Tuesday, December 31, 2013

வாரும் சாயி வாரும் சாயி


வாரும் சாயி வாரும் சாயி
வரம் அருள வாரும் சாயி
வள்ளல் ஆக வாரும் சாயி
வளங்கள் நிறைவாய் வழங்கும் சாயி

 
ஒளிரும் ஒளியாய் வாரும் சாயி
இருள் அகல வாரும் சாயி
கள்ளம் இல்லா உள்ளம் தாரும்
கொள்ளும் இன்ப வெள்ளம் எங்கும்

வாரும் சாயி வாரும் சாயி
கருணை கொண்டு வாரும் சாயி
பொன்னும் பொருளும் மின்னும் சாயி
எண்ணம் புனிதம் ஆகும் சாயி

வேம்பின் அடியில் விரும்பி இருப்பார்
வேரின் கசப்பையும் போக்கி வைப்பார்
எண்ணெய் இன்றி ஒளியேற்றி வைப்பார்
நீரில் நின்றே ஒளிர வைப்பார்

உம் பாதம் பற்றும் அடியவரின்
பாவம் போக்கும் சாயி நாமம்
சாயி வழங்கும் துனியின் உதியில்
நோய் நொடிகள் உடனும் விலகும்

சாயி நாமம் சொல்ல சொல்ல 
சர்வமும் வந்து சேரும் எம்மை
ஆதவன் போல் அன்பு செய்ய
இன்பம் நெஞ்சில் ஊறும் சாயி

எடுத்த கருமம் இனிது சிறக்கும்
தடைபட காரியம் தடங்கல் நீங்கும்
வரும் துக்கம் எல்லாம் தூரநிக்கும்
வாரும் சாயி வாரும் சாயி
 

சாயி எம்மதம் என்றாலோ
எம்மதமும் சம்மதம் என்பார்
சாயி அல்லாவா என்றே கேட்டால்
எல்லாம் ஒன்றே என்றே சொல்வார்

வாரும் சாயி வாரும் சாயி
வல்லமை யாவும் தாரும் சாயி
சாயி என்றும் அன்பின் எல்லை-தீனதயாளர்
என்றும் இல்லை என்பது இல்லை

சாயி சரணம் சரணம் சாயி  
ஜெய் சாயி ஜெய ஜெய சாயி

27 comments:

  1. சப்தமாகப் படித்து ரசித்தேன்
    பக்திமணம் கமழும் அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரமணி ஐயா...!
      புத்தம் புதிய புத்தாண்டில் முதல் வருகை அமர்க்களம்.
      நிச்சயமாக எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான். உங்கள் வருகைக்காக தவம் இருக்க வேண்டியே இருக்கிறது இன்று நான் செய்த புண்ணியம்.
      முதலாக வந்து விட்டீர்கள். மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.

      மிக்க நன்றி ஐயா....! தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!

      Delete
  2. //உண்மை வாழ்த்துக்கள் //
    எடுத்த கருமம் இனிது சிறக்கும்
    தடைபட காரியம் தடங்கல் நீங்கும்
    வரும் துக்கம் எல்லாம் தூரநிக்கும்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா.

      உங்கள் வருகையும் கருத்துக்கும் மிக்க நன்றி ....!
      புத்தாண்டில் முதலில் வந்து கருத்து இட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

      தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

      Delete
  3. சாய் அருளால் புத்தாண்டு இனிதாக மலரும்..! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி உங்கள் வருகையில் அகம் மகிழ்ந்தேன்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.......!

      Delete
  4. சாயி என்றும் அன்பின் எல்லை -
    அவரிம் - இல்லை என்பதே இல்லை!..

    எல்லாம் வல்ல இறைவனை வேண்டி - அனைவருக்கும்
    மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே.
      உங்கள் வரவு கண்டு எல்லை இல்லா மகிழ்வு கொண்டேன்.
      மிக்க நன்றி....!

      typing mistake க்காக இருக்குமோ என்று சரியாக தெரியாததனால் (அவரிம் or அவரும்) என்று ஆகையால் தீன தயாளர் என்று மாற்றியுள்ளேன்.குறை நினைக்க வேண்டாம். மிக்க நன்றி....!
      உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!

      Delete
  5. Replies
    1. Thanks,...........! same to you தோழி.....!

      Delete
  6. listen your song here
    https://www.youtube.com/watch?v=btye8_Mwz3
    meenachi paati.
    for placing the song on the blog, pl go to LAYOUT, ADD A WIDGET, LINK, COPY THE ABOVE LINK AND PASTE IT THERE, YOU MAY GIVE THE TITLE OR THE SONG. AND THEN SAVE. THATS ALL.
    FOR FURTHER ASSISTANCE, YOU MAY CONTACT THATHA AT 9840461667

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சுப்பு தாத்தா.
      மிக்க நன்றி ...! பாட்டி வீடியோ not exist என்று வருகிறதே.
      என்னவென்று பாருங்கள் அல்லது நான் தான் ஏதும் பிழையோ தெரியவில்லை பார்க்கலாம்.

