Thursday, February 28, 2013

கண்ணா

 


கண்ணா மேக நிற வண்ணா 
வெண்ணெய் திருடும் கண்ணா 
விளையாட்டு போதும் கண்ணா                               (கண்ணா)                                     

ஐந்து தலை நாகத்தில் அமர்ந்திருக்கும் கண்ணா 
அலைமீது  நர்த்தனம் ஆடுகின்ற கண்ணா 
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை
விரும்பி சூடுகின்ற கண்ணா                                        (கண்ணா)

மூவுலகை ஓரடியாய் அளந்த கண்ணா 
முகாரி ராகம் இங்கு வேண்டாம் கண்ணா
மனமுருகி வரவேண்டும் இங்கு கண்ணா
உன் குழலோசை தான் கேட்க வேண்டும் கண்ணா (கண்ணா)

பாண்டவர்க்கு தேர் சாரதியான கண்ணா 
பாற்கடலில் படுத்து உறங்கியது போதும் கண்ணா 
பார்த்தசாரதியே இங்கு கொஞ்சம் பாரும் கண்ணா 
வீதி வெறிசோடுமுன்னர் வாரும் கண்ணா                  (கண்ணா)

உரிமை தர மறுக்கிறார் கண்ணா 
எமை உறவாடிக் கெடுக்கிறார் கண்ணா 
ஏழை எங்கள் துன்பங்கள் போக்கவில்லையா 
நெஞ்சில் எரிமலைகள் வெடிக்கிறதே  தடுக்கவில்லையா   (கண்ணா)

அண்டசராசரங்கள் காப்பவன் நீ 
அபலைகளின் அலறல்கள் ஏன் கேட்கவில்லை நீ 
அநியாயம் தன்னையே  அழிப்பவன் நீ 
அவதாரம் இன்னும் ஏன் எடுக்கவில்லை நீ                          (கண்ணா)


Wednesday, February 27, 2013

கருவறையும் கல்லறையும்

கோவிலிலே கருவறை உண்டு தாயின்
கருவறையில் கோவிலும் உண்டு
குழந்தையும் தெய்வமும் ஒன்று
அந்த இருவருமே கருவறையில் ஒன்று
அந்த கோவிலும்  புனிதமானதொன்று 

கருவறையில் தொடங்குகின்ற வாழ்வு
அலை அலையாய் கொண்டு போகும் பாரு
மணவறையில் பூத்த புது உறவு அது
பள்ளியறையை அலங்கரிக்கும் ஒன்று
அங்கு கலந்து பகிர்ந்து கொண்ட அந்த அன்பு
தாயின் கருவறையில் மிளிர்ந்து சிறை கொள்ளும்

கருவாகி உருவாகி பெரிதாகி வருமே வெளியில்
பூவுலகை காண ஒரு நாளே அது தான் திருநாளே
துன்பங்கள் அறியாமல் அதுவும்
மழலை மொழி  பேசி கொள்ளும்
அழுக்கு போக குளியலறையில் கழுவும்
பசியெடுத்தால் சமையலறை செல்லும்

படுக்கையறையில் துயில் கொள்ளும்
கொள்ள பழுதுகளை சரி செய்யும் 
நல்லறிவு பெற கல்வி கலை கற்று
வாழ்க்கையினை வழி நடத்தும் நன்று
வாழ்க்கையிலே வந்து போனதெல்லாம்
வகுப்பறையில் கொண்டதுபோல் ஆகும்

படிப்படியாய் அறிவிழந்து உடல் தளர்ந்து போகும்
அது பிணவறையில் கொண்டு சென்று சேர்க்கும்
பின்னர் கல்லறையில் கதை முடித்து கொள்ளும்
கருவறையில் தொடங்கிய நம்  வாழ்வு
கல்லறையில் சென்று அது  முடியும்

ஊனம் ஊனமா

உடலினிலே உள்ள ஊனம்  ஊனமா 
உள்ளத்திலே இருந்தால் தான் ஊனமே 
அதை உதட்டினிலே கொள்வது தான் பாவமே 
அதையும் ஊரறிய சொல்லிவிட்டால் சாபமே 
அவை ஏழேழு பிறப்பினிலும் தொடருமே 

Tuesday, February 26, 2013

ஆறுபடை வீடு


 




ஆறுபடை வீடு உண்டு 
முருகா உனக்கு
ஆத்துக்காரி ரெண்டு 

இருக்குது முருகா
 

ஆறுமலை ஏழுமலை 
என்று உனக்கு
அதிகமான சொத்து 

இருக்குது முருகா
 

அன்பை பெற அன்னை 
உண்டு முருகா
ஆறுதல் தரவுனக்கு 

தந்தை உண்டு முருகா                  ( முருகா ஆறுபடை)

