Saturday, March 30, 2013

நிலாவும் உலாவும்


 sea animated photo: Setting sun over the sea settingsun.gif



எட்டாத உயரத்திலே வட்ட நிலவோ
வந்து வந்து போவதினால் கிட்டவில்லையோ
வளர்ந்து தேய்ந்து போவதானால் வண்ண நிலவோ
பௌர்ணமியில் வருவதனால் பால் நிலவோ

திருமணத்தின் பின்னர் அது தேன் நிலவோ
கன்னக்குழி விழுவதென்ன கன்னத்திலா
உன் விம்பம் விழுந்ததென்தன்  கண்ணிலா
என் நினைவு தொலைந்ததென்ன   உன்னிலா

நீ கோபம் கொண்டதென்ன என்னிலா
உன் சீற்றம் தணிந்தது என்ன என் சொல்லிலா
உன் சிந்தை மகிழ்ந்ததென்ன அன்பிலா
என் கனவு மிதந்ததென்ன விண்ணிலா

உன்மதிப்பு உயர்ந்ததென்ன பண்பிலா
செல்வம் தவழ்ந்ததென்ன கையிலா
வானம் பொழிந்ததென்ன மண்ணிலா
கப்பல் கவிண்டதென்ன கடலிலா

சேலை விழுந்ததென்ன முள்ளிலா
சிலைகள் பொழிந்ததென்ன கல்லிலா
வீரம் வந்ததென்ன வில்லிலா      
வாழ்வு வந்ததென்ன பணிவிலா

சர்க்கரை கலந்ததென்ன பாலிலா
இன்பதுன்பம் வந்து போகும் வாழ்விலா
நிலவு மறைந்ததென்ன  முகிலிலா
முற்றும் துறந்து விடும் முடிவிலா  

நாவினால் சுட்ட வடு

கொல்லாதே சொல்லாலே நல்லால்லே நல்லால்லே 
நல்லவரே வல்லவரே பொல்லாப்பு வேண்டாமே 
நாவினால் சுட்ட வடு ஆறாதே ஆறாதே 
நயம் மிக்க சொற்கள் நற்றமிழில் ஏராளம் 

கருத்து சொல்ல வேண்டும் என்றால் 
வாழ்ந்து பாரு அவ்வாழ்வை வாழ்ந்தாலும் புரியாது 
வாழ்க்கைகள் வேறு வேறு வரும் துன்பம் வேறு 
சூழ்நிலைகள் வேறு வேறு மனநிலைகள் வேறு

பத்து ரூபாய் கடன்  என்றால் பதறிடுவான் ஒருவன் 
பத்து லெட்சம் பெற்றவனோ  புன்முறுவல் புரிவான்  
இவர்களுக்கு மனநிலைகள் ஒன்றோ 
துன்பத்தில் படிநிலைகள் உண்டோ  

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்
வீணாக வார்த்தைகளை விரயம் செய்வதுவோ 
வேண்டியவரை எல்லாம் வேதனையில் ஆழ்த்துவதோ 
பார்த்ததுபோல் எதையும் அளப்பதுவும் நன்றோ   

ஆண்டவனும் வாழ்ந்து பார்க்க வையகம் வந்தான் 
சோதனைகள் சூழ்ச்சிகளும் கண்டான் 
துயரங்கள் பிரிவினைகள் கொண்டான் 
அவன் மனநிலையும் எங்களுக்கு வருமோ 
அவன் சக்திகளும் எங்களுக்கு உண்டோ 

அணுஅணுவாய் அனைத்தையும் அனுபவித்தான் 
வையத்தின் சுடுசொல்லால் வைதேகி பிரிந்து சென்றாள் 
வலிமை கொண்ட ராமனுமே  சோகத்தில் வீழ்ந்தான் 
மனம் வெறுத்து போனானோ மீண்டும் அவன் வரவில்லை 
மறுபடியும் வருவானோ பூமியிலே யாரறிவர்   

