Thursday, February 7, 2013

நீ இல்லை என்றால்




நீ இல்லை என்றால் நாமேது முருகா
உன் நினைவில்லை என்றால் வாழ்வேது
வேதனை என்ற ஒன்றில்லை என்றால்
மனிதம் இருக்காது வாழ்வும் சிறக்காது

வேடிக்கை தானே உங்களுக்கு
வேண்டியது தான் எங்களுக்கு வேலவனே
வேண்டியதை தர நீ இருந்தால்
கஷ்டம் தெரியாது உன் அருமையும் புரியாது

ஆற்றுப்பட நீ செய்தாலும்
ஆட்கொள்ள நீயே வரவேண்டும்
அந்த அருளினை எமக்கு தரவேண்டும்
முருகா கருணை கொண்டு நீ வரவேண்டும்

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.