      தாத்தா பாட்டி மற்றும் பிள்ளைகள் அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்......!

      Delete
    2. https://www.youtube.com/watch?v=btye8_Mwz3s

      please see in this link.

      subbu thatha.

      Delete
    3. https://www.youtube.com/watch?v=btye8_Mwz3s

      Delete
    4. கேட்டு விட்டேன் தாத்தா அருமையோ அருமை...!
      சாயி அருளால் உள்ளம் பொங்கு இனிய புத்தாண்டு இது தாத்தா. அத்துடன் சிவன் பாடல் நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறன். அதை படலாமா பாருங்கள் தாத்தா. அதையும் சேர்த்து blog ல் இட்டு விடுகிறேன் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. specially பாட்டிக்கு நன்றி சொல்ல வேண்டும் தாத்தா.தங்களுக்கு எவ்வளவு ஒத்துழைப்பு நல்குகிறார் நல்ல பாட்டி.
      இனியா புத்தாண்டில்
      எல்லாமும் பெற்று இன்று
      போல் என்றும்இன்பமாய் வாழ
      வாழ்த்துகிறேன் தாத்தா பாட்டி

      Delete
  7. வணக்கம்
    அம்மா.

    கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் மிக அழகாக இரசித்து படித்தேன். சாயி பெருமையை மிக அருமையாக சொல்லியுள்ளிர்கள்...வரிக்கு வரி... ஒளிரும் படங்கள் மிக அருமை. வாழ்த்துக்கள்.
    ----------------------------------------------------------------------------------------------------------
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன்

      உங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி.....!
      என்றும் இன்பம் பொங்க
      எண்ணமும் எழுத்தும் பொங்க என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!

      Delete
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இனியா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....! சகோதரி
      உங்களுக்கும் என் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

      Delete
  9. தீரும் மனங்களின் தேடல்கள் பேரருளால்
    பாரும் உணரும் பொழுது!

    அற்புத பக்திப் பாமாலை!
    உள்ளத்தில் அமைதியை ஆனந்தத்தைத் தருகிறது தோழி!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பாதையே மாறும் சாயியின் தயவில்
      தரிசனம் கிட்டிட மாயையும் விலகும்
      வல்வினை வென்றிட ஆற்றலும் நல்கும்
      காக்கும் வீழ்ந்திடாமல் விழியினில் நின்று

      மிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....! தோழி

      Delete
  10. கலையாது கவிஞர் வாக்கு
    குலையாது கல்விச் செல்வம்
    கலைவாணி நிலையாய் நாவில்- நின்று
    நவின்றி டுவாள் நயம் பல

    போற்றிப் புகழும்
    குணம் உமக்கு
    கிட்டிடும் மின்னும்
    பொன்னும் புகழும் தினம் உமக்கு.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ........!

    ReplyDelete
  11. இறைபோற்றும் உங்கவியில் இன்புற்றேன் ! மண்ணில்
    மறையாக நிற்கும் மலர்ந்து !

    இனிய கவிதை இனியா அருமை அருமை

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. இரங்குவார் இறைமகனை வேண்டிட
      வையம் போற்றிட அருள்வார் வரம் உவந்து.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....!

      தேரோடும் வீதியெல்லாம் பேரோடு நீ வாழு
      ஊரோடும் உறவோடும் உறவாடி நீ மகிழு
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,,,,!

      Delete
  12. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    தங்கள் கவியில் பக்தி மணம் சொட்ட சொட்ட நிரம்பியிருப்பது கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துகள் சகோதரி.
    சாயி சரணம் சரணம் சாயி
    ஜெய் சாயி ஜெய ஜெய சாயி
    --------
    வழக்கம் போல் எனது தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். இணையப்பக்கம் வருவதில் இப்பொழுது எல்லாம் தாமதம் ஆகிறது (சார் ரொம்ப பிஸி). எனது தளத்தில் இடப்பட்ட பின்னூட்டத்திற்கு கூட நன்றி சொல்லவில்லை என்பதைக் கவனித்திற்பீர்கள். ஆதலால் மன்னிப்பீர்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது எனக்கு. தொடர்ந்து இணைந்திருப்போம் நன்றி சகோதரி.
    ------
    எனது அன்பு சகோதரிக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. சரி சரி பிழைச்சு போப்பா மன்னிச்சிட்டேன்.
    ஐயா ரொம்ப பிஸி என்று தெரிகிறது ஆனால் போட்டி பிஸி யா வீட்டு பிஸி யா என்று தான் தெரியலை.
    தாமதமானாலும் வருகைக்கு மகிழாமலும் இருக்க முடியவில்லை.
    கோபப் படவும் முடியவில்லையே. அன்பு சகோதரி என்று வேற சொல்லி விட்டீர்கள். என்ன செய்வது?

    மிக்க மகிழ்ச்சி அப்பனே...!
    உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் வருங்கால மனைவிக்கும்
    இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  14. சாயி சரணம் சரணம் சாயி
    ஜெய் சாயி ஜெய ஜெய சாயி

    இனிய கானம் ..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.