Friday, July 26, 2013

உள்ளம் கொள்ளை போனதே



உள்ளம் கொள்ளை போனதே
உயிரும் உன்னை சார்ந்ததே
உள்ளத்தில் கள்ளம்  இன்றி
ஊஞ்சலும் ஆடுதே

உன்னை எண்ணி தினம்
கோலமும் போடுதே
முள்ளி செடியே கேளு
முழுநிலவே கேளு அவள்

உன்னை விட ரொம்ப அழகு
சிரிப்பதிலும் சிக்கனமோ
சிலை என்பார் இல்லை என்றால்
தங்க ரதம் வருகுதென்று
ஊர்கோலம் வந்திடுவர்

நீ பார்த்தால் உறைந்திடுவாய்
நிறைந்த அம்மாவாசை ஆவாய்
நீ சென்று எனக்காய் தூது
சொல்ல வேண்டும்

அவள் உள்ளத்தில் குடியிருக்க
உத்தரவு வேணும் என்று கேளு என்
மன நிலையை கொண்டு சென்று சேரு
மலையருவி போல மனசெல்லாம்
நனையுதென்று சொல்லு

கட்டாறுபோல கவிதையும்
பாயுதென்று சொல்லு
மீட்டருக்கு மேலால காய்ச்சலும்
வருகுது என்று சொல்லு

ஒற்றையடிப் பாதையிலும்
தனிமையாய் ஓடுது
வெட்டவெளியில் நின்று
வட்டமும் போடுது வானமும்
பூமியும் கிட்டவாய் தோன்றுது

பக்கத்தில் நிற்பது போல்
பாவனை புரிகிறது கைகளால்
தொட்டிடலாம் போலவும்
இருக்கிறது என்றும் சொல்லு

வானவில்லும் மத்தாப்பபூபோல்
வந்து வந்து போகிறது  வெள்ளிகளை
பிடித்து வைத்து விளையாட விளைகிறது
பார்க்கும் இடங்கள் எல்லாம்
பாவை முகம் தெரிகிறது

கண்டதில்லை இந்த நிலை சொல்லு
கொண்டாளா இந்த நிலைகேளு
பறவைகளை பிடித்து வைத்து கவிதை
சொல்ல பிடிக்கிறது கால்நடையின்
காதுகளில் சொல்லிடவும் துடிக்கிறது
மரங்கள் செடி கொடிகள் பேசுவது

புரிகிறது மண்புழுவும் என்தனுக்கு
மனிதனாக தெரிகிறது மனசெல்லாம்
சந்தோஷம் சங்கீதம் பாடுதென்று சொல்லு 
வேறிடத்தில் நீ என்று வேதனையாய்
இருக்கிறது விரைவில் எனைசேர
வேண்டும் என்று சொல்லு





1 comment:

  1. உணர்வுகளை தூது விடும் வரிகளாகக் கவிதை மிகவும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.