Thursday, February 13, 2014

காதலர் தினம் வாழ்க



      happy valentines day gif photo: Happy Valentins Day Gif valentines-day-3.gif       


காதலர்  தினம் வாழ்க 
காதலர்கள் வாழ்க .....!
கனவுகளை கற்பனையை 
வெல்க வெல்க...!
வீதியிலே வலம்வரும் 
வாலிபர்கள் வாழ்க
வான்னிலவு தேடிவரும் 
புன்னகைகள் வாழ்க 
பூத்துக் குலுங்கும் ரோஜாபோல் 
பொலிவுடேனே வாழ்க
அன்னநடை சின்னஇடை
பைங்கிளிகள் வாழ்க
அச்சம் மடம் நாணம் 
பயிர்ப்பு அலுங்காமல் வாழ்க 
இஷ்டப்பட்டு கஷ்டம் 
கொள்ளும் இதயங்கள் வாழ்க....!
இன்பம் பொங்க என்றும் வாழ்க வாழ்க....!


happy valentines day gif photo: Valentines Day Happy Roses Chocolate Animated Animation Animations Gif valentines_day_053.gif


இதயம் ஒன்றானால் 
காதல் பிறக்கும்
கண்கள் கலந்திடவே 
கவிதை உயிர்க்கும்
இறையருளும் சேர்ந்து 
விட்டால் கைகள் கலக்கும்




காதல் கொள்ள 
கொள்ள பரவசம்
அதில் கனவுகளும் 
கற்பனையும் இலவசம்
உடல் பொருள் ஆவி 
எல்லாம் உன்வசம்
உற்றவரும் பெற்றவரும் 
தென்பட வில்லை
உருகி உருகி காதல் செய்வார் 
தன்வசம் இல்லை

பறவைகளும் விலங்குகளும் 
கொள்ளும் இந்தக் காதல்
சுதந்திரமாய் காதலிக்கும் 
இல்லை ஒரு காவல்
ஜாதி மத பேதமில்லை 
கட்டுப்பாடு இல்லை
பணம் பதவி கௌரவமும் 
தேவையே இல்லை
தற்கொலையும் தோல்விகளும் 
இல்லவே இல்லை

கற்றவரும் பாமரரும் 
கொள்ளும் இந்தக்காதல்
முற்றும் துறந்த முனிவரையும் 
வென்று விட்ட காதல்
முத்தமிழ் வித்தகரும் 
வீழுகின்ற காதல்
முத்துகுமரன் அவன் 
முக்குளித்த காதல்
பட்டுப் போன அத்தனையும் 
தளிர வைக்கும் காதல்

பித்துபிடித்தே காதலரை 
கொன்று விடும் காதல்
மோதலிலே பிறக்கும் 
காதல் வாழும்
காதலினால் மோதல் 
பிறக்க வீழும்
வாழுகின்ற காதல் 
எல்லாம் காவியம்
வீழுகின்ற காதல் 
எல்லாம் வெறும் ஓவியம்.

21 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    காதலர் தினத்தில் காதலர்களை வாழ்த்தும் கவிமாலை தித்திக்குது.... .படங்கள் அனைத்தும் மிக அழகு.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. காதலர் தின வாழ்த்துக்கள் ரூபன் !
      முதல் வருகை மிக்க மகிழ்ச்சி ! அன்பான கருத்தும் வாழ்த்தும் என்னை நிச்சயம் என்றும் மேம்படுத்தும்.
      அன்புக் காதல் வென்றிடவும்
      இன்பக்கடலில் நீந்திடவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

      Delete
  2. வணக்கம்
    அம்மா.

    வலையுலக வானில் சிறகை விரித்து பறக்கும் கவியின் வரிகள் என்மனதில் பசு மரத்தாணிபோல.... பதிந்துள்ளது.... தொடர்ந்து கவிகள் படைக்க எனது வாழ்த்துக்கள் அம்மா.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டும் ரூபன் !
      தங்கள் தயவு இருந்தால் போதும் சிறகை விரித்து விடுகிறேன். ஆனால் விழுந்தால் நீங்கள் தான் தாங்க வேண்டும் சரி தானே... ஹா ஹா நன்றியப்பனே தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.

