Tuesday, February 26, 2013

ஆறுபடை வீடு


 




ஆறுபடை வீடு உண்டு 
முருகா உனக்கு
ஆத்துக்காரி ரெண்டு 

இருக்குது முருகா
 

ஆறுமலை ஏழுமலை 
என்று உனக்கு
அதிகமான சொத்து 

இருக்குது முருகா
 

அன்பை பெற அன்னை 
உண்டு முருகா
ஆறுதல் தரவுனக்கு 

தந்தை உண்டு முருகா                  ( முருகா ஆறுபடை)

ஆபத்துக்கு ஓடி வர 
அண்ணன் உண்டு முருகா
எங்களுக்கோ அன்னை 
தந்தை யாரும் இல்லை
 

ஆதரவுக் குன்னை விட்டால் 
எவரும் இல்லை ஆறு குளம் 
கண்ட தில்லை முருகா எங்கள் 
கண்களிலே உள்ளனவே முருகா
 

வேதனையின் வடிவம் 
என்ன முருகா
எம்மை வேதனைக்கா 

விற்று விட்டாய் முருகா              ( முருகாஆறுபடை)

வீர தீரம் செய்ய

வில்லை முருகா  
ஒரு விருந்தினரை 
கண்டதில்லை முருகா
 

வெற்றி வேலன் 
துணை இருந்தால் 
போதும் விதியினையே 
வென்றிடுவோம் நாளும்
 

கனவிலேனும் காட்சி 
கொடு முருகா எம்
கவலை எல்லாம் தீர்ந்து 

விடும் முருகா                        ( முருகாஆறுபடை)

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.