Monday, February 25, 2013

ஒய்யாரமா

ஒய்யாரமா நெஞ்சுக்குள்ளே ஒக்காந்து என்ன பண்ணிற
நெஞ்சு வலிக்கவில்லை நித்திரையும் கொள்ளவில்லை
கும்மிருட்டு வேளையிலும் ஏன் குதிக்கிறே
கொத்தடிமை போல என்னை ஏன் வெருட்டிற                 (ஒய்யாரமா)

கட்டெறும்பு போல என்னை ஏன் கடிக்கிற
கட்டியவன் கோட்டையிலே கூத்தடிக்கிறே 
கரு வண்டு போல கண்ணை ஏன் உருட்டிற
கட்டுப்பட்டு காலடியில் தானே கிடக்கிறேன்                      (ஒய்யாரமா)

சுரிதார் வேண்டாம் கால்சட்டை வேண்டாம்
கண்டுகண்டு  கசந்து போச்சு கண்ணே
கண்டாங்கி சேலை கட்டி வரணும் எனக்கு
கை வளையல் கொஞ்சும் ஓசை கேட்கணும்
அதற்கு கால்கொலுசு மெட்டி மெட்டு  போடணும்
மல்லிப்பூ வாசம் என்னை கமகம என்று இழுக்கணும்  (ஒய்யாரமா)

கனடா முழுவதையும் சுத்தி வந்து பார்க்கணும்
சி .என் டவரில சோழன்போரி கொறிக்கணும் 
சிட்டுப் போல அங்கிருந்து சேர்ந்து நாம பறக்கணும் 
கண் கொள்ளாக் காட்சி என்று கண்டவர்கள் வியக்கணும் 
இது தண்டா ஜோடி என்று மூக்கின் மேல் விரலை வைக்கணும்   
கலை மகளே வந்ததாக எண்ணி நான் 
கண்ணிமைக்க மறந்திடணும்பெண்ணே                             (ஒய்யாரமா)

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.