Saturday, October 25, 2014

திருடுவது தப்பில்லையா இதயங்களே ஆனாலும்

     
நிலைக்குமா இம்மகிழ்ச்சி 
நிலைத்தால் எதுவரை ?

நீ அழத் தொடங்கும் வரை

crying gif photo: Crying Fairy cartoon_354.gif
வாழ்வு ஏது வெந்து போனால்
தாழ்வு நீளும் நொந்து போனால்
அழவைப்பவரை 
அலட்சியம் செய் லட்சியம் வெல்ல



நகைப்பதற்கே நகைசுவைகள்  
நெஞ்சம் புகைந்தால்
சுவைக்காது பகைக்கும் 


   
 

உதிருங்கள் வார்த்தைகளை 
நெருடும்படியாக இல்லாமல் 
வருடும்படியாக 
அவை
வளர்க்கும் நல்லுறவுகளை 



 திருடுவது தப்பில்லையா 
இதயங்களே ஆனாலும்






Tuesday, October 21, 2014

தீபாவளியே வருக வருக

 வலை தள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்


தீபாவளியே வருக வருக
தீமைகளெல்லாம் விலக
தீபங்கள் எல்லாம் எரிக- அதில்
தீவினையெல்லாம் ஒழிக!

தேசங்கள் வாழ வருக-அதில்
நேசங்கள் நெய்திட வருக
ஆசைகள் அருகிட வருக-அன்பு 
பாசங்கள் பெருகிட விடுக

மோசங்கள் எல்லாம் தகர்த்து
வேசங்களையும் கலைத்து -நல்
வாசங்கள் வாழ்வினில் விதைத்து-பன்னிரு

மாசமும்  மகிழ்வினை நிறுத்து

வனத்தில் வாழும் மிருகங்கள்போல்
சினத்தில் வாழும் மனிதர்கள்-தலை 
கனத்தில்  மிகுந்து வாழ்பவர்தம் 
மனதில் இருளை அகற்று

மக்களையெல்லாம் திருத்திடு- நல்ல 
பூக்களாக மாற்றிடு -உயர்ந்த 
நோக்கங்கள் கொண்டிட வழிவிடு- நல்
ஆக்கங்கள் நல்கிட அருள் கொடு  

நிம்மதி எங்கணும் பெருகிட
சுபமங்கலம் எங்கும் பொங்கிட 
தீப ஒளியாய் வருக வருக
ஒளி வெள்ளம் எங்கும் பெருக



Saturday, October 18, 2014

வாழ்த்திட வாருங்கள் என் வலைதள உறவுகளே




அம்மாடியோ என்னால நம்பவே முடியலீங்க 
நூறு கவிதை போட்டுவிட்டேனா ?


வாழ்த்திட வாருங்கள் என்
வலைதள உறவுகளே
தாழ்ந்திடும் எண்ணம் தோன்றிடு
முன்னர் தடுத்திட வாருங்கள்

இன்னொரு நூறு கவிதைகளை
ஈந்திட வாழ்த்துங்கள்
பொன்னும்பொருளும் பொருந்தியபூமியில்
புன்னகை பூண்டிட வாழ்த்திடுங்கள்

மண்ணில் வளங்கள் செழிப்பது போல
மனமது செழிக்க வாழ்த்திடுங்கள்
கண்களிலே கார்காலம்
கண்டிட வேண்டும் வாழ்த்துங்கள்

பூக்களை போல பாக்கள் எல்லாம் 
சொரிந்திட வேண்டும் வாழ்த்துங்கள்-நல் 
நோக்கங்கள் நிறைந்த ஆக்கங்கள்
நல்கிடவே வாழ்த்துங்கள்

கண்களை போன்ற கருத்துகளை
களிப்புற தாருங்கள்
எண்ணங்கள் இனியது ஏந்திடவேண்டும்
 என்றே வாழ்த்துங்கள்

தேனினுமினிய கவிதைகள்
தெவிட்டாமல் தர வாழ்த்திடுங்கள்
மின்னிட வேண்டும் எண்ணங்கள்
 என்றே மிகையாய் வாழ்த்துங்கள்

புதுமையான கருத்துகளை
புகுத்திட வாழ்த்துங்கள்
பதுமைகள் போல வாழாமல்-அதை
  பரப்பிட வாழ்த்துங்கள்

பண்ணுடன் கூடிய பாடல்களை
தரவே பணித்திடுங்கள்
விண்ணும் என்னை வாழ்த்திடட்டும்- என்
 மண்ணும் மகிழ வாழ்த்திடுங்கள்!

