Saturday, February 1, 2014

ஆனை கறுத்ததென்று தந்தத்தை வெறுத்தாரா


 

ஆனை கறுத்ததென்று
      தந்தத்தை வெறுத்தாரா
தீயது கொளுத்தும் என்று
      தீபத்தை அணைத்தாரா

வேம்பு கசக்கும் என்றே
       விலக்கியே வைத்தாரா
வீணை அழுகுதென்று
       வீசியே எறிந்தாரா

வானம் கறுத்ததென்று
       மழை நீர் உறுத்தியதா
வாடிடும் மலர்கள் என்று
       மாலைகள் சூடலையா

மின்னல் தோன்றியதால்
       ஜன்னல் மூடியதா
சிவந்திடும் கன்னமென
       நாணம் விலகியதா 

குட்டியை விலக்கி வைத்தால்
      குரங்கினம் ஆகாதா
சிறு பிள்ளை வேளாண்மை
      சிறைச் சேதமாகிடுமா 

மழலை பேசுவது
      மந்திரம் ஆகிடுமா
தந்திரம் தெரிந்திருந்தால்
     விந்தைகள் புரிவாரா

இறைநாமம் சூடினால்
     இறைவன் என்றாகிடுமா
ஆலயம் இல்லையென்றால்
     ஆண்டவன் இல்லையா
  
கடலில் குளிப்பதனால்
     கரைந்திடுமா வஞ்சம்
கவலை படுவதனால்
     களித்திடுமா நெஞ்சம்

இறப்பு நிச்சயமே
    பிறப்பு தொடரலையா
புயல்வந்த பின்னாலே
    அமைதி காணலையா   

வாழ்வு சரிந்தது என்று
     வையகம் வெறுத்திடுமா
வானவில் தோன்றுவதால்
     இயற்கையழகை இழந்திடுமா

வண்ணநிலவு வருவதனாலே
        எண்ணஓட்டம் குறைந்திடுமா
கண்கள்ளிரண்டும் மூடியதும்
        வண்ணம்முழுதும் மறைந்திடுமா

நினைப்பது நடப்பதில்லை
       நடப்பதை  நினைத்ததில்லை
விழுவதெல்லாம் எழுவதற்கே
      அழுவதெல்லாம் சிரிப்பதற்கே

தோல்வியை தழுவ
       வெற்றிகள் காணும்
துன்பங்கள் சூழ
       இன்பங்கள் தொடரும்

நிலைப்பது இல்லை எதுவும் 
       நிம்மதி காணும் உறவே
தடுத்திட முடியாதெவரும்
      தரித்திரம் விலகும் உறவே

19 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    தோல்வியை தழுவ
    வெற்றிகள் காணும்
    துன்பங்கள் சூழ
    இன்பங்கள் தொடரும்

    என்ன வரிகள் கவிதையில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது...சிறப்பாக உள்ளது.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்..அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா.

    கவிதையின் வரிகள் வாசிக்க வாசிக்க என்மனதை திகட்ட வில்லை...நன்றாக உள்ளது அதற்கு உரிய வகையில் படங்கள் எல்லாம் அழகாக உள்ளது..... வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன் !

      தங்கள் முதல் வருகையில் அகமகிழ்ந்தேன். தங்கள் இனிய கருத்துக்கள் வழமை போல் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் நல்கும். நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமையும்.மிக்க மகிழ்ச்சி.!
      வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

      வாழ்க வளமுடன்....!

      Delete
  3. நினைப்பது நடப்பதில்லை
    நடப்பதை நினைத்ததில்லை..
    விழுவதெல்லாம் எழுவதற்கே
    அழுவதெல்லாம் சிரிப்பதற்கே!..//

    அருமை.. அருமை.. நல்லதொரு பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரா !
      வருகையும் கருத்தும் கண்டு நிம்மதியும் சந்தோஷமும் கொண்டேன்.
      மிக்க நன்றி..! வாழ்க வளமுடன்....!

