Friday, November 29, 2013

ஈழம் மீட்டிட

 

 ஈழம் மீட்டிட இடர் தீர தளராது
இடைவிடாது இருதயம்
துடித்திட கண்கள் துஞ்சாது
மன்னுயிர் காத்திட தன்னுயிர் நீத்தவர்   எங்கே

தாயன்பை தள்ளி வைத்து
போர் அன்பை வளர்த்தவர் பற்று
பாசம் முழுவதும் துறந்தவர்
ஆடம்பர வாழ்வையும்  மறந்தவர்              எங்கே

கல்வி கலை கற்காமல் கால்
பந்தாடாமல் வாலிப வசந்தம் உணராமல்
அறுசுவை உணவையும் உண்ணாமல் 
ஆனந்தமாகவே அல்லலுற்றவர்                     எங்கே

குப்பையில கிடந்தாலும்
குண்டு மணி மங்காது
கல்லறையில் வாழ்ந்தாலும்
மறவர் கர்வம் குறையாது

கொள்கையும் மாறாது
கொண்ட காயமும் ஆறாது
தாயக தாகம் தணியாது
மிளிரும் என்றும்

விரைந்து கண்ட கனவு
வீணே கலையாது
ஏற்றி வைத்த தீபம்
அணையா தொளிரும்

மாவீரர் தினம் என்றறிந்தோ
விண்ணிலவு வண்ணம் இழந்தது
சூரியக் கதிர்களும் தெரிந்தோ
அனலாய் கொதித்தது

மாய உலகே பாரு
இது உடைந்து போன தேரு
இதை கடந்து போன தாரு உறக்கமில்லா
ஊரு உருவமில்லா பேரு

கார்த்திகை பூக்கள் எல்லாம்
காகிதப் பூக்கள் அல்ல
கனிந்து வரும் நாளும்
வெகு தூரம் இல்லை இல்லை

கண்ணீரும் செந்நீரும் கலந்தது
போதும் கண் விழித்து பாரும்.
மீண்டும் வாரும் முகிற்
கூட்டங்களே அவரை மீட்டு வாரும்

மாவீரர் தோள்கள்
வனப்புற வேண்டிடுவோம்
அவரை வந்தனை
செய்திடுவோம் .

Tuesday, November 26, 2013

தேமொழியின் வரைபடம்


எதுவும் கடந்து போகும் 

http://www.vallamai.com/wp-content/uploads/2013/11/depression.png

http://www.vallamai.com/?p=40213



 மனித மனமே கேளு
மயக்கம் என்ன கூறு
கலங்கும் நெஞ்சே ஆறு
இது வாழ்வில் காணும் பேறு


எதுவும் கடந்து போகும்  
எண்ணம் கிடந்து வாட்டும்
எதையும் தாங்கும் இதயம்  
எளிதில் மறந்து போகும்


http://kaviyakavi.blogspot.ca/2013/09/blog-post_20.html?showComment=1385516494313#c1698670523300673425


என் கவிதைக்கு ஏற்ப தேமொழியின் அருமையான வரை படம் அவருடைய வலைதளமும் மேலே தந்துள்ளேன்.கவிதைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்ப  அருமையான ஓவியங்களை தானே வரைந்து படைத்துக் கொண்டு இருக்கிறார். அவரின் வலைதளத்தை சென்று பார்வை இட்டு ஊக்கம் தர  வேண்டுகிறேன் நன்றி வணக்கம்...!

