Friday, July 26, 2013

சொன்னது நினைவில்லையா





சொன்னது நினைவில்லையா
என் எண்ணங்கள் வரவில்லையா
விண்வெளி சரியில்லையா
விண் அலையினில் கலந்து

எழவில்லையா உன் கருத்தினில்
வந்து விழவில்லையா
ஜென்மம் முழுவதும் தேடணுமா
இன்னொரு ஜென்மம் எடுக்கனுமா

வேறொரு பெயரில் உள்ளாயா
வேறு வடிவம் கொண்டாயா இல்லை
இன்னொரு உலகம் கண்டாயா
விரைவில் நான்அங்கு வரலாமா

இறைவன் ஒருவன் இருப்பதையே
இருவருமே மறந்து விட்டோம்
அவன் அனுமதி அளிப்பானா நாம்
இணைந்திட விடுவனா

அடையாளங்கள் பேசலையே
எப்படி இனம் கண்டு கொள்வோம்
இன்னும் இஷ்டம் இருக்கிறதா
விழியில் விழுந்த என் விம்பம் மனசில்
விழவில்லையா மறுபடியும் என்னுடனே

வாழ்ந்திட மனசில்லையா
இல்லை என்றால் சொல்லிவிடு
என் இதயம் வெடிக்கும் முன்னாலே
இருந்தாலும் சொல்லிவிடு

இனிக்கும் இதயம் தன்னாலே
மல்லிகை பூ வாங்கிதந்து
மறுபடி வருவேன் என்றாயே
மனசு முழுவதும் நீதானே
மங்களமும் எனக்கது தானே

மாலையுடன் காத்திருப்பேன்
மடியும் வரை பார்த்திருப்பேன்
மறக்காமல் நீ வரவேண்டும்
மறுபடி வாழ்வு தரவேண்டும்

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.