      Delete
  3. வளமுடன் வாழ்க...

    அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. காதலர் தின வாழ்த்துக்கள் சகோதரா..!

      ஆஹா திருக்குறள் போல் அழகாக சொல்லி விட்டீர்கள்.
      பெரிய விடயத்தை எவ்வளவு எளிதாக....
      நன்றி வாழ்த்துக்கள்...!

      Delete
  4. வான்னிலவு தேடிவரும்
    புன்னகைகள் வாழ்க
    பூத்துக் குலுங்கும் ரோஜாபோல்
    பொலிவுடேனே வாழ்க

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி !
      மிக்க நன்றி ! வரவுக்கும் கருத்துக்கும் தோழி..!
      வாழ்க வளமுடன்...!

      Delete
  5. காதலர் தின வாழ்த்துக்கள் சகோதரி.
    தங்களின் காதல் கவிதையை ஒரு தடவைக்கு இரு தடவை ரசித்து படித்தேன் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் என்றும் காதல் அழியாது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரா..!
      தங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
      நன்றி ! வாழ்க வளமுடன்....!

      Delete
  6. அருமையான கவிதை வரிகள் ! வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்...!

      Delete
  7. சிறப்பான வாழ்த்துப்பாடல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா ! நீண்ட நாட்களின் பின் தங்கள் வருகை கண்டு ஆனந்தம் அடைந்தேன். மிக்க நன்றி ! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும். மன்னித்துக் கொள்ளுங்கள் வராமைக்கு இனி தொடர்கிறேன்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
    2. வாருங்கள் சகோதரா !
      நீண்ட நாட்களின் பின் தங்கள் வருகை கண்டு ஆனந்தம் அடைந்தேன்.
      மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரா வராமைக்கு இனி தொடர்ந்து வருகிறேன்.
      நன்றி வாழ்க வளமுடன்....!

      Delete
  8. //அச்சம் மடம் நாணம்
    பயிர்ப்பு அலுங்காமல் வாழ்க//
    சரியான நினைவூட்டல் .
    //இஷ்டப்பட்டு கஷ்டம்
    கொள்ளும் இதயங்கள் வாழ்க....!//
    அழகான வரிகள்,வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!
      தங்கள் வருகையும் சிறப்பான கருத்தும் என்றும் எனக்கு மிகவும் ஊக்கம் கொடுக்கும் ஊட்டச்சத்தே மிக்க நன்றி !
      வாழ்க வளமுடன்....!

      Delete
  9. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே!
      தங்கள் வருகை என் பாக்கியம் நீண்ட நாட்களின் மிக்க மகிழ்ச்சி.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ! வாழ்க வளமுடன்....!

      Delete
  10. //முத்துகுமரன் அவன்
    முக்குளித்த காதல்
    பட்டுப் போன அத்தனையும்
    தளிர வைக்கும் காதல்//
    தளிர்ந்தால் மகிழ்வு...
    வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா !
      தங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி யடைந்தேன். ஊட்டம் தரும் கருத்துகளை காணாவிட்டால் வாட்டமுறும் என் வதனம். மிக்க நன்றி ! வாழ்கவளமுடன்....! .

      பின்னே இல்லையா சும்மாவா சொன்னார்கள் கோழையையும் வீரனாக்கும் கொடுமைகளை குறைத்து விடும் (திருந்துதல்) அதுவுமில்லாமல் வாழ்கையில் எல்லாம் இழந்து பிடிப்பற்று வாழ்வதில் என்ன பயன் என்று நினைக்கும் போது கூட காதல், அன்பு மிளிர கடலில் தத்தளிக்கும் ஒருவன் ஒரு துரும்பு கிடைத்தாலும் போதும் என்று நீந்தி கரை ஏறுவது போல் நீந்தி விடுவான் அல்லவா. இதையே குறிப்பிட்டேன்.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.