Friday, November 22, 2013

நன்றி கெட்ட மாந்தருக்கு




நன்றி கெட்ட மாந்தருக்கு
நஞ்சு தான் நெஞ்சினிலே

நாவிலே வாளை வைப்பார்        
வஞ்சமும் வளர்த்திருப்பார்

வன்மப் பகையினையே
வார்த்தையில் கொட்டிடுவர் 

இஷ்டப்படி வர்ணம் 
பூசி மகிழ்ந்திடுவர்

சாதனையே புரிந்தாலும்
பைந்தமிழால் பாராட்ட மறுத்திடுவர்

இன்பத் தமிழாலே
இழித்தே உரைத்திடுவர்

அகலப் பரப்பிடவே
பாவம் என்றிடுவர்

விசும்பி அழுதிடுவர்
பழி தான் சொல்லிடுவர்

கானல் நீர் கலங்கி
நிற்கு தென்பர்

காட்டாறு முற்றத்திலே
கரை புரண்டு ஓடுதென்பர்

காற்றும் மழையும் தான்
போட்ட பிச்சை என்பர்

விண்ணகமும் மண்ணகமும்
தன்னகத்தே உண்டு என்பர்

தானே சரி என்று
தப்பாக கணித்திருப்பர்

தன்னை போல் ஒருவர்
இல்லை என்றே உரைத்திடுவர்

நிலையான வாழ்வு என்று
நினைத்தே குதித்திடுவர்

தான் மட்டும் வாழ வென்று
பிறரை தள்ளியே மிதித்திடுவர்

நல்லவர் உண்டு என்றா
வானம் பொழிகிறது

நட்டவர் பாவம் என்றா
வெய்யிலும் எறிக்கிறது

Saturday, November 9, 2013

ஆத்தா மகமாயி

 
ஆத்தா மகமாயி அன்பு 
செய்ய வருவாய் நீ
ஆலம் விழுதுகள் போல்
எமை தாங்கிடுவாயே நீ

நித்திய லக்ஷ்மியே என் 
நெற்றிக் குங்குமமே
சிவந்த மேனியளே என்
சந்தன போட்டவளே

நீ மங்களமாய் வீற்றிருக்கும் 
என் கழுத்து தாலியடி
என் நெஞ்சினில் நின்றெரியும்
குத்து விளக்கு நீ

கும்பிடும் போதில் எல்லாம் 
எனைக் கண்டு கொள்ள வேணுடி
குற்றம் என்று கண்டாலும்
நிறுத்திட வேணுமடி

பச்சை பிள்ளை என்னை நீ
பக்குவமாய் பாருமடி
இஷ்டப்பட்டு கேட்ப தெல்லாம்
என்னுள்ளே இசைத்திடடி

ஏகப்பட்ட  ஆசை எல்லாம்
எந்தனுக்கு இல்லையடி
ஏற்றம் காண வென்று
எதையும் கேட்கலடி

ஏந்தி வரும் உன்னழகை
பாடிடத்தான் ஆசையடி
தேவைபட்டா அத்தனையும்
மனசுக்குள் கேட்பேண்டி

மரகதப் பட்டுடுத்தி
பச்சை வண்ண தேரேறி
பவனி வரும் பேரழகை
பார்த்திடத்தான் ஆசையடி

பணி விடைகள் செய்திடவோ
பாத்தியதை இல்லையடி
பார்ப்பனரே என்றும் உனை
பக்கத்தில் பார்ப்பனரே

வித்தகரோ என்றும் உனை
வாழ்த்திப் வாயாரப் பாடிடுவர்
வர்த்தகரோ உனை வரம்
கேட்டு வாங்கிடுவர்

மற்றவர்கள் என்றும் உனை
மன்றாடிக் கேட்டிடுவர்
நாவாரப் பாடிஉனை  நான்
வணங்க வேண்டுகிறேன்










Sunday, November 3, 2013

பொன்னாடை


Paddy_fields : Paddy fields and coconut trees

பொன்னாடை போர்த்தி வந்தேன்
புகழாரம் சூட்டிவிட்டார் அகரமுள்ள
அழகான பட்சியின் பெயரை இட்டு
பாங்காக அழைத்திட்டார்.

நானும் இல்லை என்றால்
வாணாள் இல்லை என்றார்
குடி உயரும் கோன் உயரும்
என்னாலே தானே என்றார்

அட்சய பாத்திரத்தில்
அடங்கா இடமும் தந்தார் எனை
நன்றியுடன் மகிழ்விக்க பொன்னாடை
போக்கி  பொங்கலிட்டு  கும்பிட்டார்.

