Thursday, August 27, 2015

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

Image result for பலாப்பழம் images
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அது ஏன் எனக்கு மட்டும் விதிவிலக்கா... என்ன ?            ( பட உதவிக்கு  கூகிளுக்கு நன்றி !)



                     அன்னிக்கு ஒரு நாள் என் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வாசிகசாலைக்கு சென்றேன். தமிழ்நூல்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். அப்போது  ஒரு பகுதியில் அரைவாசிக்குமேல் இரண்டு மூன்று தட்டுகளில் தமிழ் புத்தகங்கள் அடுக்கி இருக்க கண்டு ரொம்ப ஆர்வத்தோடு எனக்கு பிடித்த புத்தகங்கள் இருக்குமா என்று தேடிப்பார்த்தேன் . அப்போது இரண்டு மூன்று நூல்கள் அகப்பட அதை எடுத்து வந்து வாசித்தேன். அதில்

கணக்குப் பண்ணுவோம் வாங்க .........என்று இருந்தது 

அட இதென்ன அப்படி என்ன கணக்குப் பண்ணப் போறாங்க என்று ஆர்வத்தோடு நானும் வாசித்து  பார்த்தேன். அட இது இப்ப ரொம்ப அவசியம் என்று  எனக்கு தோன்றிற்று உங்களுக்கும் தோன்றலாம். ஆனால் ஆச்சரியமாக இருந்தது. அது தான் பகிரலாமே என்று எண்ணினேன்.  அட அலட்டாம விடயத்திற்கு வா என்கிறீர்களா? சரி சரி   இதோ.....

அது வேறு ஒன்றுமில்லைங்க

பலாப் பழத்தை வெட்டாமலே எத்தனை சுளை இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அட இதெல்லாம் எனக்குத் தெரியாது  உங்களுக்குத் தெரியுமா? ம்..ம்..ம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

ஆனால் நம்ப viju அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

வெட்டாமலே அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள பழம் பெரும் கணித நூலான கணக்கதிகாரம் ஒரு வழி சொல்லியிருக்கிறதாம். இது விந்தை தானே ...

இதோ  கணக்குப் பண்ண  அதற்குரிய வெண்பா வேறு போட்டிருக்கிறார்கள்... 



''பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை !




ஒரு பாலாப் பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவு என்று
கண்டு பிடிக்கலாமா என்ற கேள்விக்கு பலாப் பழத்தின் காம்பு அருகில் உள்ள சிறு முட்களின் எண்ணிக்கையை   6  ஆல் பெருக்கி வரும் விடையை   5   ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.

அதாவது பலாப் பலத்தின் முற்களின் எண்ணிக்கை:   100
இதை 100*6=600 பின்பு   600-ஐ   5- ஆல் வகுக்க , வரும் விடையே சுளைகளின் எண்ணிக்கை யாகும்.

ஆச்சரியமாக இருக்கிறதா இல்லையா?  தெரிந்தவர்களுக்கு நிச்சயமா இருக்காது தெரியாதவர்கள் பரிசோதித்து பார்த்து சொல்லலாம்.

எனக்கு இங்கெங்கே கிடைக்கப் போகிறது. அதனால் தான் சொன்னேன். யாரவது  வீட்டு  முற்றத்தில் வைத்திருந்தால்  சுலபமாக கணக்கிடலாம். ஹா ஹா ....


Saturday, August 15, 2015

பொன்னும் பொருளும் எதற்கு?




Image result for babies images

அன்பும் அறனும் அணிகலன் ஆகுமெனில் 
பொன்னும் பொருளும் எதற்கு?

ஆடையைத் தேர்ந்தெடுத்[து ஆசையுடன் தான்அணிய
கோடையே  நன்றெனக் கூறு !

நடையழகும் பெண்ணின் உடையழகும் வெல்லும்
படையழகு பெற்ற படைப்பு!

ஈவும் இரக்கமும் இல்லையெனில் உன்வாழ்வு
மேவும் துயரை விரைந்து!

உலைகொதிக்கும் சோறுபோல் உள்ளம் கொதிக்க
நிலையிழந்தேன் துன்பம் நிறைந்து!

ஊளையிட்டு நின்றாலும்  உன்றன் உயிர்வினை
காலைத் தொடரும் கனத்து!

எல்லாம் அவன்செயல் என்றெண்ணி நீமுயற்சி
இல்லா  திருந்தால் இழப்பு!

ஏற்றம் பெறவேநீ என்றும் அருந்தமிழைக் 
கற்க முயன்று களி!

ஒருபொழுதும் தீமையை ஒட்டி நடவா[து] 
இருந்தால் இலையே இடர்  

ஓடும் நதியும் உறைந்திடும் காலமுண்டு!
ஆடும் அகத்தை அடக்கு!

கலைகளைக் கண்டுகளிக்கக் கண்ணிரண்டு போதா 
விலையிவைக் குண்டோ விளம்பு?

