Monday, April 29, 2013

நெற்றிக் கண்ணனே





ஆண்டவனே ஒரு முறை நான் பார்க்க வேண்டுமே 
 பட்டதெல்லாம் போதும் என்று கேட்கவேண்டுமே  
பாத்திரத்தை ஏந்துவது எங்கள் குற்றமா
படைத்தவன் கணக்கினிலே உள்ள குற்றமோ
 நெற்றிக் கண்ணனே நாம் உனது  வம்சமா
எம் நெற்றியிலே எழுதியதும் உனது  வேலையா 
 

பிட்சை என்பது உனக்கு  இஷ்டமானதா 
எத்தனை முறை அதை நாம் உச்சரிப்பது 
உச்சாடனம் செய்யவது மந்திரமா 
 நம் இன்னல்கள்  உந்தனுக்கு இன்பமானதா நீ  
 விளையாட துடிக்கும் எம் நெஞ்சுகள்  மைதானமா 

நெஞ்சு அஞ்சி தினம் தினம் செத்து மடியுதே 
 பரிதவிக்கும் எங்களுக்கோ ஈர நெஞ்சமே
படியளக்கும் பரமனுக்கோர வஞ்சமே
ஒழித்து வைத்த எறும்பினிற்கு உணவு தந்தாயே 
பட்டினியில் வாடும் எம்மை அலைய விட்டாயே

 விருந்தாளி போல நோய்கள் வந்து போகுதே
வலிமை இழந்த உடலும் வளைந்து போகுதே  
 பசி இன்றி வாழ ஒரு வரம் வேண்டுமே
விதியின்றி வாழ ஒரு வழி இல்லையோ

துன்பம் இன்னும் தொடரும் என்று எழுதிவிட்டாயோ 
நம் பாவங்களை ஆண்டவன் நீ பொறுப்பதில்லையோ 
பழி வாங்க நீ ஒன்றும் மனிதன் இல்லையே
மனித நேயம் மனிதருக்கு இருப்பதில்லையே  

நாட்டில் உள்ள துன்பங்களை நீக்கிவிடு 
உன் விளையாட்டை கொஞ்ச நேரம் நிறுத்தி விடு 
பாவி எம்மை படுத்தாமல் வாழவிடு 
எப்போதும் நல் வழியில்   போகவிடு 

(நதி வழி தானே ஓடமும் போகும் )
(விதி வழி தானே  நாமும் போவோம் )   




Wednesday, April 24, 2013

மண்ணின் மைந்தர்

கார் மேகமே வலிக்கின்றதே  
பார் மேகமே சொந்தமண் கண்ணீர் சொரிகின்றதே 
மண்ணின் மைந்தர் எங்கே காணவில்லையே 
எங்கு தேடியும் தென்படவில்லையே 
மேகமே மறைத்து வைத்தாயோ 
ஒரு முறை காட்ட மாட்டாயோ 
நட்சத்திரமாய்  மின்னுகின்றாரோ 
இல்லை ஒளி தர மெழுகுவர்த்தியாய் உருகிப்போனாரோ
சூரியக் கதிர்களாகி பகைவரை சுட்டெரிப்பாரோ 
கல்லறையில் தூங்குகின்றாரோ  
சற்று நேரம் இளைப்பாறவாமோ 
கருவறை அழுகின்றதே தழுவிடத் துடிக்கின்றதே 
நெஞ்சும் நெருப்பில் வேகின்றதே
வெற்றிடத்தை நிரப்ப வழியின்றி தவிக்கின்றதே  
வெறிச்சோடி கிடக்கின்றதே வீதி கிடக்கின்றதே 
எங்கே அந்த வீரர்கள் வீறுநடை போட எங்கே அந்த வீரர்கள் 
மறவர் குல மாணிக்கங்கள்  மதுரமாய் வீசுங்கள் வீணையாய் 
மாறுங்கள் விளையாடிப் பாருங்கள்  காற்றினில் 
கலந்து கானம் இசையுங்கள் ஈழம் நமதென்று முரசு கொட்டுங்கள்
உம் இழப்பை நாம் ஈடு செய்யவே
உரிமை கீதம் பாடுங்கள்  
உம் கனவு ஈடேறும் என்றே நம்புங்கள்  

