Thursday, April 3, 2014

நன்றி சொல்ல வார்த்தை இல்லை




தை பொங்கலை முன்னிட்டு நடாத்திய கட்டுரை போட்டி


தணியாத தாகம் கொண்டு தமிழ் வளர்க்க எண்ணும் ரூபனும், பாண்டியனும் தமிழை யாசித்தும் சுவாசித்தும் கொள்ளும் இவர்கள் யோசித்து இணைந்து நடாத்திய வலைதள கட்டுரை போட்டி சிறப்பாக நடந்து முடிந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சியே. அவர்கள் மேன் மேலும் தமிழ் மணம் பரப்பி பூவோடு சேர்ந்து நாரும் பரகதி அடைவது போல் தாமும் வாசமுற்று வையகமும் வானகமும் போற்றிடும் வகையில் போட்டிகள் பலவும் நடத்தி நல்ல நட்பையும் நல்ல பெயரையும் சம்பாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 

அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கு வதற்காகவே இப் போட்டியில் நான் பங்குபற்றி இருந்தேன். ஆனால் எழுதுவேனா என்பது கூட எனக்கு தெரியாது முயற்சி செய்வதில் தவறொன்றும் இல்லை என்று எண்ணியே எழுதினேன். ஆனால் பரிசினை வெல்வேன் என நினைத்தே பார்க்க வில்லை மட்டில்லா மகிழ்ச்சியே. 
அவசரமான இந்த உலகத்தில் நேரம் என்பது கிடைப்பது மிகவும் அரிது விலைமதிக்க முடியாதது. எத்தனை அலுவல்களுக்கு மத்தியில் இந்நிகழ்ச்சியை சிறப்பிக்க அந்நேரத்தை வழங்கி ஆதரித்தும், எனக்கு
இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய நடுவர்களாகிய ,பெருமைக்குரிய கவிஞர் திரு  முத்துநிலவன் அவர்களுக்கும், கவிஞர் திரு வித்தியாசாகர், அவர்களுக்கும் கவிஞர் திரு  செல்லப்பா அவர்களுக்கும்  மற்றும் ஆலோசனைகளையும் வழங்கி, வழிநடத்தி சென்ற சகோதரர் திரு ரமணி ஐயா அவர்களுக்கும், திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்....!  
இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி சிறப்பித்த அனைவருக்கும், போட்டியில் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

http://kaviyakavi.blogspot.com/2014/01/blog-post.html?showComment=1396568378344#c9119083146556205765


இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்

 

26 comments:

  1. வணக்கம்
    அம்மா
    தங்களின் நன்றி மழை பொழிந்த விதம் கண்டு உவகை கொண்டேன்
    திறமைக்கு கிடைத்த வெற்றி மகுடம் மேலும் பல வெற்றி மகுடம் சூட்ட எனது வாழ்த்துக்கள் அம்மா

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன்!
      ஓஹோ புத்தாண்டு வந்து விட்டதல்லவா. உவகை பூத்துக் குலுங்க வரும் உமை தேடி, இனிய புத்தாண்டு ! வாழ்த்துக்கள் ! உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்......!
      உடன் வருகையும் கருத்தும் மனதை நிறைத்தது. நன்றி!

      Delete
  2. மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ....!

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி தோழி....! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  4. மேலும் மேலும் வளர்க!..
    மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா ! வருகைக்கும் வாழ்த்துக்கும்.
      தங்கள் ஆதரவு என்னை நிச்சயம் வளர்க்கும்.
      வாழ்க வளமுடன்...!

      Delete
  5. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
    தங்கள் கட்டுரையை படித்தவுடனே தெரிந்தது, கண்டிப்பாக ஏதாவதொரு பரிசைப் பெரும் என்று. என் எண்ணம் பொய்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை ஹா ஹா அது இன்னும் என்னை இன்னும் ஊக்கப் படுத்துகிறது. சகோதரா.
      வாழ்க வளமுடன்.

      Delete
  6. வாழ்த்துக்கள் சகோதரி! மேன் மெலும் பல பரிசுகள் இந்த சித்திரையில் பூக்கட்டும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  7. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    தங்களின் இந்த பதிவு கண்டு மகிழ்ச்சியும், தங்களின் நல்ல உள்ளம் கண்டு நெகிழ்ச்சியும் அடைகிறேன் சகோதரி. போட்டியில் எங்களது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க கலந்து கொண்டமைக்கு நன்றிகள், பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் சகோதரி. தங்களின் படைப்புகள் இணைய வானில் உயர பறந்து ம்குடம் சூட்ட வேண்டுமென்பதே எனது ஆசை. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா ! மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கொண்ட வாழ்த்திற்கு.தங்கள் ஆதரவு இருந்தால் நிச்சயம் நடக்கும். தங்கள் அன்பும் ஆதரவும் தான் என்னை இதுவரை இழுத்து வந்துள்ளது சகோ தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  8. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்திற்கும்.
      வாழ்க வளமுடன்...!

      Delete
  9. வாழ்த்துகள் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள்... அதுதான் பரிசுகளின் உண்மையான பலனாக இருக்கும். நன்றிக்கு நன்றியாகவும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டும் சகோதரா! மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும். தங்கள் ஆதராவும் நட்பும் என்னை நகர்த்தி செல்லும் நிச்சயமாக.
      வாழ்க வளமுடன்.....!

      Delete
  10. நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
      வாழ்க வளமுடன்...!

      Delete
  11. இனியா செல்லம் வாழ்த்துக்கள்:)))
    உங்க பதிவை பார்த்தவுடனே நினைத்தேன் . அதுபோலவே வென்றுவிட்டீர்கள் ! உங்கள் பதிவுக்கு நீங்கள் எடுத்துக்கொண்ட அந்த கடின உழைப்பு உங்களுக்கு இதை வெற்றியை தந்திருக்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா வாங்க எங்கே காணோம் என்று பார்த்தேன். உங்கள் வாழ்த்தை விடவும் தங்கள் அன்பு என்னை அசத்திவிட்டது.
      தங்கள் அன்பும் நட்பும் என்றும் தொடர வேண்டும்.என் இனிய தோழியை பார்க்க வேண்டும் எனும் ஆவல் இன்னும் பெருகுகிறது, இவை கிடைக்க என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே..! என்று எண்ணி மகிழ்கிறேன்.
      தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி .....!
      எல்லா நலன்களும் கிட்டவேண்டும்.
      என்றும் இன்பமே சூழ வேண்டும்
      பொல்லாப்பு எல்லாம் விலகிட வேண்டும்-இனிய
      புத்தாண்டில் புகழோடு புத்துணர்ச்சி பெற்று வாழ வாழ்த்துகிறேன்...!

      Delete
  12. தங்கள் பதிவை வரவேற்கிறேன். தங்கள் பதிவை எனது தளத்தில் பகிர்ந்த இணைப்பைக் கீழே தந்துள்ளேன்.
    http://yppubs.blogspot.com/2014/04/kaviyakavi.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகை மிக்க மகிழ்ச்சி!
      வருகைகும் கருத்துக்கும் நன்றி !
      வாழ்த்துக்கள் ...! தொடர்கிறேன் தங்கள் வலை தளம்.

      Delete
  13. தங்கள் அற்புதமான கட்டுரை பரிசுக்குரியதாக
    தேர்ந்தெடுக்கப்பட்டது அதிக மகிழ்வளிக்கிறது
    பதிவுகளும் பரிசுகளும் சாதனைகளும் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வாழ்த்துகள் சகோதரி ..

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.