பலமாக யோசிக்க துவங்கிவிட்டீர்கள் இல்லையா? நல்லது? உங்களை பாதித்த விடயங்கள் பல இருக்கலாம் இல்லையேல் உங்களுக்கு தெரிந்தவர்களோ நண்பர்களோ பாதித்த போது பார்த்து இருக்கலாம் அவற்றை கூட  நீங்கள் பதியவைக்கலாம். உங்களுக்கே தெரியாமல்  உங்களுக்குள் ஆற்றல் ஒளிந்திருக்கலாம்.அவ்வாற்றலை எல்லாம்  குடத்துள் விளக்காய் குன்ற விடலாமோ? நாட்கள் நெருங்கி விட்டதல்லவா? எனவே அருமையான இச்சந்தர்ப்பத்தை  நழுவ விடாமல்  அனைவரும் பங்குபற்றி உலகளாவிய  இப்போட்டியை சிறப்பிப்பதோடு நீங்களும் பயனடைந்து சிறப்படையுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆற்றுப் பெருக்கற்ற போதும் அலுக்காது
கற்றறிவு இல்லாக் கடலும் கலங்காது
வெட்ட வெளியினில் கொட்டும் மழையாவும்
முட்டக் கொடுக்கும் பிறர்க்கு!  

மேலதிக விளக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்
    http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html

 மிக்க நன்றி!

Monday, January 12, 2015

உயிரிலும் மேலாய் உணர்வத னாலோ


அன்னையே எந்தன் அடைக்கலம் நீயே
அகமகிழ் வேன்நான் அணைத்திடு தாயே
உன்னையே எண்ணி உருகுவ தேனோ
உயிரிலும் மேலாய் உணர்வத னாலோ

என்னையே தருவேன் நின்அருள் தாராய்
எத்தனை பிறவி எடுத்திடும் போதும்
உன்னையே தாயாய் பெற்றிட வேண்டும்
உதவிடு நானும் உருகிடு வேனே

                                                   
  வலையுறவுகள் அனைவருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கிடப் பொங்கும் வாழ்வில்
மங்கலம் நிறைந்திட வேண்டும்  
தங்கிடும் செல்வம் தளைத்திடவே    
இனிய உறவுகள் வாய்த்திட வேண்டும்
இன்பம்சூழ தங்கம்போல் தரமாய் 
என்று மனமார வாழ்த்துகிறேன் !

பொன்னையே நிகர்த்த பொற்றமிழ் தன்னை
பெற்றிட நானும் பெருந்தவம் செய்வேன்
கண்ணினைப் போல கருதிடு வேனே
கவிவரம் வேண்டிக் காத்திருப் பேனே

வெண்ணையயை  உருக்கி வார்ப்பது போல
வீணையை மீட்டும் விரல்களைக் காட்டும்
கண்களை  மூடிக் கொண்டே நானும்
கவிதைகள் புனைய சொற்றிறன் கூட்டும்

நின்னையே பேணி நெகிழ்ந்திட வாழ்த்து
நிம்மதி பெறுவேன் நீ உனில் ஆழ்த்து 
விண்ணையும் போற்றி வாழ்ந்திட உன்றன்
வித்தைகள் கற்றே வளர்ந்திட வாழ்த்து

தன்னையே உணர்தல் ஞானமென் பார்கள்!
தாயினி நீயே ! தகுவன தாயேன்!
விண்ணையும் பார்த்து  மண்ணையும் காத்து
வாழ்த்திடும் நீயே என்னையும் வாழ்த்து



பண்ணிய பாவம் போக்கிட  நாளும்
பாக்களை ஊற்றி வழிபட வேண்டும்
புண்ணியம் தேடி புறப்பட யானும்
பண்ணுடன் பாட அருளிடு வாயே

கண்ணியம் காத்துக் கவலைகள் தீர்த்துக்
காரிகை கற்கக் கவிதனை ஊற்று    
எண்ணிடு தாயே எழுந்தருள் வாயே
இன்னமும் ஏனோ தாமதிக் கின்றாய்   

நண்ணிய தில்லை நாயகன் நெஞ்சில்   
நாயகி நின்றே நர்த்தனம் ஆட
கன்றுகள் தாயைத் தேடுதல் போல
கண்திறந் துன்மடி வீழுதல் வேண்டும்
    
வெண்மையை விரும்பும் வாணியே தாயே   
வந்தனை செய்வேன் வரம்தர வாயேன்
திண்மையை பெறகண் திறந்திடு வாயே
திறம்பட  பாக்கள் புனைந்திட நானே         

எண்ணிய படியே எளிதினில் எழுத
ஏந்திடு வாயே ஏழையேன் எனையே
என்னையே மறக்க ஏற்பன செய்யும்
உன்னையே யன்றி ஒருவழி காணேன்

பொன்னையும் விரும்பும் புகழையும் தேடும் 
பூவினில் லென்கண்  பொருந்திடும் முன்னில்  
எண்ணிய செய்கை யாவிலும் நீயே
எளியனை ஆட்கொண்  டருளிடு தாயே !




Friday, January 2, 2015

ரொம்ப நாள் ஆசை

 
ரொம்ப நாள் ஆசை இன்னிக்கு 
தான் நிறை வேறியிருக்கு
மண்டையை போடுவதற்குள் 
நிறைவேத்தி வச்சிட்டியே சாமி
எவ்வளவு தாராள மனசுனக்கு.

  மற்றவங்களோட பொருளில ஆசை பட்டதற்கு இது தேவை தான் இந்த தண்டனை அப்பாடா ஒளிஞ்சுக்கிறதுக்கு ஒரு நல்ல இடம் கிடைச்சதால தப்பினேண்டா சாமி. இப்பிடியா என்னை மட்டிவிடுவே  நல்ல சாமிப்பா உன்னை நம்பினன் பாரு என்னை சொல்லணும் .
 
  
(எலியாருக்கும் கற்பனை வரும் இல்ல)

அப்பாடா எப்பிடியாவது இந்த இதயத்திலயாவது  
ஓடிப்போய் இடம் பிடிச்சிடனும்.
அட கடவுளே எங்கே போனாலும்
போராட்டமா இருக்கே இப்போ நீரோட்டமும்
தடுக்குதே. ஓஹோ  தலை எழுத்தை மாற்ற முடியாதோ   
விதியை வெல்ல யாரால் முடியும் ம்..ம்..ம்...