Thursday, April 2, 2015

துடிக்கின்ற உள்ளங்கள் துயரங்கள் போக்கத் துளியன்பு தளிர் விடுமோ ?


Oyster animal graphics

மூடிடும் சிப்பிக்குள் முகிழ்த்திடும் முத்துக்கள்
       மழைசெய்த தவத்தின் பயனோ?
வாடிடும் பூவிற்குள் வாழ்ந்திடும் வித்துக்கள்
       வருங்கால விருட்சக் கனவோ?


தேடிடும் ஞானத்தில் தெய்வதம் கூடுதல்
      தெளியார்க்குக் காட்ட அருளோ? 
ஏடினும் காணாத சரித்திரப் பக்கங்கள்
      எம்மனிதம் இட்ட கொடையோ?
 



ஆடிய பாதங்கள் அன்பினில் விளைந்திட்ட
       ஆண்டவன் சதிர் நடையோ ?
தேடிடும் போதிலே திவ்விய தரிசனம் 

        தந்திடும் வள்ள மையோ?

இடியென வீழ்ந்திடும் இன்னல் மழையினில்
        இடர்தவிர் குடை யவனோ?

மடியினில் தவழும் மழலையின் மகிழ்வினை
        மறுபடி அருளு வனோ?

பிடியிடை கொண்ட மாதர்கள் மனங்கள்
        பிறைஒளி மதி தருமோ?
விடியலைத் தேட விழைகிறேன் பிணிக்கும்

        விலங்குகள் அறு படுமோ?
 

செடியினில் பூக்கும் பூக்களின் வாழ்க்கைச்
        சுதந்திரம் கை வருமோ?
துடிக்கின்ற உள்ளங்கள் துயரங்கள் போக்கத் 

        துளியன்பு தளிர் விடுமோ ?
 

வெடிக்கின்ற நெஞ்சத்தின் விம்மல்கள் எல்லாம்
        விலையற்றுப் போய்விடுமோ ?
நொடிந்திட்ட நிலையில் நிற்கின்ற இதயங்கள்
        நிம்மதி நிலை புகுமோ ?
 

கடிதென விலகும் காயங்கள் எல்லாம்
        கற்றிடும் பாடங்களோ ?

மடிந்திடும் போதும் மகிழ்வுடன் ஏற்கும்
        மலர்ச்சியின் பாடல்களோ? 

உள்ளுக்குள் சதிசெய்ய உதடுகள் சிரிக்கின்ற
        உன்னதர் வெறும் பதரோ?
முள்ளையே காட்டி உள்ளுக்குள் இனிக்கின்ற
       முதிர்பலா மனமுறுமோ?
 

துள்ளிடும் மீனுக்கும் நீருக்கும் உள்ளதே
        தோன்றுடல் உயிருறவோ?
எள்ளுவார் எள்ளட்டும்! ஏத்துவார் ஏத்தட்டும்!
         என்பதே என் நிலையோ?
 

வெள்ளத்தை ஏற்ற விதையினைப் போல -வாழ்வில்
        விடியல்கள் வந்திடுமோ?
கள்ளங்கள் -களைகள் கழுத்தினை நெருக்கக் - காரியம்
       சிறப்பாய் ஆகிடுமோ?

தள்ளாத வயதிலும் தவித்திடும் நிலையிலும் - தாங்க..தன்
       நம்பிக்கை துணைவருமோ?
புள்ளிகள் வைத்தவன் கோலங்கள் இடுகிறான் -
போகட்டும
       எனஎண்ணம் தோன்றிடுமோ?