Saturday, April 13, 2013

தியாகம்

மாவீரர் அவர் மாவீரர் மீள்வரா அந்த மாவீரர்
மாளவில்லை அவர் மாளவில்லை
மீள்வதற்கு அவர் மாளவில்லை
வாழுகிறார் அவர் வாழுகிறார்
தமிழ் நெஞ்சங்களில் அவர் வாழுகிறார்

ஒழியவில்லை அவர் ஒழியவில்லை
உலவுகிறார் அவர் உலவுகிறார் 
அன்பு உள்ளங்களில் அவர் உலவுகிறார்
மாவீரர் தினங்களிது  மக்கள் சேரும் நேரம் இது
வணங்க வேண்டிய தருணம் இது

ராமர் கூட பல லக்ஸ்மனராக வாழ்ந்தாரே
அஞ்ஞாத வாசத்தை அநுஷ்டித்தார் வனத்தினிலே
தமிழே எனது மூச்சென்று தரணி வியக்க வைத்தாரே
தாயகம் என்ற வேதத்தை ஓதிக் கொண்டு நின்றாரே
உரிமை காக்க வேண்டும் என்று உயிரை தியாகம் செய்தாரே

ஒட்டு மொத்த உறவுகளையும் விரும்பி விட்டு சென்றாரே
ஊன் உறக்கம் இன்றி அவர் தாய் மண்ணை காத்தாரே
இளமை காலம் முழுவதையும் நம் விடிவுக்காக தொலைத்தாரே
கன்னியரை நாடவில்லை கண்ணிவெடி கோத்தாரே
காதல் சேஷ்டை செய்யவில்லை போரில் சேஷ்டை செய்தாரே

நாட்டின் கண்கள் பெண்கள்  என்று புறப்படாரே போருக்கு
அடுக்களை இனி நமக் அடுக்காதென்று ஆயுதம் ஏந்தி நின்றாரே
நெற்றி குங்குமம் தேவை இல்லை என்று நெஞ்சில் குறி வைக்க நின்றாரே
கூந்தலை முடித்து அனலை கக்கி சாதனைகள் செய்தாரே

வெற்றி வாகை சூட வரம் வாங்கவில்லையோ
பெற்றெடுத்த பூமி அது தாங்கவில்லையே
எமை தத்தெடுத்த போது நாமும் ஏங்கவில்லையோ
இதை பார்த்த இரவு பல இரவு தூங்கவில்லையே
இந்நிலமை கண்டு நிலவு கூட நொந்து போனதே

சிந்தித்ததிலையே ஒரு போதும் சிதறி விட்டோமே முத்துகள் போல
சேர்த்தெடுத்து எமை கோத்திடடுவாரோ வெற்றியின் போது
சூடிடுவாரோ விதி தானே அது விளையாடும்
வெற்றியினையும் வேண்டிதரும்
                      

கண்டிப்பு






 கண்களில் என்ன கலவரம் 
காற்றினில் கலந்து மழை வரும் 
கார்த்திகை விளக்கு ஒளி தரும் 
கவலைகள் மெல்ல வெளி வரும் 
இளம் பருவத்தில் இது தான் நிலவரம் 
காதல் கொண்டால் சரி வரும் 
பகலிலும் கனவு வரும் 
உறக்கத்திலும் நினைவு வரும் 
தன் மேலும் ஒரு பிடிப்பு வரும் 
பல ஆடைகள் அணிய ஆசை வரும் 
இடம் தெரியாமல் சிரிப்பு வரும் 
பல சமயங்களில் குளப்பம் வரும் 
பகுத்தறிவின்றி நடக்க வரும் 
பார்ப்பவருக்கோ வெறுப்பு வரும் 
பெற்றவருக்கோ கோபம் வரும்
வாழ்வே மாயம் பாடவரும் 
பெற்றவர் சம்மதம் பெற்றவரும் 
காதலில் வெற்றி கண்டவரும் 
இனிமை  என்றும்  சேர்ந்து வரும்
இருவரும் சேரும் நாளும் வரும் 
திருமண நாளும்  கூடி வரும்
பெற்றவர்கள் ஆனவரும் 
பிள்ளைகள் நிலை தனை காணவரும்
தாம் செய்தது மறந்து விடும்   
தவறு என்று தெரியவரும்  
எல்லாம் தலைகீழ் ஆகிவிடும்
                 கண்டிப்பும் தொடங்கி விடும்