ஆபத்துக்கு ஓடி வர 
அண்ணன் உண்டு முருகா
எங்களுக்கோ அன்னை 
தந்தை யாரும் இல்லை
 

ஆதரவுக் குன்னை விட்டால் 
எவரும் இல்லை ஆறு குளம் 
கண்ட தில்லை முருகா எங்கள் 
கண்களிலே உள்ளனவே முருகா
 

வேதனையின் வடிவம் 
என்ன முருகா
எம்மை வேதனைக்கா 

விற்று விட்டாய் முருகா              ( முருகாஆறுபடை)

வீர தீரம் செய்ய

வில்லை முருகா  
ஒரு விருந்தினரை 
கண்டதில்லை முருகா
 

வெற்றி வேலன் 
துணை இருந்தால் 
போதும் விதியினையே 
வென்றிடுவோம் நாளும்
 

கனவிலேனும் காட்சி 
கொடு முருகா எம்
கவலை எல்லாம் தீர்ந்து 

விடும் முருகா                        ( முருகாஆறுபடை)

Monday, February 25, 2013

ஆறடி மனிதன்

 

ஆறடி மனிதன் அளந்தது என்ன 
இழந்தது தானே அதிகம் 
மனைவி மக்கள் சுற்றம் இழந்து 
சொத்து சுகங்கள் அனைத்தையும் 
இழந்து தன்னையும் ஒரு நாள் இழந்தானே 

ஆறடிமண் தான் அவனுக்கு சொந்தம் 
என்று சொன்னாரே ஒரு பிடி சாம்பல் அதுவும் 
கரைந்து காற்றில் பறந்ததுவே
அழியும் உடம்பை  நிலையென நினைத்து 
ஆசை வைத்தானே விதியென நினைத்து
மாயையில் விழுந்து சிக்கிக் கொண்டானே

பொறுமை இழந்து நிம்மதி இழந்து 
தன்னையும் மறந்து தவறுகள் செய்தானே 
பற்று பாசம் என்று எண்ணி பதறித் துடித்தானே 
ஆசைகள் அவனை ஆண்டு கொள்ள அவதிபட்டானே 
எல்லாம் எனக்கே சொந்தம் என்று  உரிமை கொண்டானே 

பெரியவன் நான்  என்று ஆணவம்
கொண்டு அழித்திடத் துணிந்தானே 
அன்பு செய்வதை மறந்து அவனும் 
ஆட்கொள்ள நினைத்தானே 
ஆண்டான் அடிமை என்று அவனும் பேதம் கொண்டானே 

உயிருக்கு இல்லை பேதம் என்று உணர மறுத்தானே 
ஆண்டவனையும் வகை வகையாக பிரித்து வைத்தானே
பாவத்தை தொலைக்க வந்தவன் இங்கு மேலும் சுமந்தானே 
பேரின்பம் காண விளையவில்லை அவன்  சிற்றின்பம் கண்டானே 

உன்னை நினைப்பினிலே

உன்னை நினைப்பினிலே வரிஞ்சிருக்கேன்
நித்திரையும் இழந்திருக்கேன் நான்
நெத்தியிலே வரைஞ்சிருக்கேன் நீ
நெஞ்சுக்குள்ளே நிறைஞ்சிருக்கே (உன்னை நினைப்பினிலே)

கண்ணாளன் காத்தாட மூச்சை
கொஞ்சம் இழுத்து விட்டேன்
கண்ணு எரியும் இன்னு ஒறப்பை
கொஞ்சம் கொறச்சுக் கிட்டேன்
இனிக்க வேணுமின்னு லட்டு
கொஞ்சம் சேர்த்துகிட்டேன் (உன்னை நினைப்பினிலே)

லட்ட கண்டதும் நீ எட்டிப் பார்க்க கூடாது
நெஞ்சறையை பூட்டி சாவியை மறந்து வச்சேன்
தொறக்க முடியாது தொந்தரவு செய்யாதே
தெத்தி பல்லை ஓடைச்சிடுவேன்

நான் மண்ணுக்குள்ள போகு மட்டும்
நீ நெஞ்சுக்குள்ளே இருக்கோணும்
நெத்தி பொட்டு அழியு முன்னர் நான்போய்
சேரோனும் அங்கேயும் காத்திருந்து
பூ விலங்கு போடோணும் (உன்னை நினைப்பினிலே)

ஒய்யாரமா

ஒய்யாரமா நெஞ்சுக்குள்ளே ஒக்காந்து என்ன பண்ணிற
நெஞ்சு வலிக்கவில்லை நித்திரையும் கொள்ளவில்லை
கும்மிருட்டு வேளையிலும் ஏன் குதிக்கிறே
கொத்தடிமை போல என்னை ஏன் வெருட்டிற                 (ஒய்யாரமா)