Saturday, March 28, 2015

காற்றினில் கலந்தென் மூச்சினில் வரணும்



சாயி நாதா சரணம் சரணம்
சாயி நாதா சரணம் சரணம்
நின்சக்தி தனையே உணர்ந்திடும் நேரம்
நின்னருளினை எமக்கு அளித்திடு போதும் 

கண்களில் உள்ள கருணை தன்னை
காட்டிட வேண்டும் காலம் முழுதும்
எண்ணத்தில் மிதந்து எளிதினில் கடந்து
இறையன்பினை அடைந்திட அருளிடு சாயி

சங்கடம் தீர்த்திட சடுதியில் வரணும்
சர்வமும் நீயென சங்கே முழங்க
பொங்கிடும் மங்கலம் புரிதலும் தரணும்
பூவினில் அமைதி காத்திட வரணும்

வெற்றிப் பாதை காட்டி எம்மை 
வீழ்ந்தி டாமல்  அரவணை ப்பாயே 
பற்றிப் படர கொழு கொம்பாக 
பக்கம் நின்றே பணிசெய் வாயே

ஆற்றினைப்போல் நல்லெழி லினைத் தரணும் 
அற்றுப் போகா நிலைதனை விடணும்
தோற்றுப் போகத் தோன்றும்  நிலைமை
தொடர்ந்தி டாமல் தடைசெய் திடணும்   

காற்றினில் கலந்தென் மூச்சினில் வரணும்
கவலைகள் யாவும் கரைந்திட விடணும்
ஆற்றலை  வளர்த்து ஆறுதல் தரணும்
அல்லல்கள் அலறி ஓடிட வேண்டும்

உற்று நோக்கி உன்னத நிலையை 
உருவாக்கிடு போதும் உலகினில் நிலையாய்
பெற்றவர் களிப்புற அருளிடுவாயே நித்தியமாய்  
புறம்பேசி புண்ணாக்கும் நிலைஅருகிடவேண்டும் சத்தியமாய் 

குற்றங் குறைகள் குறுகிட அருள்வாய் 
குலவிளக்குகள் எங்கும் ஒளிர்ந்திட வருவாய்
ஊற்றெ டுக்குமன் புள்ளங்கள் 
உறையா  வண்ணம் காப்பாய்

சீற்றங்க ளின்றி சிரித்திட வேண்டும்
சிந்தனை  யாவும் சிறந்திட வேண்டும்
போற்றியே  உம்மை புகழ்ந்திட வேண்டும்
புண்ணியம் யாவும் சேர்ந்திட வேண்டும்

பற்றுப் பாசம் அகன்றிட வேண்டும்  நின்
பதமே துணை யென்றாகிட  வேண்டும்
சுற்றம் யாவும்  சூழ்ந்திட வேண்டும்
சுகங்கள் யாவும் சேர்ந்திட வேண்டும்

சிற்றறிவுகள் யாவும் சிதைந்திட வேண்டும்
சுதந்திர உணர்வுகள் பெருகிட வேண்டும்
கற்றவர் நிழலினில் ஒதுங்கிட வேண்டும்
காலங்கள் கைவசம் கனிந்திட வேண்டும் 

பெற்றாலிவை  பெரும் பேறே சாயி  
கொற்ற வனேஎமை காத்திடும் சாயி
சாயி சரணம்  சாயியே சரணம்
சாயி சரணம் சாயியே சரணம்



 


 





Friday, February 27, 2015

துணையை தேடி நான் தொலைந்தும் போகேன்

Thanks for the image
 கைகள்  கோர்த்து 
காலம் முழுவதும் 
 கண்ணுக்குள்ளேயே 
இருந்து விடலாமா
நேரம் போவது தெரியாமல் 
பெண்ணுக்குள் தோன்றும் புதிராய்
மண்ணுக்குள் தோன்றும் மரமாய்
விண்ணுக்குள் தோன்றும் வரமாய்.
பண்ணு க்குள் தோன்றும் பரவசமாய்.

RESİMLER
Thanks for the image
நீ எனைத் தாங்க
நானும் உனைத் தாங்குவேன் 
என் உள்ளங்கையில் வைத்து
உயிரிலும் மேலாய் என் உயிர் 
உள்ளவரை உலகே

Graphics » Christmas birds Graphics
Thanks for the image
.

