Tuesday, April 21, 2015

மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது மட்டும்

சட்டையும் இல்லை போர்வையும் இல்லை 
பனிகாலத்தில் எமக்கு, 
ஆனாலும் சட்டை செய்யவில்லை

.
நாம் என்ன மனிதர்களா உடல்நடுங்கி உறைவதற்கு,
பறவைகளா இடம் மாறிப்பறந்து செல்ல
பிடித்து வைத்த பிள்ளயார் மாதிரி 
வைத்த இடத்திலேயே வாழ்கிறோம் வசதியாய்.



பாலிலும் வெண்மை நிறம் பொருந்திய 
அப்பனி படர்வதையும் மகிழ்வாகவே
ஏற்றுக் கொண்டு பகட்டாகவே தென்படுகிறோம் 

காற்றும் கடுங் குளிரும் பொருட்டல்ல
கடமையே பெரிது எமக்கு உயிரை விட  
குற்றங்கள் புரிவதிலும் நாட்டம் இல்லை
கொடிகள் பிடிக்கும் எண்ணமும் இல்லை   . 

எதையும் தாங்கும் இதயம் எமது  . 
எந்நிலையும் கடக்க வல்லது 
விதியை நோகவில்லை  நாம் 
சதிபோலவும்  தோணவில்லை 
இவை சவால் தான் நமக்கு  .

வருவதை எதிர்ப்பின்றி எதிர்கொள்கிறோம்.
இன்பமும் துன்பமும் வந்து போவது வாழ்வில்
சகஜம் எனும் நினைப்பில்.


இருந்தும் புத்தாடைகள் அணிவதில் பிரியமே 
குதூகலம் சற்றும் குன்றாமல்.ஆர்வத்தில் 
வசந்த காலத்தை வரவேற்க காத்துக் கிடக்கிறோம்  
 .  






பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்பீர். 

டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று

அவர் பதிவை ஒட்டிஎன் ஆதங்கத்தையும்
இவ்வாறு தெரிவிக்கிறேன். 

சகோதரர் முரளிக்கு என்நன்றியும் பாராட்டும்.

பாலியல் தொந்தரவு எமக்கில்லையே  
எனவெண்ண தலை நிமிர்கிறது தன்னால். 
மனிதர்களைவிட பகுத்தறிவற்ற நாம்மேல்   

பச்சைப் பாலகன் களையும் விட்டு 
வைக்கவில்லையே இந்த பாதகர்கள் 
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தரையில் இன்னும் ஏன் ....

கோபமும் வெறுப்பும்  அதிகமாக 
விழுங்கவே எண்ணுகிறது மனம்
மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது.  . 


பச்சைக் குழந்தைமேல் இச்சையோ மானிடத்தின் 
நச்சு விதைகளே  நீங்களன்றோ - துச்சமென 
பண்பை அழித்தீர்கள் பாவிகளே நீங்களும் 
புண்கள்தாம் என்பேன் பழித்து !


விந்தை நிறையுலகி லேன்இந்த சிந்தையோ  
பந்தை அடிப்பது போலவே  பாட்டியை
துன்பத்தில் ஆழ்த்திய பாவிகளின் கன்னம்  
மின்ன பழுக்கவை சூடு!

Tuesday, April 14, 2015

மண்ணிடம் காதல் மானிடக் காதல் மனத்துயர் போக்குவோமோ?











மெய்யாய்மெய் நோகுமே யாமிலையேல் வையமே  
உய்யாய் ஒருபோதும் வையாதே  எம்மையே 
வெயிலிலும் பெய்யும் மழையிலும் கிடத்திடினும்  
நொய்தபின்னும் காப்போம் உமை !





இயற்கையைப் பழித்ததன் இதயத்தை அழித்தால்
இன்பங்கள்  சூழ்ந்திடுமோ? - நம்
இயல்பினைத் தொலைத்தோம்! செயற்கையில் திளைத்தோம்!!
எதுவரை வாழுவோமோ?

காடுகள் வளங்கள் கானுறை உயிர்கள்
காப்பது கடமை யன்றோ - நலம்
நாடியே இயற்கை நலம்பட இருப்பின்
நன்மையே சூழுமன்றோ





  
எந்நிலையைக் கடந்தும் வாழ்வேன் உமக்காய்
 நான் மடிந்தால் வையம் 
என்மடி மீதுதான் உறங்கும்
சாணுடல் எனினும்நான் சாவேனே
உம்மாரோ டென்பதை மறந்தீரே


பயனற்ற செயலால் பின்வரும் உலகைப்
பார்த்திட மறக்கிறோமோ? - நெஞ்சம்
அயர்வுறும் சிறையில் நம்மையே அடைத்து
அதற்குள்ளே இறக்கிறோமோ?

