Monday, February 25, 2013

உன்னை நினைப்பினிலே

உன்னை நினைப்பினிலே வரிஞ்சிருக்கேன்
நித்திரையும் இழந்திருக்கேன் நான்
நெத்தியிலே வரைஞ்சிருக்கேன் நீ
நெஞ்சுக்குள்ளே நிறைஞ்சிருக்கே (உன்னை நினைப்பினிலே)

கண்ணாளன் காத்தாட மூச்சை
கொஞ்சம் இழுத்து விட்டேன்
கண்ணு எரியும் இன்னு ஒறப்பை
கொஞ்சம் கொறச்சுக் கிட்டேன்
இனிக்க வேணுமின்னு லட்டு
கொஞ்சம் சேர்த்துகிட்டேன் (உன்னை நினைப்பினிலே)

லட்ட கண்டதும் நீ எட்டிப் பார்க்க கூடாது
நெஞ்சறையை பூட்டி சாவியை மறந்து வச்சேன்
தொறக்க முடியாது தொந்தரவு செய்யாதே
தெத்தி பல்லை ஓடைச்சிடுவேன்

நான் மண்ணுக்குள்ள போகு மட்டும்
நீ நெஞ்சுக்குள்ளே இருக்கோணும்
நெத்தி பொட்டு அழியு முன்னர் நான்போய்
சேரோனும் அங்கேயும் காத்திருந்து
பூ விலங்கு போடோணும் (உன்னை நினைப்பினிலே)

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.