Monday, March 11, 2013

கடலலையே கடலலையே






 கடலலையே கடலலையே நீ தானா அது நீதானா நீ 
கொந்தளித்தது ஏனோ காயங்கள் கொண்டதனாலோ 
பேரழிவை செய்தது ஏனோ பெருமூச்சு நீ விட்டதனாலோ
கோபம் கொண்டது உனக்கழகோ காவு கொண்டது சரி தானோ 
நமை கலங்கடித்தது முறை தானோ நீ வரம்பு மீறிடலாமோ  
ஊருக்குள்  வந்தது ஏனோ அபலைகள் கண்களில் உன்னழகை 
கண்டு களித்திடத் தானோ உனக்கென உறவுகள் இல்லையோ 
நம் உறவுகள் உனக்கு தேவையோ தாய் மண்ணில் அவலங்கள் 
அறியாயோ கதறல்கள் உனக்கு கேட்கலையோ கண்களில் 
ஈரம் காயுமுன்னே கொள்ளை கொண்டது முறை தானோ 
பிஞ்சு நெஞ்சுகளில் கூட  வேலை பாய்ச்சி விட்டாயே 
நீங்காத துயரமதை நெஞ்சில் நிறுத்தி விட்டாயே 
கொடூரச் செயலை கேளாமல் திரும்பி பார்க்க முடியாமல்
திரும்பி  விட்டாய் நீ உன் பாட்டில் வருந்தவில்லையோ இன்னும் நீ 
வேதனை என்பதை அறிவாயோ விருந்துக்கென்று வந்தாயோ 
அத்தனை பசியா உனக்கு இது என்ன ராட்சச பசியா 
உன்னிடம் உள்ளதே உணவு அதை ஊருக்கு கொடுக்கும் மனசும் 
பின் அடுக்குமா இது உனக்கும்   

2 comments:

  1. வணக்கம்
    அம்மா

    கருப்பொருள் ஒன்றுதான் வரிகள் வித்தியாசம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் !
      ஆம் ரூபன் கருப்பொருளும் வலிகளும் ஒன்று தான் வரிகள் தான் வேறு வேறு.
      என் வேண்டுகோளுக்கு ஏற்ப இதனை பார்த்து கருத்தும் இட்டமைக்கு மிக்க நன்றி!
      வாழ்க வளமுடன்....!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.