Saturday, April 13, 2013

தியாகம்

மாவீரர் அவர் மாவீரர் மீள்வரா அந்த மாவீரர்
மாளவில்லை அவர் மாளவில்லை
மீள்வதற்கு அவர் மாளவில்லை
வாழுகிறார் அவர் வாழுகிறார்
தமிழ் நெஞ்சங்களில் அவர் வாழுகிறார்

ஒழியவில்லை அவர் ஒழியவில்லை
உலவுகிறார் அவர் உலவுகிறார் 
அன்பு உள்ளங்களில் அவர் உலவுகிறார்
மாவீரர் தினங்களிது  மக்கள் சேரும் நேரம் இது
வணங்க வேண்டிய தருணம் இது

ராமர் கூட பல லக்ஸ்மனராக வாழ்ந்தாரே
அஞ்ஞாத வாசத்தை அநுஷ்டித்தார் வனத்தினிலே
தமிழே எனது மூச்சென்று தரணி வியக்க வைத்தாரே
தாயகம் என்ற வேதத்தை ஓதிக் கொண்டு நின்றாரே
உரிமை காக்க வேண்டும் என்று உயிரை தியாகம் செய்தாரே

ஒட்டு மொத்த உறவுகளையும் விரும்பி விட்டு சென்றாரே
ஊன் உறக்கம் இன்றி அவர் தாய் மண்ணை காத்தாரே
இளமை காலம் முழுவதையும் நம் விடிவுக்காக தொலைத்தாரே
கன்னியரை நாடவில்லை கண்ணிவெடி கோத்தாரே
காதல் சேஷ்டை செய்யவில்லை போரில் சேஷ்டை செய்தாரே

நாட்டின் கண்கள் பெண்கள்  என்று புறப்படாரே போருக்கு
அடுக்களை இனி நமக் அடுக்காதென்று ஆயுதம் ஏந்தி நின்றாரே
நெற்றி குங்குமம் தேவை இல்லை என்று நெஞ்சில் குறி வைக்க நின்றாரே
கூந்தலை முடித்து அனலை கக்கி சாதனைகள் செய்தாரே

வெற்றி வாகை சூட வரம் வாங்கவில்லையோ
பெற்றெடுத்த பூமி அது தாங்கவில்லையே
எமை தத்தெடுத்த போது நாமும் ஏங்கவில்லையோ
இதை பார்த்த இரவு பல இரவு தூங்கவில்லையே
இந்நிலமை கண்டு நிலவு கூட நொந்து போனதே

சிந்தித்ததிலையே ஒரு போதும் சிதறி விட்டோமே முத்துகள் போல
சேர்த்தெடுத்து எமை கோத்திடடுவாரோ வெற்றியின் போது
சூடிடுவாரோ விதி தானே அது விளையாடும்
வெற்றியினையும் வேண்டிதரும்
                      

2 comments:

  1. பாடினை அவர்பெருமை பைந்தமிழில் நன்றாய்ச்
    சூடினை புகழ்மாலை சோதரியே! நாடிதனை
    நன்றே உணர்ந்ததுவே நம்வீரர் பெருமைகளை
    இன்றேனும் இங்குளார் எண்ணுவரோ சொல்!

    மிகமிக அருமை! ஆதங்கமும் வேதனையும் மிகுந்த கவிவரிகள்!

    ஆழ்ந்து ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி நம்பிக்கை இழக்கும் நேரம் நம்பிக்கை ஒளி தரும் கருத்துக்கள், மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது தோழி உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி....!
      வாழ்க வளமுடன்....!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.