   
  தலை சுற்றுகிறது உயிருக்கு உலை வைப்பதால்
 வாழும் போது நான் ஆகாரம்  மாளும் போதோ ஆதாரம்



வயலினில் உழுதிடும் உழவனின் தோளை
வணங்குதல் அறிகிறோமோ? - அந்தச்
செயலினில் அன்றி நம்பசி தீரா
சிந்தித்துத் தெளிகிறோமோ?
பழமரம் நாடும் பறவைகள் பாவம்
வளங்கள் அற்றே வையம் சாகும்  




  

ஆர்வத்தின் சிப்பியில் அழகுற விளையும்
முயற்சிகள் முத்தல்லவா? - எது
தீர்வதென்றாலும் கடலெனும் ஊக்கம்
தீர்ந்திடா சொத்தல்லவா?

குயவனாய்க் காலம் அனுபவக் கைகள்
கொண்டிடும் சக்கரத்தில் - சிக்கி
மயங்குகின் றோமோ மதிவழி நின்று
மாறுதல் செய்கிறோமோ?

மரங்களை வெட்டும் மனிதனின் கெட்ட
மனதினை வெட்டுவோமோ - இயற்கைக்
கரங்களைச் சுட்டால் கண்ணீரே எஞ்சும்
காயங்கள் ஆற்றுவோமோ?

பெண்ணெனும் பூமி பெண்களே நதிகள்
பெண்மையைப் போற்றுவோமோ - காடு
கண்ணெனக் காத்து கலைப்பவர் செய்கை
கண்டித்துத் தூற்றுவோமோ?

எண்ணிட எண்ணம் என்னிலே உண்டு
இன்செயல் ஆக்குவோமோ - வாழும்
மண்ணிடம் காதல் மானிடக் காதல்
மனத்துயர் போக்குவோமோ?

Thursday, April 2, 2015

துடிக்கின்ற உள்ளங்கள் துயரங்கள் போக்கத் துளியன்பு தளிர் விடுமோ ?


Oyster animal graphics

மூடிடும் சிப்பிக்குள் முகிழ்த்திடும் முத்துக்கள்
       மழைசெய்த தவத்தின் பயனோ?
வாடிடும் பூவிற்குள் வாழ்ந்திடும் வித்துக்கள்
       வருங்கால விருட்சக் கனவோ?


தேடிடும் ஞானத்தில் தெய்வதம் கூடுதல்
      தெளியார்க்குக் காட்ட அருளோ? 
ஏடினும் காணாத சரித்திரப் பக்கங்கள்
      எம்மனிதம் இட்ட கொடையோ?
 



ஆடிய பாதங்கள் அன்பினில் விளைந்திட்ட
       ஆண்டவன் சதிர் நடையோ ?
தேடிடும் போதிலே திவ்விய தரிசனம் 

        தந்திடும் வள்ள மையோ?

இடியென வீழ்ந்திடும் இன்னல் மழையினில்
        இடர்தவிர் குடை யவனோ?

மடியினில் தவழும் மழலையின் மகிழ்வினை
        மறுபடி அருளு வனோ?

பிடியிடை கொண்ட மாதர்கள் மனங்கள்
        பிறைஒளி மதி தருமோ?
விடியலைத் தேட விழைகிறேன் பிணிக்கும்

        விலங்குகள் அறு படுமோ?
 

செடியினில் பூக்கும் பூக்களின் வாழ்க்கைச்
        சுதந்திரம் கை வருமோ?
துடிக்கின்ற உள்ளங்கள் துயரங்கள் போக்கத் 

        துளியன்பு தளிர் விடுமோ ?
 

வெடிக்கின்ற நெஞ்சத்தின் விம்மல்கள் எல்லாம்
        விலையற்றுப் போய்விடுமோ ?
நொடிந்திட்ட நிலையில் நிற்கின்ற இதயங்கள்
        நிம்மதி நிலை புகுமோ ?
 

கடிதென விலகும் காயங்கள் எல்லாம்
        கற்றிடும் பாடங்களோ ?

மடிந்திடும் போதும் மகிழ்வுடன் ஏற்கும்
        மலர்ச்சியின் பாடல்களோ? 

உள்ளுக்குள் சதிசெய்ய உதடுகள் சிரிக்கின்ற
        உன்னதர் வெறும் பதரோ?
முள்ளையே காட்டி உள்ளுக்குள் இனிக்கின்ற
       முதிர்பலா மனமுறுமோ?
 

துள்ளிடும் மீனுக்கும் நீருக்கும் உள்ளதே
        தோன்றுடல் உயிருறவோ?
எள்ளுவார் எள்ளட்டும்! ஏத்துவார் ஏத்தட்டும்!
         என்பதே என் நிலையோ?
 

வெள்ளத்தை ஏற்ற விதையினைப் போல -வாழ்வில்
        விடியல்கள் வந்திடுமோ?
கள்ளங்கள் -களைகள் கழுத்தினை நெருக்கக் - காரியம்
       சிறப்பாய் ஆகிடுமோ?

தள்ளாத வயதிலும் தவித்திடும் நிலையிலும் - தாங்க..தன்
       நம்பிக்கை துணைவருமோ?
புள்ளிகள் வைத்தவன் கோலங்கள் இடுகிறான் -
போகட்டும
       எனஎண்ணம் தோன்றிடுமோ?