Sunday, March 3, 2013

கோபியர்கள்



Lord Vishnu with Laxmi mata, yellow and green color


 கோபியர்கள் கண்ணா கண்ணா 
எமை குழல் ஊதி மயக்குகின்ற வண்ணா 
எம் மீது கோபங்கள் ஆகாது கண்ணா
 பால் மனசு கொண்டவன் நீ யல்லவா 
நாம் படும் பாடு கண்டு நீ கொதிக்கவில்லையா
பாற்கடலில்  கடலில் தானே நீ பள்ளி கொண்டாய் 
உயிர்கள் பரிதவித்த போது ஏன் தள்ளி நின்றாய் 
விதி மீது பழி போட்டு ஒதுங்கி நின்றால்
நாம் வேண்டுவதின் பொருள் தான் என்ன கண்ணா
பின்னலை பின்னின்றிழுப்பவனே 
எமை பொம்மைகள் என்றா எண்ணிவிட்டாய் 
விளையாட்டுக்காகவே நீ செய்யுகின்றாய்
அது வேதனை எமக்கென்று விளங்கவில்லையா 
உன்னோடு தானே விளையாடுகின்றேன்  ஆனாலும் 
நீ ஒன்றும் என்னோடு விளையாட வேண்டாம் 
அதனை என்னால் தாங்க முடியாது   
ஆயர் பாடி கண்ணா 
அருள் தர உனக்கு மனம் இல்லையா
 அபயம் அளிக்க நீ வரவில்லையா
Lord Krishna Blinking Eyes

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.