கட்டெறும்பு போல என்னை ஏன் கடிக்கிற
கட்டியவன் கோட்டையிலே கூத்தடிக்கிறே 
கரு வண்டு போல கண்ணை ஏன் உருட்டிற
கட்டுப்பட்டு காலடியில் தானே கிடக்கிறேன்                      (ஒய்யாரமா)

சுரிதார் வேண்டாம் கால்சட்டை வேண்டாம்
கண்டுகண்டு  கசந்து போச்சு கண்ணே
கண்டாங்கி சேலை கட்டி வரணும் எனக்கு
கை வளையல் கொஞ்சும் ஓசை கேட்கணும்
அதற்கு கால்கொலுசு மெட்டி மெட்டு  போடணும்
மல்லிப்பூ வாசம் என்னை கமகம என்று இழுக்கணும்  (ஒய்யாரமா)

கனடா முழுவதையும் சுத்தி வந்து பார்க்கணும்
சி .என் டவரில சோழன்போரி கொறிக்கணும் 
சிட்டுப் போல அங்கிருந்து சேர்ந்து நாம பறக்கணும் 
கண் கொள்ளாக் காட்சி என்று கண்டவர்கள் வியக்கணும் 
இது தண்டா ஜோடி என்று மூக்கின் மேல் விரலை வைக்கணும்   
கலை மகளே வந்ததாக எண்ணி நான் 
கண்ணிமைக்க மறந்திடணும்பெண்ணே                             (ஒய்யாரமா)

Sunday, February 17, 2013

அன்பென்ற நதி




அன்பென்ற நதியிலே அனைவரும்
மூழ்கவே அனுமதி தந்ததாரு
அகிலங்கள் யாவையும் ஆளுகின்ற
சக்தி  அன்புக்கு உள்ளதாமே 

ஆனந்தமாகவே நீ நீராடு அதிலே 
ஆருயிர் போகு முன்னே 
ஆதவன் செய்கின்ற அன்பைபாரு 
அதிலேயே மூழ்கிறான் என்றும்பாரு 

வீசுகின்ற காற்றின் வித்தை பாரு
வீசாதிருந்தால் மூச்சு நிற்கும்பாரு
மண்ணின் மகிமையினை  எண்ணிப்பாரு 
அதற்கு எல்லா உயிரினமும் ஒன்றுபாரு 

மறக்காமல் அனைவரையும்  
சுமக்கின்றது மாண்டவரை  
மண்தின்னு முன்னே மீண்டும் 
வந்தாலும் ஏற்கின்றது

மரித்த பின்னரும் பெற்றவரும்
உற்றவரும் உதறி விட்ட 
போதும்  உதறாமல் மடிதனிலே  
உறங்க விடும் உள்ளம்

இவ்வுலகில்  யாவருக்கும்  வாராத போதும்   
தீராத பகை தன்னை  கொள்ளாதே போதும்
இவை பேதைமை கொண்டால் வாழ்வு ஏது
உயிரினங்கள் வாழ வழிகள் ஏது 

     

Thursday, February 7, 2013

நீ இல்லை என்றால்




நீ இல்லை என்றால் நாமேது முருகா
உன் நினைவில்லை என்றால் வாழ்வேது
வேதனை என்ற ஒன்றில்லை என்றால்
மனிதம் இருக்காது வாழ்வும் சிறக்காது

வேடிக்கை தானே உங்களுக்கு
வேண்டியது தான் எங்களுக்கு வேலவனே
வேண்டியதை தர நீ இருந்தால்
கஷ்டம் தெரியாது உன் அருமையும் புரியாது

ஆற்றுப்பட நீ செய்தாலும்
ஆட்கொள்ள நீயே வரவேண்டும்
அந்த அருளினை எமக்கு தரவேண்டும்
முருகா கருணை கொண்டு நீ வரவேண்டும்

அம்மா




ஒவ்வொரு வீட்டிலும் உள்ளதம்மா தெய்வம்
நாம் ஊர்எல்லாம் தேடி அலைகின்றோம் 
தன்னலம் பாராது எமைகாக்கும் கருணைதெய்வம் 
அதுதானே  அம்மா என்கின்ற அன்புருவம் 

பாலுக்குஅழுதால் பதைபதைத்தாயே  அம்மா    
பட்டினிகிடந்தால் விட்டிடுவாயே உயிரை ஒருகணமே 
ஏதும் முட்டிவிட்டலோ முட்டிடுமே உன்கண்கள் குளமாக 
உறங்கவில்லை என்றால் உறங்கிடாமல் விழித்திருப்பாயே அம்மா 

