Wednesday, April 24, 2013

மண்ணின் மைந்தர்

கார் மேகமே வலிக்கின்றதே  
பார் மேகமே சொந்தமண் கண்ணீர் சொரிகின்றதே 
மண்ணின் மைந்தர் எங்கே காணவில்லையே 
எங்கு தேடியும் தென்படவில்லையே 
மேகமே மறைத்து வைத்தாயோ 
ஒரு முறை காட்ட மாட்டாயோ 
நட்சத்திரமாய்  மின்னுகின்றாரோ 
இல்லை ஒளி தர மெழுகுவர்த்தியாய் உருகிப்போனாரோ
சூரியக் கதிர்களாகி பகைவரை சுட்டெரிப்பாரோ 
கல்லறையில் தூங்குகின்றாரோ  
சற்று நேரம் இளைப்பாறவாமோ 
கருவறை அழுகின்றதே தழுவிடத் துடிக்கின்றதே 
நெஞ்சும் நெருப்பில் வேகின்றதே
வெற்றிடத்தை நிரப்ப வழியின்றி தவிக்கின்றதே  
வெறிச்சோடி கிடக்கின்றதே வீதி கிடக்கின்றதே 
எங்கே அந்த வீரர்கள் வீறுநடை போட எங்கே அந்த வீரர்கள் 
மறவர் குல மாணிக்கங்கள்  மதுரமாய் வீசுங்கள் வீணையாய் 
மாறுங்கள் விளையாடிப் பாருங்கள்  காற்றினில் 
கலந்து கானம் இசையுங்கள் ஈழம் நமதென்று முரசு கொட்டுங்கள்
உம் இழப்பை நாம் ஈடு செய்யவே
உரிமை கீதம் பாடுங்கள்  
உம் கனவு ஈடேறும் என்றே நம்புங்கள்  

4 comments:

  1. நல்ல வரிகள்

    நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி...!
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி....!
      தொடர வேண்டுகிறேன்....!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  2. மறைவரோ எங்களின் மாவீரர் உள்ளே
    பிறைபோல் வளர்வார் பொலிந்து!

    தோழி நீங்கள் தந்த இணைப்பை இன்றுதான் பார்க்கின்றேன்..

    உணர்வினைக் கொட்டி உருவேற்றியுள்ளீர்கள் கவிவரிகளில்..

    வாழ்த்துகிறேன் உங்களை!

    மறவர்களை வனங்குகின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி ....! உங்கள் வரவும் அன்பான கருத்துக்களும்
      மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் வலுவாக வழங்குகின்றது தோழி
      ரொம்ப நன்றி.....!
      எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.