Friday, March 8, 2013

சொந்தங்கள்

ஒரு பொழுது ஒரு பொழுது சாய்ந்திடத் தோன்றும் 
மறு பொழுது மறு பொழுது வாழ்ந்திடத் தோன்றும் 
வாழும் போது வரை முறைகள் தடுத்திடக் கூடும் 
வருவதையே வரவேற்று வாழ்ந்திட வேணும் 

சோகங்கள் சூழ்ந்தால் சொந்தங்கள் தொலைந்தால் 
சுந்தரம் வாழ்வில் உருவாகுமா நெஞ்சமும் 
புண்ணானால் கண்களும் குளமானால் 
சுற்றங்கள் நின்று சுகம் கேட்குமா கேட்டால் 
சோகங்கள்  எல்லாம் சருகாகுமா

வார்த்தைகள் வரவில்லை என்றால் வழி சொல்ல முடியுமா 
பார்வை இல்லையென்றால் நிறம் காட்ட தோன்றுமா 
பகுத்தறிவு இல்லை என்றால் பிழைக்கத்தான் முடியுமா 
காதில் ஓசை விழவில்லை என்றால் பாட முடியுமா 

சிற்பியில்லை என்றால் சிலைகள் தோன்றுமா 
இரவு இல்லை என்றால் நிலவு தோன்றுமா 
நேரம் இல்லை என்றால்  பொழுது போகுமா 
வாழ்வு இல்லை என்றால் வழிகள் பிறக்குமா 

கவலையில்லாத மனிதன் உலகில் இருக்க முடியுமா 
இருந்துவிட்டால் மனிதனாக வாழ முடியுமா 
துணிவுகள் பிறந்தால் துயரங்கள் பறக்கும் 
வாழ்கையின் அர்த்தங்கள் சொந்தங்களே 
வரும் துன்பத்தை எல்லாம் வெல்லுங்களே  


No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.