Saturday, January 26, 2013

உயிரே உயிரே


 

 
 



உயிரே உயிரே ஒரு நாளும் எனை பிரியாதே  
பிரிந்திருந்தால் என்னுயிரோ ஒரு கணம் தரியாதே
எந்தன் உயிர் எந்தனுக்கே சொந்தமில்லை தெரியாதோ  
உன்னுறவு இருக்கும் வரை என்னுயிரும் நிலைபெறுமே ;
(அதனால் உயிரே )
 முதல் இருந்தால் ஒரு முடிவிருக்கும் 
இரவிருந்தால் ஒரு பகல் இருக்கும் 
நீர் இருந்தால் ஒரு நிலம் இருக்கும்  
நீ இருக்கும் வரை தானே உன் நிழலும் இருக்கும் ;
(அதனால் உயிரே)
 நிலவில்லாத இரவா பகலவன் இல்லாத பகலா  
மலர்கள் இல்லாமல் நந்தவனம்மா
மகுடம் இல்லாத மன்னவனா  
வெறுமை தானே நிஜமா நிம்மதி அங்கு வருமா 
(அதனால் உயிரே )
  பார்வை இல்லாத விழிகள் பருவம் இல்லாத வருஷம் 
உணர்வே இல்லாத உடலும் இரக்கம் இல்லாத இதயம்
காற்றே இல்லாத உலகம்  
இருந்தால் என்ன பயனோ நீ இல்லாத வாழ்வில் நானோ
;(அதனால் உயிரே )
 உறவுகள் அனைத்தும் பிரிந்தாலும் 
என் உணர்வுகள் எல்லாம் ஒழிந்தாலும்
உலகம் முழுவதும் அழிந்தாலும் 
உன்னுயிருடன் என் உயிர் கலந்திருக்கும்   
இறுதி வரையில் சேர்ந்திருக்கும் 
இறந்த பின்பும் தொடர்ந்திருக்கும்  
வானில் ஒன்றாய் பறந்திருக்கும்

நம் உறவுகள்  தொடர்கதையே  
நம் உயிருக்கு விதிவிலக்கே 
(அதனால் உயிரே )

2 comments:

  1. //நீ இருக்கும் வரை தானே உன் நிழலும் இருக்கும் ;//
    //உலகம் முழுவதும் அழிந்தாலும்
    உன்னுயிருடன் என் உயிர் கலந்திருக்கும்
    இறுதி வரையில் சேர்ந்திருக்கும்
    இறந்த பின்பும் தொடர்ந்திருக்கும்// அருமை! அருமை!

    சினிமாக்காரங்க யாரும் இதைப் பார்க்கலையா தோழி?

    ReplyDelete
    Replies
    1. இப்போ நீங்கள் மட்டும் தானே பார்த்திருப்பீர்கள் போல் தெரிகிறதது . தோழி மிக்க மகிழ்ச்சி !
      அதனால் சினிமாக் காரங்களும் பார்த்திருக்க மாட்டார்களோ என்னமோ. யார் கண்டா . இல்லையா தோழி. மிக்க நன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.