Friday, March 8, 2013

அம்மாவின் ஆசீர்வாதம்


 



அம்மா என்றழைப்பதிலே எத்தனை சுகம் 
அருகினிலே இருக்கையிலே எத்தனை பலம் 
அன்பினிலே தெரிகிறதே எத்தனை முகம் 
தினம் மனதார தந்திடுவார் ஆசீர்வாதம்     

ஊனினையே உருக்கியவர் உயிர் கொடுப்பார் 
உதிரத்தையே பாலாக்கி ஊட்டிடுவார் 
கண்ணின் மணி போல காத்திடுவார் 
தன்னலமே இன்றி அவர் பேணிடுவார் 

பெற்ற வலியினையே தாங்கி வலிமையாகிறார் 
பொறுமைதனைக்  கொண்டு பெருமை கொள்கிறார் 
கருணையே வடிவமாக காட்சி தருகிறார் 
தாயிற் சிறந்த கோவில் இல்லை என்று பேர் எடுக்கிறார்

துயரத்தின் சிகரத்தில் இருப்பார்  
குழந்தை முகம் பார்த்து அவர்  மறப்பார் 
அழும் போது தருவரே ஆறுதல் 
அணைப்பினிலே கிடைத்திடுமே தேறுதல்

குணத்தினிலே  ஒரு போதும் இல்லை ஒரு மாறுதல்
அம்மாவின்  இடத்தை இன்னும் நிரப்பவில்லை யாரும் 
அவர் அன்புக்கு ஈடு இணை எங்கேயும் இல்லை 
அவர் காலடியை தொழுதிருந்தால் போதும் 

நன்மைகளே தொடர்ந்திருக்கும் நாளும் 
அவர் பெருமை தனை பேச போதாது ஒரு யுகம் 
எவருக்கும் அதை எழுத காணாது மதியுகம் 
அவர்கள் செய்த தியாகங்கள் படைத்திடுமே பலயுகம் 



No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.