Monday, April 29, 2013

நெற்றிக் கண்ணனே





ஆண்டவனே ஒரு முறை நான் பார்க்க வேண்டுமே 
 பட்டதெல்லாம் போதும் என்று கேட்கவேண்டுமே  
பாத்திரத்தை ஏந்துவது எங்கள் குற்றமா
படைத்தவன் கணக்கினிலே உள்ள குற்றமோ
 நெற்றிக் கண்ணனே நாம் உனது  வம்சமா
எம் நெற்றியிலே எழுதியதும் உனது  வேலையா 
 

பிட்சை என்பது உனக்கு  இஷ்டமானதா 
எத்தனை முறை அதை நாம் உச்சரிப்பது 
உச்சாடனம் செய்யவது மந்திரமா 
 நம் இன்னல்கள்  உந்தனுக்கு இன்பமானதா நீ  
 விளையாட துடிக்கும் எம் நெஞ்சுகள்  மைதானமா 

நெஞ்சு அஞ்சி தினம் தினம் செத்து மடியுதே 
 பரிதவிக்கும் எங்களுக்கோ ஈர நெஞ்சமே
படியளக்கும் பரமனுக்கோர வஞ்சமே
ஒழித்து வைத்த எறும்பினிற்கு உணவு தந்தாயே 
பட்டினியில் வாடும் எம்மை அலைய விட்டாயே

 விருந்தாளி போல நோய்கள் வந்து போகுதே
வலிமை இழந்த உடலும் வளைந்து போகுதே  
 பசி இன்றி வாழ ஒரு வரம் வேண்டுமே
விதியின்றி வாழ ஒரு வழி இல்லையோ

துன்பம் இன்னும் தொடரும் என்று எழுதிவிட்டாயோ 
நம் பாவங்களை ஆண்டவன் நீ பொறுப்பதில்லையோ 
பழி வாங்க நீ ஒன்றும் மனிதன் இல்லையே
மனித நேயம் மனிதருக்கு இருப்பதில்லையே  

நாட்டில் உள்ள துன்பங்களை நீக்கிவிடு 
உன் விளையாட்டை கொஞ்ச நேரம் நிறுத்தி விடு 
பாவி எம்மை படுத்தாமல் வாழவிடு 
எப்போதும் நல் வழியில்   போகவிடு 

(நதி வழி தானே ஓடமும் போகும் )
(விதி வழி தானே  நாமும் போவோம் )   




No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.