 மோதிப் பார்ப்பதால்  பாதிப்பு தான் அதிகம்
வாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே
பூரிக்கும் படியாய்
நாம் என்ன மனிதர்களா 
மாற்றிப் பேசி மனம் நோக வைக்க 
என்ன நான் சொல்றது

.
Thanks for the image

பனியில் நனைந்தாலும்
துளியும் நிறம் மாறேன்
தனியே  கிடந்தாலும்
தளர்ந்து நான் போகேன் 
துணையை தேடி நான் 
தொலைந்தும்  போகேன்
(என்கிறது இந்த சிவப்பு ரோஜா ) 


வலையுறவுகளுக்கு வணக்கம் தயவு செய்து மன்னிக்கவும் நான் மீண்டும் வரும் வரை எனை மறவாதிருக்க இது ம்..ம்.. அப்புறம் புதிய நபர் என்றல்லவா எண்ணுவீர்கள் அது தான். நன்றி ! 
யாரு முணுமுணுக்கிறது. திட்டாதீங்கப்பா  ப்ளீஸ். 





Sunday, February 1, 2015

பாயும் புலியும் கேட்டால் பதுங்கி தானே கிடக்கும்

 

 ஆயர்பாடி கண்ணா வலை
மோதுகின்ற நெஞ்சா
காலை மாலை எல்லாம் 
அக்கன்னியர்கள் பின்னால்
 உன் மோனகானம் கேட்டு அவரும்
 மடியில் தஞ்சம் புகுவார் 

தூயநெஞ்சில் அந்த ராதை 
குடியிருந்து கொள்வாள்
கண்ணில் காதல் கொண்டே அவளும் 
மண்னை வாழவைப்பாள்
அவள் எண்ணம் முழுதும் உந்தன் எழிலில் 
லயித்துக் கிடக்கும்  உம்கவனம் முழுதும் 
எம்மை காத்துத் தானே  கிடக்கும்

மாயக் கண்ணன் உன்னைக் காண 
மயிலும் வந்திருக்கு இசைகானம் 
கேட்டுத் தானும் ஆடிக் களிக்க வென்று  
கூடிக்களிக்கும்  உந்தன் குலவு கவிதை கேட்க 
பேசும் கிளியும் பறந்துவந்து 
பக்கம் நின்று  பார்க்கும்
பாடும் குயிலும் உமையே 
பாடத்தானே துடிக்கும்
காடும் மலையும் உம்தன் 
காலடியில் தானே கிடக்கும்

 காயம் முழுதும் உந்தன் கானம் 
கேட்டு  சிலிர்க்கும்  
பாயும் புலியும் கேட்டால் 
பதுங்கி தானே கிடக்கும் 
ஓடும் நதியும் கேட்டு உறைந்து 
போகும் கண்ணா

ஓரறிவு உள்ள  மரமும் 
உமையே உருகி உற்று நோக்கும்
வேணு கானம் கேட்க
அந்த விதையும் எழுந்து நிற்கும்  

சாயவேண்டும் நானும் உந்தன் 
நிழலில் தானே கண்ணா
கோபம் கொள்ள வேண்டாம் 
உன் குழந்தை தானே நானும்
 என் பாவம் முழுதும் தள்ளு
உனைக் காண வேண்டும் நில்லு

எண்ணும் போது உனையே  நான் 
எளிதில் அடைய வேண்டும்
 உருகி என்றும் உமையே  

நானும்  பண்ணில் பாடவேண்டும்
 நினைவில் தோன்றும்  உந்தன்காட்சி
 கண்ணில் நிறைய வேண்டும்   

Tuesday, January 20, 2015

வாசகர்களாக மட்டுமே வாழாமல்



நன்னெறியில் இருந்து

பெருக்கமோடு சுருக்கம் பெற்ற பொருட்கேற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் -இரக்கம்
மலையளவு நின்றவெழில் மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.