Thursday, March 21, 2013

நின்றுவிடுமோ நின்றுவிடுமோ

பொங்கி வரும் கடலும்
புகுந்துவிடும் வெள்ளம்
பிளந்து வரும் நெருப்பு
வீசி வரும் தென்றல் நின்றுவிடுமோ நின்றுவிடுமோ

பிறந்து வரும் காதல்
பொங்கி வரும் பாசம்
நொந்து வரும் கண்ணீர்
மகிழ்ச்சி வெள்ளச் சிரிப்பு நின்றுவிடுமோ நின்றுவிடுமோ

வேங்கையின் வேகம்
குதிரைகளின் ஓட்டம்
குயில்களின் கீதம்
தோகை மயில் ஆட்டம் நின்றுவிடுமோ நின்றுவிடுமோ

குழந்தையின் அழுகை
கொண்டவனின் கோபம்
பயித்தியத்தின் தேடல்
ஆண்டவனின் படைப்பு நின்றுவிடுமோ நின்றுவிடுமோ

Wednesday, March 20, 2013

உலவுகின்ற நிலவோ

 sea animated photo: animated mer2.gif

உலவுகின்ற நிலவோ 
அருகினில் வருமோ 
என்னில் ஆசை கொண்டு விடுமோ 
காதில் காதல் சொல்ல வருமோ                

மின்னுகின்ற கண்கள் 
கொள்ளை கொள்ளுகின்ற அழகு 
அவள் சுவாசம் இன்னும் அழகு 
அதை கண்டு கொள்ளும் உலகு                   (உலவுகின்ற நிலவோ)  

மென்மையான பேச்சு என்னை 
மெய் சிலிர்க்க வைக்கும் 
அவள் சின்ன புன்னகை எந்தன் 
நெஞ்சில் பதிஞ்சு போச்சு                                 (உலவுகின்ற நிலவோ)  

தங்க கைகள் வீசும் அழகில் அதனை 
வருடி பார்க்க எண்ணும் 
இடையும் இல்லை போலும் அதனை 
கடையில் வாங்க கூடும்                                     (உலவுகின்ற நிலவோ)  

நடையும் நடனமாடும் பார்த்தால் 
கதகளியும் புரியும் உள்ளம் 
விண்ணில் உலகை மறந்து போகும்
ஆடை உடுத்தி மெல்ல அடி எடுத்து
வைத்தால் என் இதயம் நழுவி கீழே 
விழுந்து போகும் மெல்ல                                   ( உலவுகின்ற நிலவோ )    

மேனி நோகுமென்று தென்றல் 
மெல்ல விலகி போகும்  நானும்
கண்ணாடி பொம்மை போல உனை 
உள்ளங்  கையில் தாங்கி காப்பேன்                 ( உலவுகின்ற நிலவோ) 


Thursday, March 14, 2013

பாமாலை



 This is a image of Lord Vishnu standing on lotus, orange and yellow color

 கண்ணா கண்ணா  கண்ணா கண்ணா 
நான் உன்னோடு தான் உரையாட வேண்டும் 
ஒரு கோடி ஜென்மங்கள் உயிர் வாழவேண்டும் 
உன் தாளில் சரணாகதியாக வேண்டும் 
பாமாலை தினம் சூடி மகிழ்வூட்ட வேண்டும் 
பூமாலை சூடி அழகூட்ட வேண்டும் 

அன்றாடம் திருப்பள்ளி எழுச்சி நான் பாடவேண்டும் 
அதிகாலை விளக்கேற்றி ஒளியூட்ட வேண்டும் 
உன் பூஜைக்கு மலராக உரு மாற வேண்டும் 
உதிர்ந்தாலும் வாடாமல் வரம் வாங்க வேண்டும் 
வகைவகையாக செய்தமுதூட்ட வேண்டும்
உன் பத்தினியின் கனிவும் கிட்டிட வேண்டும்
கலையாத நல்லறிவு பெற்றிட வேண்டும் 