நோயினில் விழுந்தால் நொடிந்திடுவாயே  மருந்தாய் ஆவாயே
ஆனந்தமாகவே உன் சுகங்களை எல்லாம் 
எமக்காய் தொலைத்தாயே மெழுகுவர்த்தி
போலவே உருகி நின்றாயே

அம்மா என்று அழுதால் வாரி அணைத்திடுவாயே நெஞ்சோடு 
இதுஉன் அன்பினில் விளைந்த செங்கூடு
என்றும் இருந்திட வேண்டும் நன்றியோடு  
இதை அறியாதோரே மண்மேடு 


 

Saturday, February 2, 2013

தமிழ் மொழி

தரணி எங்கும் தமிழ் இனம்

தமிழ் மொழி எங்கே காணோம்

என்றொரு நிலை வருமுன்னே

கட்டி காக்கணும் கண்ணே

பாரம்பரிய தமிழோ அது

பாதாளத்தில் விழுமோ

தமிழ் அருகி வருகிறதே

அது தமிழ் நாட்டிலும் தெரிகிறதே

அறிஞர்கள் கலைஞர்கள் தானே

மீட்டிட வேணும் முட்டி

கவிஞர்களும் கவி புனைந்திட

வேண்டும் பலவற்றை சுட்டி

ஆங்கில மோகம் தானே

தமிழ் அழிந்திட காரணமாமே

தமிழ் மேன்மை பெற்றிட வேணும்

மேம்பட வழி ஒன்று காணும்

நடையை மாற்றிட வேணும்

சுவையை கூட்டிட வேணும்

நகைச் சுவையுடன் அதனை ஊட்டி

காத்திட வேணும் பாட்டி

நம் வீட்டிலும் இது தான் நிலமை

நம் நாட்டுக்கும் இதுவே கடமை

Friday, February 1, 2013

ஆறுமுகன் ஆனைமுகன்





ஆறுமுகன் ஆனைமுகன் தம்பியல்லவா
ஆதிசிவன் உந்தனுக்கு தந்தையல்லவா 
உலகையாளும் சக்தி 
உந்தன் அன்னை யல்லவா 
உன் மாமனோ அகிலத்தையே 
காக்கும் கண்ணபர மாத்மா அல்லவா
நீயும் என்ன சின்னவனா தந்தைக்கே 
பாடம் சொன்ன தனயன் அல்லவா  
சூரனையே வதம் செய்த சூரன் அல்லவா
(ஆறுமுகன்)    
நீயே ஒரு ஞானப்பழம் அல்லவா உனக்
கெதற்கு பாலும் பழமும் தேவையா
தேனும் பாலும் கலந்ததுண்னவா 
உன் திருவடியில் எத்தனை பேர் எண்ணவா
தெருவினிலே எத்தனை பேர் தெரியுமா 
அவர் திருவயிறு தினம் பாடல் பாடுமே 
இதை அறியாத சிறுவனா நீ அண்ணலே 
அவர் திருவாய்க்கு கொடுக்க வேண்டும் உண்ணவே 
(ஆறுமுகன்)
   ஆறுகாலப் பூஜை உனக் கவசியம் தானா
உன் அன்பரெல்லாம் தவிக்கிறாரே 
அலட்சியம் தானா யாரும் உன்னை
 கேட்கவில்லை என்ற எண்ணமா 
உன்னை இன்னும் யாரும் 
அங்கு கேட்க வில்லையா எந்தனுக்கு
     உன்னை கேட்க உரிமை இல்லையா    
(ஆறுமுகன்)
ஒட்டு மொத்த உறவுகளும் 
சிதறிக் கிடக்குது தமிழும் சைவமும்
 உலகெங்கும் பரவிக்கிடக்குது
உன் பக்தியும் புகழும் ஓங்கிக் கிடக்குது 
கோவில்கள் கோபுரமும் உயர்ந்து கிடக்குது 
நம் உள்ளம் மட்டும் இன்னும் 
இங்கு வாடி கிடக்குது   
(ஆறுமுகன்)
வாய்ப்புகள் வராதா வழிகள் 
பிறக்காதா முருகா பிறக்காதா 
விடிவுகள் கிடைக்காதா உன்
 வருகையினால் வரும் பெரும் பேறு
 நீ வருவது இல்லையே ஏன் கூறு 
தேவர்கள் அழைத்தால் தான் 
வருவாயோ நீ கலியுகத்தில் கால் 
வையையோ முருகா உன் 
திருப்பாதம் இங்கு பதியாதோ  
(ஆறுமுகன்)