Thursday, August 15, 2013

சுடர் மிகு வடிவேலா





சுடர் மிகு வடிவேலா
இடர் நீங்க வருவாயா 
கடன் தீர்த்து விடுவாயா 
கடன் பட்டார் நெஞ்சம் தானே 
கனடாவில் யாவர்க்கும் 

  நல்லூர் வாழ் வேலவனே
 கருணைக் கடல் நீயல்லவா 
கடல் தாண்டி வருவாயா 
உடன் காண வருவாயா
கண்ணிமைக்கும் நேரமதில் 
காட்சி ஒன்று தருவாயா 
  
நீ விரைந்தோடி வரவேண்டும் நாம்
சௌபாக்கியம் பெறவேண்டும் நீ
இருக்கும் போது நிர்கதியா எமக்கு 
நின் தாளில் சரண் அடைந்தோம்
சாந்தி தர வாரும்  

ஈழத்தில் இன்னல்கள் 
இன்னுமே தீரவில்லை
இங்கெதற்கு வாறார் என்று 
பழி சொல்லப் போறார் ஐயா 
பழி சொல்லப் போறார் 
இடர் தீர்த்து  இன்பம் காண 
வழி சமைத்து வாரும் ஐயா 
வழி சமைத்து வாரும்

மயில் மீதில் ஏறி பழம் 
ஒன்று வாங்கிடவே 
உலகினையே சுற்றியவா 
பழம் பெற்றது அண்ணன் தானே
எனக்கில்லையே என்று 

கோபமாய் குன்றேறி 
ஆண்டியாய் நின்றவனே 
இத்தனை கோபம் நீ கொள்ளலாமா 
கோவிலில் நீ குடியிருக்க வேண்டாமா 
கொளுத்தும் வெய்யில் தனில் 
நின்று நீ தணிவாயா 

வாழ்வினில் ஒளி வீச அருள் வழங்கும் 
வல்லவனே உலகாளும் ஈசன் உத்தம புத்திரனே 
குமர குரு ஆனவனே குன்றிருக்கும்
இடம் எல்லாம் குவலயத்தில் நீ தானே

வேழ முகத்தான் தயவில் வள்ளி 
தனை மணந்தவனே  
கள்ளமில்லா உள்ளமதில் 
குடி கொள்ளும் நல்லவனே
கலங்கி நிற்கும் எம் நெஞ்சில் 
தெளிவு தனை தருவாயோ

எம் கறுமங்கள் யாவையுமே 
கரைத்து விட முடியாதோ
கண்ணீர் பெருகுவதை 
குறைத்து விட மாட்டாயோ
குறைத்து விட மாட்டாயோ










Saturday, August 3, 2013

வா நீ கலைவாணி



வா நீ கலைவாணி வா நீ கலைவாணி 
உன் பதமலர் போற்றிட வா வா நீ கலைவாணி 
கடைக் கண் பார்வை ஒன்று போதுமே 
என் கவலைகள் பறந்தோடிடுமே
வா நீ கலைவாணி வா நீ கலைவாணி 

நாவினில் நர்த்தனம் ஆடிட வா 
மனதில் இருள் அகன்றிட வா 
வீணையில்  நாதமாய்  ஒலிப்பவளே
வேதனை தீர்த்திட வா 
வேண்டியதை நீ தந்திட வா 
தணியாத என் தாகம் தணித்திட வா 
வா நீ கலைவாணி

ஏழு ஸ்வரங்களுக்குள் ஒளிர்பவளே 
மங்கள ரூபிணியே என் வாழ்வினில் 
ஒளியாய் வா என் இரு விழியாய் வா என் 
பேச்சிலும் மூச்சிலும் வா 
கனவிலும் நினைவிலும் வா
வா நீ கலைவாணி 

வெள்ளை தாமரையில் வீற்றிருப்பவளே 
என் சிந்தையில் அமர்ந்திட வா 
பூமாலை நான் சூட்டிடுவேன் உனக்கு 
பாமாலை புனைந்திட வருள் தா 
எழுது கோலாய் வா எதையும் 
எடுத்து இயம்பிட வா
உனை பாடிப் பரவிட வா 
போற்றி புகழ்ந்திட வா 
வா நீ கலைவாணி 

காலத்தால் அழியாது நெருப்பு காற்று 
மழையிலும் கரையாது கற்றவர்
 சபையிலும் சிறந்திடும் வெஞ்சமரிலும் 
வென்றிடும் வேதநாயகியே வா 
அச் செல்வம் எனக் களித்திட வா 
வா நீ கலைவாணி 

உன் பிள்ளையில் பிழை இருந்தால் 
பொறுத்திட ம்மா அன்னை என்ற பெயர் காத்திடம்மா 
கோபமதை நீ கொன்றிட்டு வா 
நான் துணிவு பெற நீ தணிந்து வா 
உளம் கனிந்து வா எனைக் காத்திட வா 
வா  நீ கலைவாணி அலைமகளே வா கலைமகளே வா 

ஊமையை பேச வைத்தாய் அன்று 
எனை உனையே பாடவைத்தாய் இன்று 
உன் பாதம் பணிய வைத்தாய் தாயே 
வா நீ கலைவாணி