Saturday, February 2, 2013

தமிழ் மொழி

தரணி எங்கும் தமிழ் இனம்

தமிழ் மொழி எங்கே காணோம்

என்றொரு நிலை வருமுன்னே

கட்டி காக்கணும் கண்ணே

பாரம்பரிய தமிழோ அது

பாதாளத்தில் விழுமோ

தமிழ் அருகி வருகிறதே

அது தமிழ் நாட்டிலும் தெரிகிறதே

அறிஞர்கள் கலைஞர்கள் தானே

மீட்டிட வேணும் முட்டி

கவிஞர்களும் கவி புனைந்திட

வேண்டும் பலவற்றை சுட்டி

ஆங்கில மோகம் தானே

தமிழ் அழிந்திட காரணமாமே

தமிழ் மேன்மை பெற்றிட வேணும்

மேம்பட வழி ஒன்று காணும்

நடையை மாற்றிட வேணும்

சுவையை கூட்டிட வேணும்

நகைச் சுவையுடன் அதனை ஊட்டி

காத்திட வேணும் பாட்டி

நம் வீட்டிலும் இது தான் நிலமை

நம் நாட்டுக்கும் இதுவே கடமை

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.