வலைதள உறவுகளுக்கு வந்தனம் என் வரிகளை எல்லாம் ரசித்து நற் கருத்துகளை வழங்கி முழு ஆதரவு தந்து நூறு கவிதைகள் வரை  வளர்த்துவிட்ட பெருமை எல்லாம் தங்கள் அனைவரையுமே  சாரும். பல நாடுகளில் இருந்து பார்வையிடும் உறவுகளுக்கும், ஒத்துழைப்பு நல்கும்  என் குடும்பத்தினர்  அனைவருக்கும், ஊடகங்களுக்கும், முக்கியமாக itr.fm வானொலிக்கும், என்னுடன் பணிபுரியும்  நண்பர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தங்கள் வருகையையும் கருத்தையும் தொடர்ந்து நல்கி ஆதரவு வழங்க வேண்டும் என்று தாழ்மையோடு வேண்டுகிறேன்.







இழகிய குணங்கள்
அனைத்தையும் தன்னகத்தே
கொண்டவள்நீ 
அழகிய உலகிற்கே அதிபதி நீ 

அப்படி உன்னிடம் இல்லாதது என்ன  எம்மிடம்
இருக்கப் போகிறது என்று பார்க்கிறாய்.
ஓமனிதமா ...அது மரித்துவிட்டதோ
என்று பார்க்கிறாயா இன்னும் இல்லை தாயே
திரு முரளி திரு கரந்தை  ஜெயகுமார்
போன்றோர்களால் இன்னும் வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறது எனவே நிம்மதி கொள்ளம்மா !
 

நடு நிசியில் இந்த
நிலவுக்கு இங்கென்ன வேலை
  நீர்வீழ்ச்சியை ரசிப்பதாக
 தெரியவில்லையே!
வானோடு தகராறோ
இந்த வண்ண நிலவுக்கு
  வாழ்வை  மாய்க்க
வந்திருக்குமோ என்னமோ



எப்படி அந்த நிலவு
ஆடை அலங்காரம்
இன்றியே இவ்வளவு
அழகாக உள்ளது
நான் ஆடை தரித்தும்
அழகாய்  இல்லையே


இதுக்கெல்லாமா கிளாஸ் 
நடத்துவாங்க 
கடிச்சா என்ன செய்கிறது
திருப்பி கடிக்கவா முடியும்
அதனால இப்படித்
தாங்க சொறியனும் ஆனால்
ஜாக்கிரதைங்க உள்ள இருக்கும்
உறுப்புகள் கையோடு 
 வராம பாத்துக்கங்க. ஆனால் கொஞ்சம்
அப்பப்ப ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.



ஏன் இப்படி ஒளிகிறாய் ஓ ...வெட்கமா 
காதலன் வரும் நேரமா என்ன

பார்த்த விழி பூத்திடவே 
பார்த்திருக்கிறாய் 
வேர்த்திடவே விதி யெனவே 
வாழ்ந்திருக்கிறாய்
 கனியும் இந்தக் காதல் 
என்றா காத்திருக்கிறாய்
பனியிலும் மழையிலும்
தோய்ந்திருக்கிறாய்
தனிமையே துணையாக 
வீற்றிருக்கிறாய்

தவிக்கும் உன் இதயம் தளர்ந்திடும்
தாய்மை உணர்வில் மிதந்திடும் 
உன்தலைவன் வரவே மகிழ்ந்திடும் 
தரணியில் இதுவும் நிகழ்ந்திடும்


பாறைக்குப் பின்னால ஏன் ஒளிஞ்சிருக்கே?

எதிரிகள்  நடமாட்டம் அதிகம் அதனால யாராவது
வர்றாங்களான்னு பார்க்கத் தான் 

எதுக்கு?....
என் நாட்டை சூறையாடப் 
பார்கிறாங்க இல்ல அதனால  
 குண்டு போடத்தான்

Sunday, October 12, 2014

நான் நிலவோடு சங்கமிக்கப் போகிறேன்


 

நான் தனிமை தேடி வந்தேன். இயற்கையை ரசிக்கத் தான் ஆனாலும் உங்களை பார்க்கவே பிடிக்கவில்லை கலைந்து விடுங்கள் சீக்கிரம் சீக்கிரம்.

 

கொஞ்சம் பொறு ஸ்ஞானம் செய்துவிட்டு வருகிறேன்.


நான் நிலவோடு சங்கமிக்கப் போகிறேன் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா. 
ஏன் தண்ணீரை ஆட்டுகிறீர்கள் நான்  என் அழகை அல்லவா ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஓவியமாகவும் காவியமாகவும் படைக்கும் என்னை 
நான் ரசிக்கக் கூடாதா என்ன.

அம்மாடியோ எம்புட்டு தண்ணி 
எப்பிடியம்மா இதைக் கடந்து வருவேன் . 

