Tuesday, December 31, 2013

வாரும் சாயி வாரும் சாயி


வாரும் சாயி வாரும் சாயி
வரம் அருள வாரும் சாயி
வள்ளல் ஆக வாரும் சாயி
வளங்கள் நிறைவாய் வழங்கும் சாயி

 
ஒளிரும் ஒளியாய் வாரும் சாயி
இருள் அகல வாரும் சாயி
கள்ளம் இல்லா உள்ளம் தாரும்
கொள்ளும் இன்ப வெள்ளம் எங்கும்

வாரும் சாயி வாரும் சாயி
கருணை கொண்டு வாரும் சாயி
பொன்னும் பொருளும் மின்னும் சாயி
எண்ணம் புனிதம் ஆகும் சாயி

வேம்பின் அடியில் விரும்பி இருப்பார்
வேரின் கசப்பையும் போக்கி வைப்பார்
எண்ணெய் இன்றி ஒளியேற்றி வைப்பார்
நீரில் நின்றே ஒளிர வைப்பார்

உம் பாதம் பற்றும் அடியவரின்
பாவம் போக்கும் சாயி நாமம்
சாயி வழங்கும் துனியின் உதியில்
நோய் நொடிகள் உடனும் விலகும்

சாயி நாமம் சொல்ல சொல்ல 
சர்வமும் வந்து சேரும் எம்மை
ஆதவன் போல் அன்பு செய்ய
இன்பம் நெஞ்சில் ஊறும் சாயி

எடுத்த கருமம் இனிது சிறக்கும்
தடைபட காரியம் தடங்கல் நீங்கும்
வரும் துக்கம் எல்லாம் தூரநிக்கும்
வாரும் சாயி வாரும் சாயி
 

சாயி எம்மதம் என்றாலோ
எம்மதமும் சம்மதம் என்பார்
சாயி அல்லாவா என்றே கேட்டால்
எல்லாம் ஒன்றே என்றே சொல்வார்

வாரும் சாயி வாரும் சாயி
வல்லமை யாவும் தாரும் சாயி
சாயி என்றும் அன்பின் எல்லை-தீனதயாளர்
என்றும் இல்லை என்பது இல்லை

சாயி சரணம் சரணம் சாயி  
ஜெய் சாயி ஜெய ஜெய சாயி

Tuesday, December 24, 2013

வருக புத்தாண்டே வருக

   

 சுட்டியை படத்தின் மேல் கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்


வருக புத்தாண்டே வருக
    பொலிவோடு புகழோடு வருக
அருளோடு பொருளும் 
    கொண்டு வந்து தருக
ஒளியோடு நிறைவாக 
    மகிழ்ந்தாட வருக
கோலமயில் போலவே
    கொண்டாட வருக

ஆல மரம் போல 
     அசராமல் வருக 
அன்னம் போலவே 
     குணம் கொண்டு தருக
 மான்குட்டி போல 
      துள்ளலுடன் வருக
பச்சை வயல் போலவே 
      பசுமையாய் வருக


 animated christmas photo: Animated Christmas ChristSantaReadsChild.gif

 ஆனை பலம் கொண்டு
     அசத்திடவே வருக
தென்றல் போலெமை
     தழுவிடவே வருக 
தெவிட்டாத தீஞ்சுவை
     தினம் கொண்டு தருக
எறும்புகளின் சுறு 
      சுறுப்பை ஏந்தியே வருக

காகம் போல் ஒற்றுமை யாய்
    வாழ சொல்லி நீ தருக
கிளி போல நாம் பேச
      கற்று நீ தருக
குயிலிடம் குரல் கொஞ்சம்
      வாங்கியே வருக
வான் மழை போலவே 
      கேட்காமல் தருக

கல்வி தான தானியம் 
      கொண்டு வந்து தருக
கலங்காமல் நாம் வாழ
      களிப்போடு வருக
நோய் நொடிகள் சேராது 
      தடுத்திடவே வருக
வெற்றிகள் கண்டிடவே 
      விரும்பி நீ வருக


 பஞ்சமா பாதகங்கள்
      தொலைந்திடவே வருக
பசி பிணி அனைத்தையும் 
      போக்கிடவே வருக
பொருளாதாரம் 
      உயர்ந்திடவே வருக
அன்பும் அறமும்
      தளைத்திடவே வருக

