Wednesday, March 13, 2013

ஆறு அறிவு

மனிதர்களும் மிருகங்களே 
பேசத் தெரிந்த உருவங்களே 
இரண்டு கால்கள் போதுமென்று 
நிறுத்தி விட்ட சுருவங்களே 

சிந்திக்கவும் தெரிந்தவர் தான் 
சிரத்தை எல்லாம் குழி பறிப்பதில் தான் 
ஆறு அறிவு கொண்டவர் தான் 
அல்லல் படுவதும் அதனால் தான் 

ஆழ்ந்த கருத்துகள் கொண்டிருந்தால் 
அன்பும் அதனுடன் கலந்திருந்தால் 
அமைதியாக வாழ்ந்திடலாம் ஆண்டவனின் 
அனுக்கிரகம் அதுவாக கிடைத்திடுமே  

அன்பு கொண்ட மனிதர்க்காய் 
சொர்க்கம் நழுவி பூமியிலே தானாக
விழுந்திடுமே அன்பினை அளந்திட
முடியாது அதிர்ஷ்டம் வருவதும் தெரியாது 

இன்பம் என்பது என்னவென்று இதுவரை
யாருக்கும் தெரியாது கானல் நீர் தான் எல்லாமே
அதை கடந்து செல்வதும் அறியாமை நீயும் நானும் 
விதிவிலக்கா இதுவே உலக வழக்கென்றும்  

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.