Saturday, August 3, 2013

வா நீ கலைவாணி



வா நீ கலைவாணி வா நீ கலைவாணி 
உன் பதமலர் போற்றிட வா வா நீ கலைவாணி 
கடைக் கண் பார்வை ஒன்று போதுமே 
என் கவலைகள் பறந்தோடிடுமே
வா நீ கலைவாணி வா நீ கலைவாணி 

நாவினில் நர்த்தனம் ஆடிட வா 
மனதில் இருள் அகன்றிட வா 
வீணையில்  நாதமாய்  ஒலிப்பவளே
வேதனை தீர்த்திட வா 
வேண்டியதை நீ தந்திட வா 
தணியாத என் தாகம் தணித்திட வா 
வா நீ கலைவாணி

ஏழு ஸ்வரங்களுக்குள் ஒளிர்பவளே 
மங்கள ரூபிணியே என் வாழ்வினில் 
ஒளியாய் வா என் இரு விழியாய் வா என் 
பேச்சிலும் மூச்சிலும் வா 
கனவிலும் நினைவிலும் வா
வா நீ கலைவாணி 

வெள்ளை தாமரையில் வீற்றிருப்பவளே 
என் சிந்தையில் அமர்ந்திட வா 
பூமாலை நான் சூட்டிடுவேன் உனக்கு 
பாமாலை புனைந்திட வருள் தா 
எழுது கோலாய் வா எதையும் 
எடுத்து இயம்பிட வா
உனை பாடிப் பரவிட வா 
போற்றி புகழ்ந்திட வா 
வா நீ கலைவாணி 

காலத்தால் அழியாது நெருப்பு காற்று 
மழையிலும் கரையாது கற்றவர்
 சபையிலும் சிறந்திடும் வெஞ்சமரிலும் 
வென்றிடும் வேதநாயகியே வா 
அச் செல்வம் எனக் களித்திட வா 
வா நீ கலைவாணி 

உன் பிள்ளையில் பிழை இருந்தால் 
பொறுத்திட ம்மா அன்னை என்ற பெயர் காத்திடம்மா 
கோபமதை நீ கொன்றிட்டு வா 
நான் துணிவு பெற நீ தணிந்து வா 
உளம் கனிந்து வா எனைக் காத்திட வா 
வா  நீ கலைவாணி அலைமகளே வா கலைமகளே வா 

ஊமையை பேச வைத்தாய் அன்று 
எனை உனையே பாடவைத்தாய் இன்று 
உன் பாதம் பணிய வைத்தாய் தாயே 
வா நீ கலைவாணி

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.