காலம் விரைந்திங்குக் காணாமல் போகிறது!
ஓலமிடும் முன்னே உணர்!

சாவும் வருவது சத்தியம் என்றிங்கு 
நோவும் உரைக்குதே நொந்து !

தாளம் அறியாமல் தானே பெரிதென்று
மேளத்தைத் தட்டுதல் வீண்!

வீட்டுக்குள் நல்லொளி வேண்டா திருந்தால்நம்  
கூட்டுக்குள் இல்லை கொதிப்பு!

சாடும் குணங்கள் சரித்திரத்தில் வேண்டாமே!
பாடும் பணிவைப் பருகு!

கோடிட்டு வாழக் குறையொன்றும் வாரா!நற் 
பாடிட்டு வாழ்தல் பயன்!





Thursday, August 13, 2015

பாவலர்க்கு ஒருவண்ணப் பூங்காத்து

  Image result for பூங்கொத்து image 
google படத்திற்கு என் நன்றிகள்.

வெண்பா வித்தகர்க்கு எல்லாம் ஒரு வண்ணப் பூங்கொத்து
என்ன பார்க்கிறீங்க, ஐய அப்பிடி பார்க்காதீங்கப்பா சும்மா தான் நானும் முயற்சி செய்து பார்த்தேன். அதுக்காக இனி இந்த வலைக்கே வரமாட்டேன் என்று எல்லாம் சொல்லக் கூடாது ok வா. கோச்சுக்காதீங்கப்பா அப்படி ரொம்ப தப்பு என்றால் நீக்கிவிடுகிறேன் இந்த deal ok தானே. அன்பு கூர்ந்து எல்லா வெண்பா வித்தகரும் வந்து வாங்கிகோங்கோ. 

இதை எழுதிவைத்து விட்டு நாலு, ஐந்து நாளாக வெளியிடலாமா என்று யோசித்து விட்டுத் தான் பின்னர் துணிந்து வெளியிட்டேன்.  தம்பிரானே என் தலையை காப்பாத்துப்பா. 

பாரதிதாசன் ஐயாவின் வெண்பா இலக்கணம் பார்த்து எழுதியது தான். பயிற்சியும் முயற்சியும் பலனளிக்காதா என்று எண்ணி எழுதிவிட்டேன் ஐயா. பிழைகள் இருந்தால் பொறுத்தருள்க. இருந்தால் நிச்சயம் நீக்கிவிடுகிறேன் மிக்க நன்றி ஐயா ....!  


குறள்வெண்பா!

வெண்பா மலர்பறித்து விந்தைக் கவிஞருக்கு 
கொண்டளித்தேன் அன்பொளிர் கொத்து! 

நேரிசை வெண்பா!

வெண்பா விருந்தளிக்கும் வித்தகர்க்கு இங்களிதேன்
ஒண்பாத் தமிழை உயர்வாக- கண்ணுக்குள் 
கொண்டொளிரும் இந்தப் பூங்கொத்து! 

இன்னிசைச் சிந்தியல் வெண்பா!

வெண்பா அழகெல்லாம் மேவி வியப்புறவே 
வண்ணக் கவிகள் வடிக்கின்ற ஆற்றல்மிகக்  
கொண்டவர்க்கு இந்தப்பூங் கொத்து!    

நேரிசை வெண்பா!


வெண்பா அளித்திங்கு வேர்மரபைக் காப்பாற்றும்
திண்மை எனக்கருள்வாய் செந்தமிழே!- வண்ணமுடன் 
பாவின் இலக்கணத்தை பற்றும் கவிஞர்க்குக்
கூவிக் கொடுப்பேன்பூங் கொத்து! 

 இன்னிசை வெண்பா!


வெண்பா எழில்கற்க வேண்டி தவமிருந்தேன் 
பண்பாய் பசுந்தமிழ் பாதம் தினம்தொழுவேன்
காலம் கனிந்தது கண்கள் கமழ்கின்ற 
கோலம் கொடுக்கும்பூங் கொத்து !


பஃறொடை வெண்பா!


வெண்பா விளையாட்டில்  வீறுகொண்ட வித்தகர்தம்
வண்ண வெழுத்தொன்றும் வாய்க்கவில்லை -என்றனுக்கு
என்றுமே  பைந்தமிழை ஏற்றுமிகக் கற்றிடவே
எண்ணித் துணியவில்லை ஏனோநான் -  என்மனத்து
மண்டிக் கிடக்கிறது மாதுயரம் மின்னுகின்ற 
குன்றாச் சுவையையும்  கொண்டுமனம் துள்ளவே
பின்னத் துடிக்கிறதே பெண்மனம்- இன்னமுதம்
என்றும் பருக இனிய தமிழ்அருள
என்னுள் கவிதை எழுந்தாடப் பாருக்குப்  
பொன்னால் தருவேன்பூங் கொத்து !