      Delete
  4. துவண்ட மனங்களை தூக்கி நிறுத்தும் கவிதை.
    அருமை தோழி!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி !
      தங்கள் தயவால் சகோதரர் முத்துநிலவன் அவர்கள் வந்திருந்தார்கள்.மனம் துவண்டிருக்க தூக்கி நிறுத்தி விட்டார் தெரியுமா. அவருக்கு என் பல கோடி நன்றிகள். தோழி தங்களுக்கும் சகோதரர் மதுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

      ஊக்கம் தரும் கருத்து கண்டு உள்ளம் பூரித்தது.
      நன்றி வாழ்க வளமுடன்....!

      Delete
  5. சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள்...

    வரிகள் மனம் கவர்ந்தன...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே!
      சிறப்பான கருத்து இட்டு
      சிந்தை மகிழ வைக்கும் சிற்பியரே
      செந்தமிழ் வாழ செய்திடும் வளர்த்திடும்
      சிந்திடும் உம் வார்த்தைகள்..!
      நன்றி வாழ்க வளமுடன்....!

      Delete
  6. ரொம்ப அருமையான கவிதை கவிஞரே ...
    வாழ்த்துக்கள் ..
    வரிகள் மிக அழுத்தமான பாதிப்பை தருகின்றன.
    இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
    நினைப்பது நடப்பதில்லை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மது ! வாருங்கள் !
      இதயம் கனிந்த வாழ்த்துக்கள் இனித்தன
      கனத்த இதயம் கனிந்தது இல்லை ஒரு பயம்
      என நம்பிக்கை உறுதிதரும் கருத்து கண்டு மகிழ்ந்தேன்.
      மிக்க நன்றி ..! வாழ்க வளமுடன்....!

      Delete
  7. மிகவும் அருமையான தன்னம்பிக்கையான வரிகள் .காலம் அனைத்தையும் மாற்றும் வலிமை மிக்கது .தோழி எழுவதற்கே பிறந்துள்ளோம் .உங்கள் வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றது .வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!

      Delete
  8. அப்பப்பா! அருமை கவி வரிகள்!
    முழுவதும் மிக நன்றாக உள்ளது.
    இனிய வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!

      Delete
  9. தன்னம்பிக்கையும் உற்சாகமும் ஊட்ட வல்லவையாக .உங்கள் கவிதை வரிகள் திகழ்கின்றன. ஆரம்பத்தில் தன் முறம் போன்ற காதுகளை ஆட்டியபடி வரவேற்கும் விநாயகரின் அம்சமும் வெகுவாக ரசிக்க வைத்தது. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்தைக் கண்டு கொண்டேன். அழகிய கவிதை தந்த உங்களுக்கும், வலைச்சர அறிமுகம் தந்த என் ஃப்ரெண்ட் மஞ்சுபாஷிணிக்கும் மகிழ்வுடன் என் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரா ! வாருங்கள் !தங்கள் வருகை கண்டு உவகை கொண்டேன். உற்சாகம் தரும் அருமையான கருத்தை வழங்கி நம்பிக்கையூட்டியது மகிழ்ச்சியே. தொடர்ந்து ஆதரவுதர வேண்டுகிறேன்.அறிமுகத்திற்கும் மிக்க நன்றி..! நானும் தொடர்கிறேன். வாழ்க வளமுடன் ....!
      தோழி மஞ்சுபஷினிக்கும் என் மனமர்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....!

      Delete
  10. மிக அருமையான கவிதை தோழி..துவண்ட மனதை துள்ளி எழ வைக்கும்..
    //வானம் கறுத்ததென்று
    மழை நீர் உறுத்தியதா
    வாடிடும் மலர்கள் என்று
    மாலைகள் சூடலையா// மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி மிக மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் வரவு.
      மிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்திற்கும் ...! வாழ்த்துக்கள் தோழி ...!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.