நல்லாட்சி நிறு விடவே
      நட்போடு வருக  
புத்தாண்டே வருக
      புதுமையுடன்  வருக
 புனிதமும்  மனிதமும்
      கொண்டு நீ தருக 
பணிவோடு பக்தியும்
       பரப்பிடவே வருக

animated christmas photo: Animated Christmas 028002Uw_aN.gif




















Saturday, December 21, 2013

ஆலகால முண்ட கண்டனே

 சுட்டியை படத்தின் மேல் கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்

ஆலகால முண்ட 
கண்டனே
இவ்வண்டம் 
முழுதும் உந்தமே

தில்லையிலே 
ஆடும் கூத்தனே
திருவோடு 
ஏந்தும் பித்தனே 

எமை திண்டாட 
வைப்பவனே எம்
திமிரினை அடக்கும்
தில்லை நாதனே

இடு காட்டில் 
வாழும் அப்பனே
எம் இடர் தீர 
வாரும்  ஐயனே

விடை ஏறும் 
வல்லவனே
கடை ஏற 
வைப்பவனே

கண்ணப்பன் 
கண்ணவனே எம்
எண்ணங்கள் அறிவாயே
ஈடேற்றி விடுவாயே

அண்டங்கள் 
ஆடாது அசையாது
நீ கண் மலர் 
மூடிடக் கூடாது

நம் அன்பினை 
கடந்தால் ஆகாது
பாவம் கடுந் தவம் 
செய்தாலும் தீராது

பொன்னார் 
மேனியனே 
உன் புகழ் பாட 
உருகுவையே 

உமையாளருகிருந்தா 
மருகுவையே
கங்கை நீரையே
பருகுவையே

நெற்றியிலும்
கண்ணை வச்ச
நித்திரைய 
தள்ளி வச்ச

மனசில 
மங்கை வச்ச
சிரசில 
கங்கை வச்ச 

எங்களையோ 
ஏங்க வச்ச
பாவங்களை 
செய்ய வச்ச

பாம்பையும் 
கழுத்திலிட்டு 
புலித் தோலையும் 
இடுப்பிலிட்டு 

எமை விலகிட 
செய்தாயோ
நீ வெறுத்திட 
நினைத்தாயோ

நாமுனை அணுகாது
வேதனை விலகாது
நீ எமை சேராது
நிதர்சனம் கிடைக்காது 

ஆதியும் அந்தமும் 
இல்லாதவன் 
பந்த பாசம் எம் மீது
கொள்ளாதவன்

அண்ணா 
மலையானே
அன்பினில் 
விளைந்தவனே

எண்ணிய போது 
நீ வரவேண்டும்
இன்பங்கள் யாவும்
தரவேண்டும்










Thursday, December 12, 2013

இயேசு வின் நாமம் பேசிடவே

jesus gif photo: Jesus gif A-1.gif
jesus in heaven photo: heaven Jesus-Welcome.gif
சுட்டியை படத்தின் மேல் கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்
தேவனே உனை தேடினேன்
பாடினேன் உனை நாடினேன்.

இயேசுவின் நாமம் பேசிடவே
அவர் வாசம் செய்வார் நம்முடனே
பாசம் கொண்டவர் பரிதவித்தால்
உடன் பாவங்களை வாங்கிக் கொள்வார்

நேசம் கொண்டவர் நெஞ்சினிலே
நித்தியமாய் குடி கொண்டிடுவார்
மேதினியில் மலிந்திருக்கும் பாவங்கள் 
கண்டு பரிதவித்தே பிறவி எடுத்தாரே

வார்த்தைகளாய் மணி வயிற்றில்
வளமாய் வந்து வளர்ந்தவரே
திருவாய் உருவாய் திகழ்ந்தாரே
அன்னை மரியாள் மடியில் தவழ்ந்தாரே

அவள் மதி முகம் கண்டு மகிழ்ந்தாரே
மண்ணில் புகழ் பெற மிளிர்ந்தாரே
நாட்கள் நகர்ந்திட இயேசு வளர்ந்திட 
நன்மைகள் புரிந்து நேசம் வளர்த்தாரே

எம் நெஞ்சினில் நிறைந்தாரே நய
வஞ்சகர்களையும் மன்னித்தே அருளினாரே
ஆணவம் கொண்ட அனைவரையும்
ஆட்கொள்ளவே அன்பு செய்தாரே

நோய் துன்பம் நீக்கி புதுமைகள்  
புரிந்தவர் புண்ணியம் காத்தாரே
இயேசுவின் நாமம் ஒலித்திடவே வரும்
துன்பங்கள் யாவும் தொலை தூரத்திலே

இறை மகன் வழியில் தொடர்ந்தாலே
சுபீட்சம் எங்கும் நிறைந்திடுமே
மண்ணில் மனித குலத்தையே 
மீட்டிடவே மேய்ப்பரானாரே

வேதனைகளையே விரட்டிடவே
விரைந்து வருவாரே
ஒளியாய் விழியாய் வருவாரே
நாம் களிப்புற கண்டு மகிழ்வாரே

மன்னிக்க வேண்டி மன்றாட
மறுத்தாரில்லை வழங்கிடவே
மக்கள் பாவம் என்றவர் புனிதப்
படுத்த புறப்பட்டு வந்தாரே

பாவ புண்ணியம் பகுத்தே உரைத்தாரே
நம் பாதையை வகுத்தாரே
இயேசு எம் பாவத்தை தொலைத்து 
தன் பயணத்தை முடித்தாரே

அமைதியும் அன்பும் நிலவிடவே
அவர் சிலுவை சுமந்தாரே
பாவங்கள் யாவும் வாங்கிடவே
சிலுவையில் அறையவும் பொறுத்தாரே

பரிசுத்தமான பரம பிதாவே உம் பாதம்
துணை என பணிகின்றோம்
யேசுவே உமை துதிக்கின்றோம்
எமை மன்னிக்கவே  மன்றாடுகிறோம்.