உன் நிழலிலேயே இளைப்பாற வேண்டும் 
உன் அருகிலே தான் நான் கல்லாக வேண்டும் 
தினமும்  அதில் உன் பாதம் பதிந்திடவும் வேண்டும் 
  உன்னத நிலையினை அடைந்திடவும்  வேண்டும்
உண்மை நிலை நீயும் பறை சாற்ற வேண்டும்  

Wednesday, March 13, 2013

ஆறு அறிவு

மனிதர்களும் மிருகங்களே 
பேசத் தெரிந்த உருவங்களே 
இரண்டு கால்கள் போதுமென்று 
நிறுத்தி விட்ட சுருவங்களே 

சிந்திக்கவும் தெரிந்தவர் தான் 
சிரத்தை எல்லாம் குழி பறிப்பதில் தான் 
ஆறு அறிவு கொண்டவர் தான் 
அல்லல் படுவதும் அதனால் தான் 

ஆழ்ந்த கருத்துகள் கொண்டிருந்தால் 
அன்பும் அதனுடன் கலந்திருந்தால் 
அமைதியாக வாழ்ந்திடலாம் ஆண்டவனின் 
அனுக்கிரகம் அதுவாக கிடைத்திடுமே  

அன்பு கொண்ட மனிதர்க்காய் 
சொர்க்கம் நழுவி பூமியிலே தானாக
விழுந்திடுமே அன்பினை அளந்திட
முடியாது அதிர்ஷ்டம் வருவதும் தெரியாது 

இன்பம் என்பது என்னவென்று இதுவரை
யாருக்கும் தெரியாது கானல் நீர் தான் எல்லாமே
அதை கடந்து செல்வதும் அறியாமை நீயும் நானும் 
விதிவிலக்கா இதுவே உலக வழக்கென்றும்  

Monday, March 11, 2013

கடல்


sea animated photo: animated 671045370.gif

 கடல் தான்  உனது பெயரோ காவியமும் படைத்தாயோ  
சுனாமி என்பதும் நீ தானோ 
நம் உறவுகள் எல்லாம் உன் வலையில் 
சிக்கிக் கொண்டது நிஜம் தானோ
வலையை விரிப்பது நாம் தானே 
நீ ஏன்விரித்து வதைத்தாயோ   

நீ பேரழகு என்று சொன்னாரே பெருமளவில் வந்து கண்டாரே 
காவிய நாயகன் என்றாரே கதைகள் பலவும் சொன்னாரே 
வளங்கள் நிறைந்தது என்றாரே வள்ளல் என்றும் சொன்னாரே 
ஆழ்கடல் சென்று வந்தவர்க்கு வெகுமதி தந்ததாய்  சொன்னாரே 
தஞ்சம் என்று வந்தவரை தாங்கிக் கொண்டாய் என்றாரே 

கரையினில் நின்று கால் நனைத்தால் கவலை எல்லாம் 
தீரும் என்றார் கவிஞர் சொன்னது பொய் தானே எல்லாம் 
கட்டுக்கதை தானே நீ நய வஞ்சகன் என்பது மெய் தானே 

உன் மடியினில் தவழ தவித்தவரே உன் அணைப்பினில் 
கிடந்து துடித்தனரே பகைவரையும் நீ மிஞ்சி விட்டாய்
படு கொலைகள் செய்து விட்டாய் படைத்தவன் கேட்பான் 
பதில் சொல்லு விதியென நீயும் விடை சொல்லு 
பழியினை அவன் மீதே போடு விளையாடிடுவான் உன்னோடு 

