Friday, August 22, 2014

பூவிழிகள்நோகும்


2 .....தீபாவளியை முன்னிட்டு ரூபன் & யாழ்பவணன் அவர்கள் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி 2014




O

ஒய்யாரமா நிக்கிறியே கண்ணம்மா 
ஒருக்களித்து பார்க்கிறியே செல்லமா-
ஐயா மனசை கலைக்கிறியே மெல்லமா
என்னோருயிரை பறிக்கிறியே நியாயம்...மா

தண்ணிக்குடம் தலையிலதான் கண்ணம்மா 
என்தாகம் தீர்க்க வேணுமடி செல்லம்மா
வளைந்து நெளிந்துநிக்கிறியே தேனம்மா- நானுன்
வலையினிலே துடிக்கின்ற மீனம்மா                             ஒய்யாரமா  


அழகிய ஓவியங்கள் (10)

அயிலை மீனைபோல என்னை அலைக்கிறியே- தோகை
மயிலை போல ஓயிலாவே நடக்கிறியே
கூடை நிறைய பாசம் வைத்து பார்த்திருக்கே - உன்
கூடபேச ஆசை கொண்டு காத்திருக்கேன்                                             ஒய்யாரமா

வேல்விழியால் தாக்கியெனை விளுத்திறியே கீழே- என்
மேலடுப்பு வச்சுதானே காய்ச்சிறியே கூழே
புன்னகையை மறைத்துவைத்து தாக்கிறியே என்னை
கன்னமிட்டு என்கனவை கலைக்கிறியே பெண்ணே                      ஒய்யாரமா 

மின்னுகின்ற மூக்குத்தி மேலழகு பெண்ணே
மன்னுகின்ற பார்வையிலே  சீரழகு கண்ணே -நீ
பொட்டு வைத்தால் வட்டநிலா வாடு....ம் - உன்
கட்டழகை கண்டாலும் பூவிழிகள்நோகும்                                     ஒய்யாரமா                             
உன்நடையழகை கண்டாலே அன்னமது நாணும்
உன்இடையழகை கண்டாலும் நடையுடனும்  தளரும்  
என்னவளே உன்னுயிரை தீக்கிறியே மெல்ல - என் 
கன்னத்திலே போட்டுக்கிறேன் கட்டிறியா என்னை                      ஒய்யாரமா  


 இந்தக் கவிதை பார்க்க இங்கே கீழே சொடுக்குங்கள்
 

பொன்னால தானேநான்

1 ..... தீபாவளியை முன்னிட்டு ரூபன் & யாழ்பவணன் அவர்கள் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி 2014
 

கண்களில் மின்னுதுகாதல் கருத்தினிலேன் மோதல்-பட்டு
வண்ணநிறத்தில சேலை கைவலையிலயேன் மாலை               
ஜன்னலோரம் நின்னு கதைபேசுது உன் கண்ணு
திண்ணையோரம் நின்னுநான் திகைக்கிறேனே கண்ணு             (ஆ)

அடியெடுத்து வைக்கும்வேளை தடுப்பதெந்தக் காளை
விடியும்முன்னே வந்துதவம் கிடப்பதில்ல வேலை                            (பெ)

மின்னல்போல பொட்டு வைத்து மயக்கிறியே ஆளை
இடுப்புமேல  கூடை வைத்து தடுக்கிறியே தோளை                            (ஆ)






மனம்படியும் முன்னே கடிவாளம் போடுதுதினம் ஏனோ
வனப்புமிக்க வார்த்தைகளை வீசுவதால் தானோ                                  (பெ) 

மனம் படபடக்குது ஏங்கிஉடல் வெடவெடக்குது தேங்கி
நுனிமூக்கிலதா கோபம்வந்தா கிடுகிடுக்குது மேனி                              ( ஆ)

வரையறையே இன்றிகாதல் வளருகின்ற தஞ்சி
விரையம் ஏதும்இன்றி- இங்கு கரைகிறாளே வஞ்சி                                (பெ)

கொஞ்சுதமிழ் கெஞ்சிடவே கோலம் போடுதிங்கே
மிஞ்சிபோட்ட விரலும் மெல்ல நொஞ்சு பார்க்குதங்கே                        (ஆ)

வெஞ்சமரே வந்தாலும் அஞ்ச மாட்டேன் -நான்
பஞ்சத்திலே வாழ்ந்தாலும் கெஞ்ச மாட்டேன்                                            (பெ)

ஓஹோ        அப்பிடியா......

மண்டியிட்டுக் கேட்டுக்கிறேன் உன் மனசை -என்
மனசிலேயே வைத்து உன்னை பூஜிக்கிறேன்                                              (ஆ)

ஆ ஹா ஹா ஆஹாஹா ஹா...........எனக்கு தெரியாதா 

நீ பொன்னை வைக்கும் இடத்தில பூவைவைப்ப 
என்னை வைக்கும் இடத்தில உன்னைவைப்ப                                           (பெ)

சாச்சா அப்பிடி செய்வேனா......

பொன்னால தானேநான் போர்த்து வைப்பேன் -உன்
கண் ஜாடைக்காகத் தான் காத்திருப்பேன்                                                      (ஆ)

ம்..ம்.....ம் ok ok பார்க்கலாம்........