கருத்து :-
அறிவு நிறைந்த மேலோர்கள் தம் செல்வ நிலைக்கேற்ப அன்போடு பிறருக்கு உதவுவார்கள்.

வணக்கம்! வலையுலக மக்களே!

இப்பாவுக்கு ஏற்ப நம் மதிப்பிற்குரிய திரு. ரூபன், திரு. யாழ்பாவாணன் அவர்கள் இருவரும் இணைந்து தமிழை வளர்க்க அரும்பாடு படுவது யாவரும் அறிந்ததே. போட்டிகளை தொடர்ந்து நடத்தி வரும் இவர்கள். எழுத்தார்வம் மிக்க அனைவரையும் மேலும் ஊக்கப்படுத்துவதும்.  நாங்கள் எல்லாம் எங்கே எழுதப் போகிறோம் என்று எண்ணி ஏங்குபவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பதுவும் தான் அவர்களது நோக்கம்.
எனவே வாசகர்களாக மட்டுமே வாழாமல், எண்ணக் கருவை எல்லாம் எழுத்தில் வடிக்க முடியுமா என்று ஏங்குவதை விட்டு விட்டு முடியுமா என்று சிந்திப்பதையும் சில நிமிடங்கள் நிறுத்தி விட்டு முயன்று தான் பாருங்களேன் ஒரு முறை. ம்..ம்..ம்.. பலமாக யோசிக்க துவங்கிவிட்டீர்கள் இல்லையா? நல்லது? உங்களை பாதித்த விடயங்கள் பல இருக்கலாம் இல்லையேல் உங்களுக்கு தெரிந்தவர்களோ நண்பர்களோ பாதித்த போது பார்த்து இருக்கலாம் அவற்றை கூட  நீங்கள் பதியவைக்கலாம். உங்களுக்கே தெரியாமல்  உங்களுக்குள் ஆற்றல் ஒளிந்திருக்கலாம்.அவ்வாற்றலை எல்லாம்  குடத்துள் விளக்காய் குன்ற விடலாமோ? நாட்கள் நெருங்கி விட்டதல்லவா? எனவே அருமையான இச்சந்தர்ப்பத்தை  நழுவ விடாமல்  அனைவரும் பங்குபற்றி உலகளாவிய  இப்போட்டியை சிறப்பிப்பதோடு நீங்களும் பயனடைந்து சிறப்படையுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆற்றுப் பெருக்கற்ற போதும் அலுக்காது
கற்றறிவு இல்லாக் கடலும் கலங்காது
வெட்ட வெளியினில் கொட்டும் மழையாவும்
முட்டக் கொடுக்கும் பிறர்க்கு!  

மேலதிக விளக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்
    http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html

 மிக்க நன்றி!

Monday, January 12, 2015

உயிரிலும் மேலாய் உணர்வத னாலோ


அன்னையே எந்தன் அடைக்கலம் நீயே
அகமகிழ் வேன்நான் அணைத்திடு தாயே
உன்னையே எண்ணி உருகுவ தேனோ
உயிரிலும் மேலாய் உணர்வத னாலோ

என்னையே தருவேன் நின்அருள் தாராய்
எத்தனை பிறவி எடுத்திடும் போதும்
உன்னையே தாயாய் பெற்றிட வேண்டும்
உதவிடு நானும் உருகிடு வேனே

                                                   
  வலையுறவுகள் அனைவருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கிடப் பொங்கும் வாழ்வில்
மங்கலம் நிறைந்திட வேண்டும்  
தங்கிடும் செல்வம் தளைத்திடவே    
இனிய உறவுகள் வாய்த்திட வேண்டும்
இன்பம்சூழ தங்கம்போல் தரமாய் 
என்று மனமார வாழ்த்துகிறேன் !

