Thursday, February 7, 2013

அம்மா




ஒவ்வொரு வீட்டிலும் உள்ளதம்மா தெய்வம்
நாம் ஊர்எல்லாம் தேடி அலைகின்றோம் 
தன்னலம் பாராது எமைகாக்கும் கருணைதெய்வம் 
அதுதானே  அம்மா என்கின்ற அன்புருவம் 

பாலுக்குஅழுதால் பதைபதைத்தாயே  அம்மா    
பட்டினிகிடந்தால் விட்டிடுவாயே உயிரை ஒருகணமே 
ஏதும் முட்டிவிட்டலோ முட்டிடுமே உன்கண்கள் குளமாக 
உறங்கவில்லை என்றால் உறங்கிடாமல் விழித்திருப்பாயே அம்மா 

நோயினில் விழுந்தால் நொடிந்திடுவாயே  மருந்தாய் ஆவாயே
ஆனந்தமாகவே உன் சுகங்களை எல்லாம் 
எமக்காய் தொலைத்தாயே மெழுகுவர்த்தி
போலவே உருகி நின்றாயே

அம்மா என்று அழுதால் வாரி அணைத்திடுவாயே நெஞ்சோடு 
இதுஉன் அன்பினில் விளைந்த செங்கூடு
என்றும் இருந்திட வேண்டும் நன்றியோடு  
இதை அறியாதோரே மண்மேடு 


 

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.