                  

Thursday, August 14, 2014

உலையில் கிடக்கும் அரிசி



நிலவும் முழுகும் இரவில்
நீர்நிலையில் தவழும் மகிழ்வில் 
உலவும் உலகம் முழுதும்
நீர்த்திவலை இன்றி கழுவும்

உலகும் உலவும் நிலவில்
அமைதி யான பிறகும்
விலகும் துன்பம் யாவும்
நிலவழகில் மயங்கி திளைக்க

அருகில் நின்று ஆடிக்களிக்கும்
அகத்தில் இனிமை சேர்க்கும்
மதியும் நிலவுபோல தேயும்
மறுபடியும் வளரும் வாழும்


காதல் பிரிவில் கருகி 
நெஞ்சை நெருடும் போது- உன்
கொள்ளை அழகை கண்டால்
கொதிக்கும் உள்ளம் குளிரும் 

அலையில் அலையும் அறுகு
உலையில் கிடக்கும் அரிசி
அனலில் விழுந்த மெழுகு-ஆனபோதும்
உன்னைக்கண்டால் உணர்வு ஒன்றிப்போகும்


ஏங்கி தவிக்கும் நிலவு - நாம்
வெளியில் இல்லை என்றால்
எட்டிப் பார்க்கும் மெல்ல  
சாளரம் வழியே உள்ளே


நிலவின் ஒளியில் நின்று
உணவை அன்னை  ஊட்ட
மழலை மொழியில் பேசி
வியக்கும் குழந்தை காட்டி  

நிஜம் இல்லையென்று புரிந்தும்
நெருங்க மனது துடிக்கும்
நினைவு நிறைய சூடும்
நெஞ்சில் நிறுத்தி பாடும்

வளரும் போது பிறையும்
வனப்பு மிகுந்து காணும்
மறையும் போது விழிகள்
ஏக்கம் கொண்டு பார்க்கும் 

பகலவன் வரும் நேரம்  
பயந்தே மெல்ல  நழுவும்
பலவேளை நாணம் கொண்டு 
வெட்கி விலகி ஓடும்
  




Sunday, August 3, 2014

சித்த மெல்லாம் நீரே சாயி ஸ்ரீ சாயி







 

சித்த மெல்லாம்
நீரே சாயி ஸ்ரீ சாயி
நித்தமும் நான்தொழுவேன்
உத்தமராம் உமை
வித்தகரே தினம்
காப்பாயே  எ(ம்)மை   ( சாயி ஸ்ரீ சாயி)

எத்தனை நான்மறவேன்
பித்தனையும் பணிவேன் -உன்
சக்தியையும்  அறிவேன்
சரணடைந்தேன் சாயி
எத்துணை அவலம்
வந்துற்ற போதும்
அத்தனையும்  களைவாயே-அந்த  
அம்மை அப்பனும் நீயே  (சாயி ஸ்ரீ சாயி)

நொந்துநான் போனால்
நிந்தனைகள் உமக்கே
சிந்தனை செய்வாயே
வந்தருள் செய்வாயே
சிந்தையில் வந்தமர்ந்து
விந்தைகள் புரிவாயே
முந்தைய வினைமுழுதும்
விலகிட அருள்வாயே   ( சாயி ஸ்ரீ சாயி)

நித்திரை யின்றி
செத்திடுவேனே
புத்திரர் நிர்கதியானால்
நித்தியமாய் வேண்டும்
நெற்றிக் குங்குமம்
நிலைத்திட அருள்வாயே-வாழ்வை
சிதைத்திட எண்ணி எனை
பகைத்திட வேண்டாம் சாயி

பதைத்திடும் போதில் எல்லாம் 
திகைத்திடும் படியாய் 
தீர்த்திடுவையே சாயி 
சாயி தயாளா வள்ளல் நீயே  வருக -நல்
வாழ்வினையே தருக (சாயி ஸ்ரீ சாயி)

நீள்கடலில் நின்று
தத்தளித்தாலும்
நீந்திட வழிவிடய்யா
ஆழ்புதை குழியில்  நான்
அமிழ்ந்தாலும்-எனை
ஆதரிப்பாய் ஐயா
ஆளரவம் அற்ற
அடர்ந்த காட்டில்
தனித்து நின்றாலும்
துணையாவாய் ஐயா  ( சாயி ஸ்ரீ சாயி)

புயல்காற்று மழையினில்
சிக்கி சுழன்றாலும்
கொடிய விலங்கு-எமை  
கொன்று போட்டாலும்
வலிய பகை என்னை
வளைத்து நின்றாலும்
விஷக்கிருமி என்னையே
வாரிச் சென்றாலும்
விலகி ஓடுமே
உம்நாமம் சொல்லவே  (சாயி ஸ்ரீ சாயி)

என் கண்ணுக்குளே
இரும் காருண்யரே உம் நினைவு
என்றும் நீங்காமலே 
நின் பாதம் பணிய
காணும் இனிமை
இம்மை மறுமை எங்குமே
தோன்றும் எண்ணம் நிகழுமே
தொல்லை எல்லாம் அகலுமே
தொடர்ந்து செல்வேன் உம்மையே  (சாயி ஸ்ரீ சாயி)