Saturday, April 13, 2013

கண்டிப்பு






 கண்களில் என்ன கலவரம் 
காற்றினில் கலந்து மழை வரும் 
கார்த்திகை விளக்கு ஒளி தரும் 
கவலைகள் மெல்ல வெளி வரும் 
இளம் பருவத்தில் இது தான் நிலவரம் 
காதல் கொண்டால் சரி வரும் 
பகலிலும் கனவு வரும் 
உறக்கத்திலும் நினைவு வரும் 
தன் மேலும் ஒரு பிடிப்பு வரும் 
பல ஆடைகள் அணிய ஆசை வரும் 
இடம் தெரியாமல் சிரிப்பு வரும் 
பல சமயங்களில் குளப்பம் வரும் 
பகுத்தறிவின்றி நடக்க வரும் 
பார்ப்பவருக்கோ வெறுப்பு வரும் 
பெற்றவருக்கோ கோபம் வரும்
வாழ்வே மாயம் பாடவரும் 
பெற்றவர் சம்மதம் பெற்றவரும் 
காதலில் வெற்றி கண்டவரும் 
இனிமை  என்றும்  சேர்ந்து வரும்
இருவரும் சேரும் நாளும் வரும் 
திருமண நாளும்  கூடி வரும்
பெற்றவர்கள் ஆனவரும் 
பிள்ளைகள் நிலை தனை காணவரும்
தாம் செய்தது மறந்து விடும்   
தவறு என்று தெரியவரும்  
எல்லாம் தலைகீழ் ஆகிவிடும்
                 கண்டிப்பும் தொடங்கி விடும்                

 

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.