கடலலையே கடலலையே






 கடலலையே கடலலையே நீ தானா அது நீதானா நீ 
கொந்தளித்தது ஏனோ காயங்கள் கொண்டதனாலோ 
பேரழிவை செய்தது ஏனோ பெருமூச்சு நீ விட்டதனாலோ
கோபம் கொண்டது உனக்கழகோ காவு கொண்டது சரி தானோ 
நமை கலங்கடித்தது முறை தானோ நீ வரம்பு மீறிடலாமோ  
ஊருக்குள்  வந்தது ஏனோ அபலைகள் கண்களில் உன்னழகை 
கண்டு களித்திடத் தானோ உனக்கென உறவுகள் இல்லையோ 
நம் உறவுகள் உனக்கு தேவையோ தாய் மண்ணில் அவலங்கள் 
அறியாயோ கதறல்கள் உனக்கு கேட்கலையோ கண்களில் 
ஈரம் காயுமுன்னே கொள்ளை கொண்டது முறை தானோ 
பிஞ்சு நெஞ்சுகளில் கூட  வேலை பாய்ச்சி விட்டாயே 
நீங்காத துயரமதை நெஞ்சில் நிறுத்தி விட்டாயே 
கொடூரச் செயலை கேளாமல் திரும்பி பார்க்க முடியாமல்
திரும்பி  விட்டாய் நீ உன் பாட்டில் வருந்தவில்லையோ இன்னும் நீ 
வேதனை என்பதை அறிவாயோ விருந்துக்கென்று வந்தாயோ 
அத்தனை பசியா உனக்கு இது என்ன ராட்சச பசியா 
உன்னிடம் உள்ளதே உணவு அதை ஊருக்கு கொடுக்கும் மனசும் 
பின் அடுக்குமா இது உனக்கும்   

Sunday, March 10, 2013

காதலே கறுப்பா சிவப்பா


sea animated photo: animated 70010604.gif



காதலே காதலே எனை நீ தீண்டாதே 
என் கனவிலும் தோன்றாதே 

இது வேடிக்கையே  இல்லை 
இது விளையாட்டும் இல்லை 
நீ கறுப்பா சிவப்பா அறியேனே 
பொய்யா மெய்யா தெரியாதே 
நல்லதா கேட்டதா புரியவேயில்லை   (காதலே காதலே)
                                                                                       
காதலே காதலே உனக்குருவமும் 
உண்டோ சொல்லு உறைவிடம் 
எங்கணும் உண்டோ ஓடும் நதியில் 
இருக்கின்றாயோ இல்லை ஒதுங்க 
இடம் இன்றி தவிக்கின்றாயோ     (காதலே காதலே)    

பள்ளம் திட்டி பார்க்கின்றாயோ  
பரந்த உலகில் எங்கும் நீ  பறந்து திரிகின்றாயோ 
பார்வையினாலே பலரையும் கொன்று தின்கின்றாயோ
இல்லை பாவிகளிடம் சிக்கிக் கொண்டு பரிதவிகின்றாயோ 

ஆதியில் இருந்து அந்தம் வரைக்கும்
உன் பெயர்  அடிபடுதே காதலே காதலே 
பல சரித்திரம் படைத்தாயாமே  
காதல் சின்னம் கூட உனக்கு கட்டினாராமே       (காதலே காதலே)

ஆண்டான்  அடிமை என்றில்லாமல் ஆட்கொண்டாயாமே 
முற்றும் திறந்த முனிவரைக் கூட விட்டு வைக்க வில்லை நீ 
போரிலும் நீதான் வெல்வாயா புற முதுகிடவே மாட்டாயா 
வெற்றி மீது வருவாயா வீரம் சொல்லித் தருவாயா ( காதலே காதலே)

காதலே காதலே நீ சோகமா சுகமா சொல்வாயா 
சொந்த பந்தம்  உனக்குண்டா 
வாசம் செய்ய சுவாசம் உண்டா அதையும் சொல்வாயா 
சொற்பொழிவாற்ற சோகங்கள் உனக்குள்ளே உண்டா  ( காதலே காதலே)



குறைகள்

குறைகளையே பேசுவதால் நிறைவாரா  
நிறைகளையே கூறுவதால்   குறைவாரா  

Friday, March 8, 2013

சொந்தங்கள்

ஒரு பொழுது ஒரு பொழுது சாய்ந்திடத் தோன்றும் 
மறு பொழுது மறு பொழுது வாழ்ந்திடத் தோன்றும் 
வாழும் போது வரை முறைகள் தடுத்திடக் கூடும் 
வருவதையே வரவேற்று வாழ்ந்திட வேணும் 