Saturday, December 7, 2013

ஷிர்டி சாயி ஸ்ரீ சாயி

இமைக்காமல் எமை பார்த்திரும் என்றும் கண்ணுக்குள்ளே வைத்து காத்திரும்

இமைக்காமல் எமை பார்த்திரும் என்றும் கண்ணுக்குள்ளே வைத்து காத்திரும்

 

ஷிர்டி சாயி ஸ்ரீ சாயி 
அன்பு சாயி அருள் சாயி
சாயி என்பது மந்திரமே 
செய்திடும் பல வித அற்புதமே

சாயி என்று உச்சரித்ததுமே
சங்கடம் தீரும் அக்கணமே
சீரடி தொழுதவர் பிணி விலகும்
நம் அடி சேராதிடர் ஒழியும்

பாதங்கள் பற்றிட 
பேரின்பம் கிட்டிடும்
சேவித்த கரங்களுக்கோ
ஜீவிக்க அருள் வழங்கும்

சாயி புகழ் பாட
தன் புகழ் ஓங்கிடும்
கடைக் கண் பார்வையில் 
கரைந்திடும் பாவம்

ஏற்றிடும் விளக்கில் பால் 
ஊற்றிடும் வயிற்றில்
சுடரும் ஒளியே 
படரும் வாழ்வில்

தூவிடும் பூவில் 
துலங்கிடும் வாழ்வு
கூடா நட்பும் உடனே விலகும்
தேடா தின்பம் வந்தே அடையும்  

உணவு படைத்திட 
கெடுத்திடும் ஏழ்மை 
அனுதினம் தொழுதிட 
விளங்கிடும் புலமை
 
 அவர் அன்பினை வேண்டிட 
ஒண்டிடுவார் உடன்
 விடை தர வேண்டினால் 
நடை பயில்வார் உடன் 

சாயி செப்பிய வார்த்தைகள் ரத்தினமே
சிந்திய பார்வையும் சந்தனமே 
 தீன தயாளா திடம் தருவாயே
 கருணை கடலே எமை ரட்சியுமே









  

Thursday, December 5, 2013

தென்றலே தென்றலே



தென்றலே தென்றலே 
தணியும் நீ ஏன் தணல் ஆனாய் 
தகர்த்திடும் எண்ணம்
ஏன் கொண்டாய் 
உடல் தளர்ந்தாலும்
இதம் தருவாய் 
மனம் வாடுகையில்
உன் வசம் கொள்வாய் 
பூஞ்சோலை வலம் வருவாய் 
மலர்களையே நீ 
நுகர்ந்திடுவாய் வண்டினம்
வந்தால் நகர்ந்திடுவாய்

இன்று பாடும் பண்ணிசை
கேட்கவில்லை 
வீசும் வாடையில்
தண்மை இல்லை
என் கனவுகளை நீ 
காணவில்லை
என் நினைவில்
பூக்கள் பூக்கிறதே 
அதையும் இன்னும்
நீ அறியவில்லை 
ஏனென்று எனக்கு 
புரியவில்லை உனக்கும்
கோபம் சோகம் வருகிறதோ 

மனிதருள்ளும் 
வலிகள் உண்டாம்
புதுமை படைக்கும் 
வலிமை யுண்டாம்
சில நாளில் 
மடிவதுண்டாம் 
விடிவதற்கோ அது 
தெரியவில்லை
பூவுக்குள்ளும் 
ஒரு பூகம்பமாம் 

பூமியிலும் ஒரு 
எரிமலையாம்
கடல் நீரினிலும் ஒரு 
சுனாமி யுண்டாம் 
வானத்திலும் வரும் 
இடி மின்னலாம்
தென்றலும் நாள் ஒரு புயல் ஆகும்
தென்னவனும் ஒரு நாளில் 
தெருவுக்கு வரலாம் 

தென்றலே தென்றலே 
சோகமதை நீ அறிவாயோ
சொப்பனத்தில் ஏனும் கண்டாயோ
தேனினும் இனிய வார்த்தைகள் 
வந்து விழுந்தால் ஆறிடுமே
புனிதமான நட்பிருந்தால்
துயரம் தூர போய் விடுமே
காலமும் கைகொட்டி சிரித்திடுமே.