என்ன பார்க்கிறீங்க இவை உங்களுக்கு தரப் போறது இல்லை.  இது எனக்கு
மட்டும் தான் சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க. என்னோடு பழகலாம் ஆனால் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

 

என்ன கவலையோ கண்களில் நீர் அருவியாய் கொட்டுகிறதே.

வட்டமிடும் பட்டாம் பூச்சி மகிழ்ச்சியில் கிட்டவில்லையே எமக்கு.
 கூட்டுக்குள் நாம்

.

 உன்னை விட எம் இளைய நிலா மேல் அவர் போல் நீ கவிதை வடிக்க மாட்டாயே.






Sunday, October 5, 2014

வெள்ளிப் பனிமலைகள் விண்ணில் - கடல் II



கடல் தானும் அழகு என்று
எண்ணி ஆடிப்பார்க்கும்
அலைஆளை பழகிமெல்ல
மெல்ல கொல்லப் பார்க்கும்

வித்தை தெரிந்த கத்தும் கடலும்
முத்துப் பவளம் சேர்த்து வைக்கும்
மூச்சடக்கி முக்குளித்தால்
முகமன் பார்த்து பரிசில் வழங்கும்
 
நீந்திச் செல்லும் கப்பல் தன்னை
ஏந்திச் சென்று கரையில் சேர்க்கும்
பாசவலையை வீசுவோர்க்கு
நேசமாக நிதிகள் நல்கும்

துள்ளி ஓடும் புள்ளி மான் போல்
நீந்தி மகிழும் மீன்கள் -கடல் 
நெஞ்சணைத்து தாயைபோல
கொஞ்சி விளையாடும்
 

காற்றும் மழையும் இல்லையென்றால்
கட்டுப்பட்டு சொல்லுக் கேட்கும் .-மனம்
மகிழ்ச்சியான தருணங்களில் கொந்தளிக்கும்
வீழ்ச்சியினை கண்டுகொண்டால் கொக்கரிக்கும்

ஆலிலை மீதமர்ந்து ஆள்பவனை
நீர்திவலைகள் தூவி பாராட்டும்-தன்மடியினில்
போட்டு தாலாட்டுப்பாடும் தூங்காமல் வாழும்
மேலோட்டமாக பூங்காற்று வீசும்

வானவில் வந்து வளைக்கரம் நீட்டும்
வரைந்திட எண்ணி நிறங்கள் தீட்டும்
ஊறுகள் இன்றி உயிர்களை காக்கும்
உண்மையை சொல்லி உயர்வினைச் சேர்க்கும்

வெள்ளிப் பனிமலைகள் விண்ணில்
விளைவதையே பார்த்து ரசிக்கும்-அதில்
அந்த வெண்ணிலவு துள்ளி மகிழ்ந்தாட
சேர்ந்து சிரிக்கும் கடல் தன்னைமறந்து  









Friday, October 3, 2014

ஆழமான எண்ணங்கள் அடி மனதில் கொண்டிருக்கும் - கடல் I

 

ஆழமான எண்ணங்கள் அடி
மனதில் கொண்டிருக்கும்
அறியாத பிள்ளை போல
அலைமோதிக் கொண்டிருக்கும்

ஆதவனை கண்டால்ஆனந்தம் பொங்க
அலைக்கரம் நீட்டி ஆர்ப்பரிக்கும்
விண்மீன்கள் புடைசூழ வெண்ணிலவு- வந்தால்
கண்கள் மூடாது கதை பலபேசும்

நீலவானின் நிறத்தைக் கொஞ்சம்
 வாங்கித்தன்னை போர்த்திக் கொள்ளும்
வானம் என்தன்  மானம் காக்கும்
என்று தன்னை தேற்றிக் கொள்ளும்

வானம் அழுதால் வையம் சிரிக்கும்
என்று எண்ணி தாங்கிக் கொள்ளும்
தன்னைக்காண விண்ணும் ஒருநாள்
மண்ணில் தோன்றும் என்றுமகிழும்

அடிவானம் தன்னை தொட்டுப்
பார்க்கவலை எம்பிஎம்பிக் குதிக்கும்
முயன்று பார்த்தும் முடியவில்லை
என்றுஎண்ணி ஏங்கித் தவிக்கும்

இருந்தும்கூட ஓயவில்லை 
இன்னும் அந்த அலையும் -தான்
கொண்ட எண்ணம் தன்னில்
நின்றும்  மாறவில்லை என்றும்
 

ஒருதலையாய் காதலிக்கும்-கடல்
ஒற்றுமையாய் வாழ்ந்திருக்கும்
தன்காதல் வெல்லும் என்று
எண்ணி காலம்எல்லாம் காத்திருக்கும்