பொன்னையே நிகர்த்த பொற்றமிழ் தன்னை
பெற்றிட நானும் பெருந்தவம் செய்வேன்
கண்ணினைப் போல கருதிடு வேனே
கவிவரம் வேண்டிக் காத்திருப் பேனே

வெண்ணையயை  உருக்கி வார்ப்பது போல
வீணையை மீட்டும் விரல்களைக் காட்டும்
கண்களை  மூடிக் கொண்டே நானும்
கவிதைகள் புனைய சொற்றிறன் கூட்டும்

நின்னையே பேணி நெகிழ்ந்திட வாழ்த்து
நிம்மதி பெறுவேன் நீ உனில் ஆழ்த்து 
விண்ணையும் போற்றி வாழ்ந்திட உன்றன்
வித்தைகள் கற்றே வளர்ந்திட வாழ்த்து

தன்னையே உணர்தல் ஞானமென் பார்கள்!
தாயினி நீயே ! தகுவன தாயேன்!
விண்ணையும் பார்த்து  மண்ணையும் காத்து
வாழ்த்திடும் நீயே என்னையும் வாழ்த்து



பண்ணிய பாவம் போக்கிட  நாளும்
பாக்களை ஊற்றி வழிபட வேண்டும்
புண்ணியம் தேடி புறப்பட யானும்
பண்ணுடன் பாட அருளிடு வாயே

கண்ணியம் காத்துக் கவலைகள் தீர்த்துக்
காரிகை கற்கக் கவிதனை ஊற்று    
எண்ணிடு தாயே எழுந்தருள் வாயே
இன்னமும் ஏனோ தாமதிக் கின்றாய்   

நண்ணிய தில்லை நாயகன் நெஞ்சில்   
நாயகி நின்றே நர்த்தனம் ஆட
கன்றுகள் தாயைத் தேடுதல் போல
கண்திறந் துன்மடி வீழுதல் வேண்டும்
    
வெண்மையை விரும்பும் வாணியே தாயே   
வந்தனை செய்வேன் வரம்தர வாயேன்
திண்மையை பெறகண் திறந்திடு வாயே
திறம்பட  பாக்கள் புனைந்திட நானே         

எண்ணிய படியே எளிதினில் எழுத
ஏந்திடு வாயே ஏழையேன் எனையே
என்னையே மறக்க ஏற்பன செய்யும்
உன்னையே யன்றி ஒருவழி காணேன்

பொன்னையும் விரும்பும் புகழையும் தேடும் 
பூவினில் லென்கண்  பொருந்திடும் முன்னில்  
எண்ணிய செய்கை யாவிலும் நீயே
எளியனை ஆட்கொண்  டருளிடு தாயே !




Friday, January 2, 2015

ரொம்ப நாள் ஆசை

 
ரொம்ப நாள் ஆசை இன்னிக்கு 
தான் நிறை வேறியிருக்கு
மண்டையை போடுவதற்குள் 
நிறைவேத்தி வச்சிட்டியே சாமி
எவ்வளவு தாராள மனசுனக்கு.

  மற்றவங்களோட பொருளில ஆசை பட்டதற்கு இது தேவை தான் இந்த தண்டனை அப்பாடா ஒளிஞ்சுக்கிறதுக்கு ஒரு நல்ல இடம் கிடைச்சதால தப்பினேண்டா சாமி. இப்பிடியா என்னை மட்டிவிடுவே  நல்ல சாமிப்பா உன்னை நம்பினன் பாரு என்னை சொல்லணும் .
 
  
(எலியாருக்கும் கற்பனை வரும் இல்ல)

அப்பாடா எப்பிடியாவது இந்த இதயத்திலயாவது  
ஓடிப்போய் இடம் பிடிச்சிடனும்.
அட கடவுளே எங்கே போனாலும்
போராட்டமா இருக்கே இப்போ நீரோட்டமும்
தடுக்குதே. ஓஹோ  தலை எழுத்தை மாற்ற முடியாதோ   
விதியை வெல்ல யாரால் முடியும் ம்..ம்..ம்...