சோகங்கள் சூழ்ந்தால் சொந்தங்கள் தொலைந்தால் 
சுந்தரம் வாழ்வில் உருவாகுமா நெஞ்சமும் 
புண்ணானால் கண்களும் குளமானால் 
சுற்றங்கள் நின்று சுகம் கேட்குமா கேட்டால் 
சோகங்கள்  எல்லாம் சருகாகுமா

வார்த்தைகள் வரவில்லை என்றால் வழி சொல்ல முடியுமா 
பார்வை இல்லையென்றால் நிறம் காட்ட தோன்றுமா 
பகுத்தறிவு இல்லை என்றால் பிழைக்கத்தான் முடியுமா 
காதில் ஓசை விழவில்லை என்றால் பாட முடியுமா 

சிற்பியில்லை என்றால் சிலைகள் தோன்றுமா 
இரவு இல்லை என்றால் நிலவு தோன்றுமா 
நேரம் இல்லை என்றால்  பொழுது போகுமா 
வாழ்வு இல்லை என்றால் வழிகள் பிறக்குமா 

கவலையில்லாத மனிதன் உலகில் இருக்க முடியுமா 
இருந்துவிட்டால் மனிதனாக வாழ முடியுமா 
துணிவுகள் பிறந்தால் துயரங்கள் பறக்கும் 
வாழ்கையின் அர்த்தங்கள் சொந்தங்களே 
வரும் துன்பத்தை எல்லாம் வெல்லுங்களே  


அம்மாவின் ஆசீர்வாதம்


 



அம்மா என்றழைப்பதிலே எத்தனை சுகம் 
அருகினிலே இருக்கையிலே எத்தனை பலம் 
அன்பினிலே தெரிகிறதே எத்தனை முகம் 
தினம் மனதார தந்திடுவார் ஆசீர்வாதம்     

ஊனினையே உருக்கியவர் உயிர் கொடுப்பார் 
உதிரத்தையே பாலாக்கி ஊட்டிடுவார் 
கண்ணின் மணி போல காத்திடுவார் 
தன்னலமே இன்றி அவர் பேணிடுவார் 

பெற்ற வலியினையே தாங்கி வலிமையாகிறார் 
பொறுமைதனைக்  கொண்டு பெருமை கொள்கிறார் 
கருணையே வடிவமாக காட்சி தருகிறார் 
தாயிற் சிறந்த கோவில் இல்லை என்று பேர் எடுக்கிறார்

துயரத்தின் சிகரத்தில் இருப்பார்  
குழந்தை முகம் பார்த்து அவர்  மறப்பார் 
அழும் போது தருவரே ஆறுதல் 
அணைப்பினிலே கிடைத்திடுமே தேறுதல்

குணத்தினிலே  ஒரு போதும் இல்லை ஒரு மாறுதல்
அம்மாவின்  இடத்தை இன்னும் நிரப்பவில்லை யாரும் 
அவர் அன்புக்கு ஈடு இணை எங்கேயும் இல்லை 
அவர் காலடியை தொழுதிருந்தால் போதும் 

நன்மைகளே தொடர்ந்திருக்கும் நாளும் 
அவர் பெருமை தனை பேச போதாது ஒரு யுகம் 
எவருக்கும் அதை எழுத காணாது மதியுகம் 
அவர்கள் செய்த தியாகங்கள் படைத்திடுமே பலயுகம் 



Thursday, March 7, 2013

தனிமை

 
தனிமை அது கொடுமை 
துயர் கொள்ளும் வெறுமை
பகைவருக்கும் வரவேண்டாம் இந்நிலைமை
துன்பம் வந்தால் சொல்லி அழ வேண்டும் 
மகிழும் போதும் பகிர்ந்து கொள்ள வேண்டும்  
 இதை தலை விதியே  நிர்ணயிக்க வேண்டும்  

