Thursday, March 20, 2014

இனியமகள் இளமதிக்கு

 

இளையநிலா வளர்கிறது
இரவினிலே ஒளிர்கிறது
 இடையிடையே தேய்கிறது
இனிமைதர உலவுறது
 

இணையநிலா வலம் வருகிறது-நல்
இதயங்களில் தவழ்கிறது
கவிதைகளும் பொழிகிறது
கைவேலை மிளிர்கிறது

அன்போடுஅறிமுகங்கள்
அழகான கருத்துரைகள் 
ஆதங்கம் ஆழ்மனதில்
அடிக்கடியே நச்சரிக்கும்

இணைய நிலா வாழ்க-நீ
இன்னலின்றி வாழ்க!
எண்ணம் எல்லாம் ஈடேறி
இனிமையாக வாழ்க!

இளையநிலா இசைவாயா
இனியமகள் இளமதிக்கு-என்
இனிய வாழ்த்தை
செப்பிடவே சென்று!


26 comments:

  1. இளையநிலா
    இசைந்தே
    இளமதிக்கு
    இனிய வாழ்த்தை
    கொண்டு சேர்க்கும்.

    நிலா விடு தூது
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே !
      மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்! உடன் வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்.....!

      Delete
  2. ஆகா...! மனதை கவர்கிறது - படமும் வரிகளும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே! ஹா ஹா கவர்கிறதா.? மிக்க மகிழ்ச்சி! ஆனால் உரியவரை சென்றடையுமா தெரியலையே.மிக்க நன்றி! சகோ வாழ்த்துக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  3. வணக்கம்
    அம்மா.

    வாழ்வாங்கு வாழ்கவென்று வாழ்த்தும் கவிமாலை.....மிக அருமையாக உள்ளது
    படங்களும் அழகு ........வாழ்த்துக்கள்.

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன் !
      மனம் குளிர இடும் கருத்து
      என்னை மெருகூட்டும்
      புதுக்கவிதை படைக்க
      அது வழி காட்டும்.
      நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துக்கும்....!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  4. அழகு கவி கண்டு
    தங்கள் அன்பு எண்ணம் ஈடேற
    உலகொன்று உலாப் போய்
    சொல்லிற்று சேதி. :-)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் இமா !
      மிக்க மகிழ்ச்சி ! விண்நிலவு நோகாமல் இந்த மண்நிலவு சென்று செய்தி சொல்லிற்றோ, ஆஹா அருங் குணம் கொண்ட, நற் செய்தி தந்த நங்கையே நீயும் வாழ்க என்றும் வளமாக ....!
      மிக்க நன்றி இமா வருகைக்கும் கருத்துக்கும்.
      தொடர வேண்டுகிறேன்.....!

      Delete
    2. தங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் ! இமா!

      Delete
  5. இளையநிலா இசைவாயா
    இனியமகள் இளமதிக்கு-என்
    இனிய வாழ்த்தை
    செப்பிடவே சென்று!//

    ஆஹா! தூது அருமை! நிலா இளம்திக்கு வாழ்த்தைக் கண்டிப்பாகச் சேர்த்துவிடும்! மிக அருமை சகோதரியே!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே! உங்கள் வாக்கு பலித்து விட்டது செய்தி உரிய இடத்தில் சேர்ந்து விட்டது.மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன்....!

      Delete
  6. இணைய நிலா குறித்த கவிதை
    மிக மிக அருமை
    வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய
    அருமையான கவிதைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  7. அட ! நானே நிலாநிலா ஓடிவா னு பாடலாம்னு நினைத்தேன்!
    தோழி ன தோழிதான்!
    தலைப்பை பார்த்தவுடனே இளையநிலா தான் நினைவுக்கு வந்தார்!
    அருமை தோழி! நிலா வாங்க, நாங்க காத்திருக்கோம்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நிலாவா இருந்தால் இவ்வளவுக்கும் வந்திருப்பேனே தோழி நான் தான் நிலா இல்லியே..... ஆண்டவன் அனுக்கிரகம் இருந்தால் நிச்சயம் உங்களை எல்லாம் காண வருவேன். நானும் ஆவலாகவே உள்ளேன் தோழி!
      மிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்.!

      Delete
  8. இணைய நிலா வாழ்க-நீ
    இன்னலின்றி வாழ்க!

    இனிமையாக வாழ்க!
    இளையநிலா இசைவாயா

    இனியமகள் இளமதிக்கு-என்
    இனிய வாழ்த்தை..!
    இனிய கவிதைக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும்...!

      Delete
  9. இணைய நிலா வாழ்க - நீ
    இன்னலின்றி வாழ்க!
    எண்ணம் எல்லாம் ஈடேறி
    இனிமையாக வாழ்க!..

    மங்கலகரமான சொற்கள்.. மனம் மகிழ்கின்றது..
    இணைத்திருக்கும் படங்கள் அழகு!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      மிக்க நன்றி !வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  10. பெண்மைக்குப் பெண்மை வாழ்த்திடும் இன்கவிதை!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா காதலர்கள் தான் வாழ்த்தவேண்டும் என்று கட்டாயமா என்ன ?
      வாழ்த்தை யாரும் யாருக்கும் வாழ்த்தலாமே இல்லையா? நான் சொல்வது சரிதானே சகோதரரே!
      மிக்க நன்றி சகோதரரே! வருகைக்கும் கருத்துக்கும்...!
      வாழ்க வளமுடன்.....!

      Delete
  11. ஒரு நிலவு மற்றொரு நிலவிற்கு தூது செல்கிறதா? வித்தியாசமான சிந்தனை தான். அழகான கவிதை. படங்களும் அழகு.
    என்னுடைய வாழ்த்தையும் இளமதிக்கு சேர்த்து விடுங்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ !
      நிச்சயமாக அவர் நிறைவாய் வாழ எல்லோருடைய வாழ்த்தும் இளமைதிக்கு கிட்டும் தன்னால்.

      பயணம் நன்றாக அமைந்ததா சகோ. மிக்க மகிழ்ச்சி வந்தவுடன் வலையுலகை காண வந்தமைக்கும் கருத்துப் பகிர்ந்தமைக்கும். மிக்க நன்றி!
      அடடா தாயகம் சென்று விட்டு வலையுலக நட்புகள்
      யாரையும் பார்க்கவில்லையா நேரம் கிடைக்கவில்லை போலும்.
      சரி அடுத்தமுறை பார்த்துக்கலாம் இல்லையா. இனியாவும் ஓவியாவும் நலம் தானே.நன்றி வாழ்த்துக்கள்...!

      Delete
    2. பயணம் இனிதாக முடிந்தது.
      ஆமாம் நேரம் தான் பத்தவில்லை.
      நம் வலையுலக நண்பர் சரவணன் - ஸ்கூல் பையன் அவர்களை மட்டும் அவரது இல்லத்தில் சென்று பார்த்தேன். நான் பார்த்ததோ வெள்ளிக்கிழமை காலை, மற்ற நண்பர்கள் வேலைக்கு சென்று விட்டதால், அவர்களையெல்லாம் பார்க்க முடியவில்லை.
      ஓவியாவும், இனியாவும் நலம். நன்றி சகோ.

      Delete
  12. இளைய நிலாவுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. எங்களது வாழ்த்துக்களை சேர்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.