வாயார வயிறார வாழ்த்தும்
குணம் உண்டு செவ்வாடை
தரித்திருந்தால் கொஞ்சம்
முண்டு செருக்கெனக்கு

வந்தோரை எல்லாம் வாழ வைப்பேன்
பேதம் ஏதுமின்றி காத்திருப்பேன்
முடிதாங்கும் மன்னரும் பணிவரே எனையே
படைத்த இறைவனுக்கும் படியளப்பேன் நானே

விதியற்றோர் வாசலை நான்
நெருங்கவே மாட்டேன் பரந்த
வயல் வெளிகள் எனக்கோ ஏராளம்
நீரும் அருந்திட வேணும் வெகுநேரம்

நோயுற்றோரை நான் நலிந்து காப்பேன்
வறியோரை நான் கரைஞ்சு காப்பேன்
படையுடன் வந்தாலும் விடை பகர்வேன்
விருந்தென்று வந்தாலும்  அகமகிழ்வேன்.

இருந்தாலும் சோகம் எனக்கும் இருக்குதுங்க எடுதியம்பிட தன்மானம் தடுக்குதுங்க. கவலை இன்னா நீங்க தண்ணி   அடிப்பீங்க அதெல்லாம் எனக்கு பழக்கமிலைங்க உங்க கிட்ட சொல்லி ஆறலாமேன்னு உங்களுக்கு மட்டும்தான் சொல்லுகிறேன் ......ஷ்....ஷ்.....ஷ்....யாருக்கும் சொல்லமாட்டீங்க இல்லே.எனக்கு தெரியும் சொல்லமாட்டீங்க.

ஐயகோ அரும்பணி செய்யும் எனை
அரும்பாடு படுத்துகிறார் நன்றி கெட்ட
மானிடவன் நைய புடைகின்றான்
கொத்தடிமை கூட எந்தன் நிலை கண்டதில்லை

நெருப்பில் இட்டு வாட்டி வதைகின்றார்
நொந்து வெந்த பின்பும் வாயினில் போட்டரைப்பர்
வயிற்றிலும் குழைத்தெடுப்பர் கொஞ்சமும்
அஞ்சவில்லை பஞ்சமா பாதகத்திற்கு

என்னை உடுப்பை ஊறவைப்பது போல்
ஊறவைப்பார் அடித்து துவைப்பது போல்
எனை இடித்து அரித்திடுவர் என்ன கோபமோ
வானலியில் போட்டு எனை நன்றாய் வறுத்தெடுப்பர்

கோபம் இன்னமே தீரவில்லை
கொதி நீரில் இட்டு எனை குழைத்திடுவர்
பொல்லாத மனிதர் மர உரலில்
இட்டு மிதித்தே பிழிந்திடுவர்














அடங்கவில்லை இன்னும் ஆத்திரம் போல
ஆவியிலும் போட்டு என்னை அவித்தெடுப்பார்
ஐயகோ எமக்கொரு காந்தியில்லை
என்றென்றும்  சாந்தியில்லை


 


இது மட்டுமா இப்போது என்ன வென்றால்
நோய் நொடிகள் எல்லாமே என்னாலே வந்த தென்பர்
தித்திக்கும் சர்கரையோ வாழ்வினில் இல்லை
என்பர் மெய்யினில் இருக்கு தென்பர்

தொப்பையும் விழுகுதென்பார்
தொந்தரவு என்று  எண்ணி வெறுத்து
ஒதுக்குகிறார் நன்றி கெட்ட மாந்தரை
எண்ணி நான் புலம்புகிறேன்

உழைத்து உண்ணாமல் உட்கார்ந்து
உண்பதானால் இந்நிலை என்றறியாமல்
பேசுவதை என்ன சொல்வேன் நான்
விதியை நொந்திடுவேன்.
Computer_office : A silhouette of a businessman sitting in office chair and working on laptop computer isolated on white background
இது  மட்டுமா வாழ்ந்திருந்து
வதைத்தார்கள் என்றால் வாழ்ந்து மடிந்த
பின்னும் வாய்கரிசி என்று சொல்லி
வாயினில் இட்டிடுவார்