 நாம் தெரிவு செய்ய என்ன இது தேர்தலா 
தெரிந்து கொள்ள இதுவும் என்ன திண்மமா
வடிவமைக்க ஒன்றும் இது வண்ணமில்லையே 
வாடி நின்ற போதும் வருந்திடவே வேணும் 
குழந்தை பருவத்திலே வரும் தனிமை 
வளரும் போது பழகிவிடும் போக 

வாலிபத்தில் வரும் போது 
தவித்துவிடும் இளமை முதுமையிலே
தனிமை மறுகி மனம் முறுகும் நோய் நொடிகள்
வந்துபோக நொருங்கிவிடும்  இதயம்
 கலைஞருக்கும் கவிஞருக்கும் தனிமை 
ரொம்ப பிடிக்கும் ஆக்கங்களை படைப்பதற்கு 
அருமையான தருணம் அவை 
 படிப்பதற்கும் நடிப்பதற்கும் பெரும் பங்கு வகிக்கும்   

பக்தி முத்தி வரும் தனிமை 
இனிமை காணக்கூடும் 
இறைவனடி சேர்வதற்கும் 
வழி சமைத்து பாடும்  

Sunday, March 3, 2013

கோபியர்கள்



Lord Vishnu with Laxmi mata, yellow and green color


 கோபியர்கள் கண்ணா கண்ணா 
எமை குழல் ஊதி மயக்குகின்ற வண்ணா 
எம் மீது கோபங்கள் ஆகாது கண்ணா
 பால் மனசு கொண்டவன் நீ யல்லவா 
நாம் படும் பாடு கண்டு நீ கொதிக்கவில்லையா
பாற்கடலில்  கடலில் தானே நீ பள்ளி கொண்டாய் 
உயிர்கள் பரிதவித்த போது ஏன் தள்ளி நின்றாய் 
விதி மீது பழி போட்டு ஒதுங்கி நின்றால்
நாம் வேண்டுவதின் பொருள் தான் என்ன கண்ணா
பின்னலை பின்னின்றிழுப்பவனே 
எமை பொம்மைகள் என்றா எண்ணிவிட்டாய் 
விளையாட்டுக்காகவே நீ செய்யுகின்றாய்
அது வேதனை எமக்கென்று விளங்கவில்லையா 
உன்னோடு தானே விளையாடுகின்றேன்  ஆனாலும் 
நீ ஒன்றும் என்னோடு விளையாட வேண்டாம் 
அதனை என்னால் தாங்க முடியாது   
ஆயர் பாடி கண்ணா 
அருள் தர உனக்கு மனம் இல்லையா
 அபயம் அளிக்க நீ வரவில்லையா
Lord Krishna Blinking Eyes

சுமந்துவிடு






பார்த்தசாரதி நீதானோ பரந்தாமா 
வரம்தர வருவாயோ இல்லை    
பாமகளின் பூமுகம் பார்த்து 
பூவுலகை நீ மறந்தாயோ 
தேவர்கள் தந்த அமுதினை உண்ட
மயக்கத்தில் இன்னும் உள்ளாயோ 
கர்மா என்பது என்ன கண்ணா
அதில் நாம் உழல்வது முறை 
தானோ சொல்லு கண்ணா
கீதையில் சொன்னது அதைத்தானோ
அதை அறியும் திறனோ எனக்கில்லை 
அறியாமல் தான் கேட்கின்றேன் 
விதி வழி தானே மதியும் 
போகும் என்று சொன்னாரே 
ஆடுவதும் நீ ஆட்டுவதும் நீ  
என்றும் சொன்னாரே என்றால் 
பாவம் செய்தது நீ தானே 
அதை சுமப்பதும் உன் தன் கடன் தானே 
இது ஒரு சுமை அல்ல உன்தனுக்கு
நீயே வந்து சுமந்துவிடு நாம் சுகம் காணவே    

Saturday, March 2, 2013

நகைசுவை

நகைச்சுவைகள் நகைப்பதற்கே அறிவாயா?
மனம் நொந்து அழுதிருந்தால் 
அது நகைசுவையா?